சிவா
கண்ணீர் மயமான பாக்யா வீடு!
ஈஸ்வரி சாப்பிடாமல் கண்ணீர் விட்டு அழுதபடியே இருக்க இனியா ‘’பாட்டி எனக்கு தாத்தா அம்மா மாதிரியெல்லாம் பேச தெரியாது.. ஆனா நீங்க ரொம்ப நல்லவங்க… நீங்க அழுதா எனக்கும் அழுக வருது’’ என அழுகிறாள்.
கோபியை வெறுக்கும் ராதிகா!
ராதிகா கோபியிடம் ‘’நீங்களும் உங்க குடும்பமும் சேர்ந்து என் குழந்தையை கொன்னுட்டீங்க இப்ப உங்களுக்கு சந்தோஷமா’’ என்று கோபப்பட்டு கோபியை கண்டபடி திட்டுகிறாள்.
ராதிகா வீட்டுக்கு வரும் பாக்கியா!
ஈஸ்வரிக்காக நியாயம் கேட்க ராதிகாவின் வீட்டுக்கு வருகிறாள் பாக்கியா. ‘’இதுக்கு முன்னாடிதான் உன் மாமியாரை பார்க்க வர சாக்குல வந்து நடக்கிறதை வேவு பார்த்த... இப்போ உனக்கு என்ன வேலை’’ என்று சொல்லி திட்டி கமலா கதவை சாத்த பாக்கியா தடாலடியாக வீட்டுக்குள் நுழைகிறாள்.
ராதிகாவை விசாரிக்கும் பாக்கியா
‘’இந்த விஷயம் உங்களுக்கு நடந்ததைக்கேட்கும்போது ரொம்ப கஷ்டமா தான் இருந்தது… ஆனா அதுக்காக அத்தை இப்படி பண்ணுவாங்கன்னு நினைக்காதீங்க’’ என்று சொல்ல ராதிகா பாக்கியாவைத் திட்டி வெளியே அனுப்புகிறாள்.
கோபியை கேள்விகேட்ட பாக்கியா!
பாக்கியா வீட்டை விட்டு வெளியே வர கோபி எதிரில் வருகிறான். ‘’உங்க அம்மாவ பத்தி எல்லாரும் என்ன வேணா சொல்லலாம்… ஆனா, உங்களுக்கு அவங்கள பத்தி தெரியாதா? உங்க அம்மாவ பாத்து கொலைகாரின்னு சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்தது’’ என்று திட்டிவிட்டுச் செல்கிறாள் பாக்யா.
ஈஸ்வரிக்கு ஆறுதல்!
பாக்கியா ஈஸ்வரியை இரண்டு நாளைக்கு வெளியே கூட்டிக்கொண்டு போகலாம் என்று முடிவு எடுக்கிறாள். ‘’ரொம்ப நாளா கும்பகோணம் பக்கத்துல இருக்க கோவிலுக்கு போகணும்னு சொல்லிட்டு இருந்தாங்க… அதனால அவங்கள கோவிலுக்கு கூட்டிட்டு போகப்போறேன்'’ என்று செல்வியிடம் சொல்கிறாள்.