லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷின் கேப்டன் மில்லர்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கினார். இதில், பிரியங்கா மோகன், சிவா ராஜ்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்தார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக சரிவை சந்தித்தது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் இருந்ததால் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையில்லை.
இந்நிலையில் லண்டனில் நடைப்பெற்ற சர்வதேச திரைப்பட விருது விழாவில், சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃப்லிம்ஸ் கடந்த மாதம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், லண்டனில் நடைபெற்ற 10-வது சர்வதேச திரைப்பட விருது விழாவில், சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் "கேப்டன் மில்லர்" திரைப்படம் விருதை வென்றிருக்கிறது.
கேப்டன் மில்லர் படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்தான் அடுத்து தனுஷ் நடிக்கும் 'இளையராஜா' படத்தின் இயக்குநர்.