ஆர்ம்ஸ்ட்ராங் கொலை : கதறியழுத இயக்குநர் பா.இரஞ்சித்…உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரிக்கை!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், இன்று மாலை சுமார் 7 மணியளவில் தனது ஆதரவாளர்களுடன் வீட்டு வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வெட்டி சாய்த்திருக்கிறது. உடனடியாக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சென்னை அப்போலோ மருத்துமனைக்கு விரைந்து வந்த சினிமா இயக்குனர் பா.இரஞ்சித் மருத்துவமனை வளாகத்தில் துக்கம் தாங்காமல் கதறி அழுதார். இதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்து கட்சியின் தொண்டர்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
பா.இரஞ்சித் தொடர்ந்து தனது கூட்டங்களில் ஆர்ம்ஸ்ட்ராங் பற்றி பேசிவந்திருக்கிறார். தலித் மாணவர்களை சட்டம் படிக்கத்தூண்டியதோடு, அவர்கள் தடையின்றி தொடர்ந்து படிக்க உதவிகள் செய்தவர் ஆர்ம்ஸ்ட்ராங் எனக் குறிப்பிட்டிருக்கிறார் பா.இரஞ்சித். உண்மைக் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார் பா.இரஞ்சித்.