‘’புத்தகத்தாலும், நல்ல ஆசிரியராலும் உருவானவர் மாரி செல்வராஜ்'’ - ‘வாழை’ விழாவில் பா.இரஞ்சித்!
இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘வாழை’. டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக உருவாக்கப்பட்ட இப்படம் இப்போது திரையரங்கில் முதலில் வெளியாகயிருக்கிறது. படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. 'வாழை' படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவத்தின் ஒரு அத்தியாயமாக இந்தப்படம் உருவாகியிருக்கிறது.
‘வாழை’ படத்தில் சந்தோஷ் நாராயணன் இசைமைக்க அவரது மகள் தீ பாடிய ‘தென்கிழக்கு தேன்சிட்டு' பாடலின் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் பேசிய பா. இரஞ்சித் சின்ன பட்ஜெட் படங்களை OTT, டிவி சேனல்களுக்கு விற்பனை செய்வதில் இருக்கும் பிரச்சனைகளையும், மாரி செல்வராஜின் வளர்ச்சி குறித்தும் பேசினார். அவரது முழுமையான பேச்சை இந்த வீடியோவில் காணலாம்.