‘’சினிமாவும் அரசியல் போல மாறிவிட்டது… என்னுடைய தோல்வியை கொண்டாடுகிறார்கள்'’ - அக்ஷய் குமார்
Sarfira படத்துக்கு அதிக அளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழில் ஓடிடி வெற்றியாகக் கொண்டாடப்பட்ட 'சூரரைப் போற்று' படத்தின் ரீமேக்தான் Sarfira. அப்படியிருந்துமே படம் தோல்விப்படமாக மாறியிருப்பதில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சூர்யா முதல் இயக்குநர் சுதா கொங்கரா வரை அனைவருமே அப்செட்.
இந்நிலையில் தனது படங்களின் வெற்றித் தோல்விகளைப் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார் அக்ஷய் குமார். ‘’என்னைப் பற்றி வதந்திகளைப் பரப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். என்னுடைய படங்களின் தோல்வியை வெடிவெடித்துக்கொண்டாடுகிறார்கள்.
இவர்கள் யார் என்றெல்லாம் நான் சொல்லப்போவதில்லை. ஆனால் இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் எனப் புரியவில்லை. சினிமாவும் அரசியல்போல ஆகிவிட்டது. அரசியலில்தான் எதிர்கட்சி, ஆளும் கட்சி என அடித்துக்கொள்வார்கள். ஒருவர் மீது ஒருவர் அவதூறு பேசுவார்கள். ஆனால், சினிமாவிலும் இப்போது அதே விஷயம் நடக்கிறது. நான் அர்ப்பணிப்போடு என் படங்களில் நடிப்பதில்லை என விஷமத்தனமான பிரசாரம் செய்கிறார்கள். ஒரே ஆண்டில் 17 படங்களில் நடித்தவன் நான். ஓய்வின்றி உழைப்பவன் நான். இவர்களுக்கு நான் கொடுக்கும் பதில் என்பது தொடர்ந்து உழைத்துகொண்டே, வேலை செய்துகொண்டே இருப்பதுதான்’’ எனப் பேசியிருக்கிறார் அக்ஷய் குமார்