Puviyarasan Perumal
1000 மாணவர்களுக்கு மேல் படிக்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் ரூ.42 கோடி செலவில் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் புதிதாக அமைக்கப்படும்.
15.43 கோடி ரூபாய் செலவில் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் 38 மாவட்டங்களில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரோபோட்டிக் ஆய்வகம் அமைக்கப்படும்.
6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் செயற்கைநுண்ணறிவு திறன் கல்வி சொள்ளித்தரப்படும்.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவிகள் இடையூறின்றி தொடர்ந்து பள்ளிக்கு வருகை தருவதற்கு 'அகல்விளக்கு திட்டம்' 50 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
6 கோடி செலவில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று நாட்டின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்றுக்கொள்ளும்.
2 கோடியே 32 லட்சம் செலவில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி வழங்கப்படும்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.80.24 லட்சம் செலவில் சிறார் அறிவியல் பூங்கா அமைக்கப்படும்.
2 கோடி ரூபாய் செலவில் தமிழ் இலக்கியம், தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பண்பாட்டை எடுத்துக்காட்டும் நூல்களை ஆங்கிலம் மற்றும் தென்னிந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதற்காக செயல்படுத்தப்பட்டு "திசைதோறும் திராவிடம்" என்ற திட்டத்தின்கீழ் இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
1.14 லட்சம் செலவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக செயல்படும் வாசகர்களை ஊக்குவிக்க சொந்த நூலகங்களுக்கான விருது வழங்கப்படும்.