Jeeva
ஆண்ட்ரியா ஜெரேமியா ஒரு நடிகை மட்டுமல்ல, பாடகி மற்றும் இசையமைப்பாளரும் கூட. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பல பிரபலமான பாடல்களை பாடியுள்ளார்.
எட்டு வயதில் கிளாசிக்கல் பியானோவைக் கற்கத் தொடங்கிய ஆண்ட்ரியா பள்ளி பாடகர் குழு (Choir) பாடகி. 'துப்பாக்கி' படத்தின் "கூகுள் கூகுள்", 'அந்நியன்' படத்தின் "கண்ணும் கண்ணும் நோக்கியா" உட்பட பல ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார் ஆண்ட்ரியா.
சினிமாவில் நுழைவதற்கு முன், ஆண்ட்ரியா மேடை நாடகங்களில் தீவிரமாக ஈடுபட்டார். 'தி மெட்ராஸ் பிளேயர்ஸ்' நாடகக் குழுவின் முக்கியமான ஆர்ட்டிஸ்ட் ஆண்ட்ரியா!
அரக்கோணத்தில் வசித்த ஆங்கிலோ இந்திய குடும்பத்தில் பிறந்தவர் ஆண்ட்ரியா. இவருக்கு தற்போது வயது 38.
2007-ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படம் மூலம்தான் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார் ஆண்ட்ரியா.
'வடசென்னை' படத்தில் காசிமேட்டுப் பெண்ணாகவும், 'தரமணி' நவநாகரீக ஆல்தியா ஜோசப்பாகவும், கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொள்வது ஆண்ட்ரியாவின் பலம்.
ஆண்ட்ரியா விலங்குகளின் மீது தனிப்பிரியம் கொண்டவர். விலங்குகளின் உரிமைகள் மற்றும் நலனுக்கான பல்வேறு பிரசாரங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறவர்.