ப்ராசஸ் செய்யப்படும் வெள்ளை உணவுகளான மைதா, வெள்ளை அரிசி உள்ளிட்டவற்றில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இது ரத்தத்தில் சர்க்கரையின் சம நிலையை பாதிக்கிறது. எனவே, இத்தகைய வெள்ளை உணவுகளைத் தவிர்ப்பது சர்க்கரை சமநிலையை மீட்டெடுக்க உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஊட்டச்சத்துக்கள் இல்லாதது... கிளைசெமிக் இன்டெக்ஸ் அதிக அளவில் உள்ளது மைதா. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கச் செய்யும். செரிமானக் குறைபாட்டை ஏற்படுத்தும். மலச்சிக்கல் பிரச்னையை ஏற்படுத்தும். அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே, இது உடலில் கொழுப்பாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படும். இதன் காரணமாக உடல் பருமன், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் வரலாம்.
அதிக க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவு வெள்ளை ரொட்டி. இது உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவை மிக அதிக அளவில் உயர்த்திவிடுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். இதில் நார்ச்சத்து இல்லை. எனவே, ரத்த அழுத்தம் அதிகரிக்க, உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கிறது.
வெள்ளை ரொட்டியைப் போலவே வெள்ளை அரிசியும் ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்யும். அரிசியை பாலிஷ் செய்யும் போது அதில் உள்ள சத்துக்கள் எல்லாம் நீக்கப்படுகிறது. கடைசியில் கார்போஹைட்ரேட் மட்டும்தான் மிஞ்சுகிறது. இதற்கு பதில் பட்டை தீட்டப்படாத பழுப்பு, பிரவுன் நிறத்தில் இருக்கும் அரிசியைப் பயன்படுத்தி வந்தால் ரத்தத்தில் சர்க்கரை கலக்கும் விகிதம் குறைவாக இருக்கும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடும்.
உருளைக் கிழக்கு இயற்கை உணவாக இருந்தாலும் அதில் அதிக அளவில் மாவுச் சத்து உள்ளது. இதுவும் ரத்தத்தில் விரைவாக சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்னை இருப்பவர்கள் இதை எடுக்கும்போது நாளடைவில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பல்வேறு பதப்படுத்துதல் நிலைகளைக் கடந்துதான் வெள்ளை சர்க்கரை வருகிறது. இதுவும் விரைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. அதற்கு பதில் தேன் போன்றவற்றை சிறிதளவு பயன்படுத்தலாம். மற்றவர்களும் அளவான முறையில் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை மட்டுமின்றி சர்க்கரை அதிக அளவில் சேர்க்கப்படும் குளிர்பானங்கள், ஜூஸ், கேக் உள்ளிட்ட பேக்கரி உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
உப்பில்லா உணவு குப்பையிலே என்பார்கள்... உணவுக்கு சுவையைத் தருவது உப்புதான். அதற்காக அளவக்கு அதிகமாக உப்பு சேர்க்கும் போது அது பாதிப்பை ஏற்படுத்தும். சிலர் ராக் ல்ட் பயன்படுத்தினால் நல்லது என்று நினைப்பார்கள். எல்லா உப்பும் கெடுதல்தான். உப்பு ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். அதிகப்படியான உப்பு எலும்பில் உள்ள கால்சியத்தை வெளியேற்றி எலும்பின் வலிமையைக் குறைக்கும். அப்பளம், ஊறுகாய், சாஸ், சிப்ஸ், உப்பு பிஸ்கட், சீஸ் போன்ற உப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது!