ஆர்ம்ஸ்ட்ராங் கொலை : பொது அஞ்சலிக்கு அனுமதி கேட்கும் ஆதரவாளர்கள்… மறுக்கும் தமிழக அரசு!
நேற்றிரவு கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆர்ம்ஸ்ராங்கின் உடல் தற்போது அரசு பொது மருத்துவமனையில் எம்பாமிங் செய்யப்பட்டு வருகிறது.
நாளை இறுதி மரியாதைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கலந்துகொள்ள இருக்கிறார். இந்நிலையில் ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவகையில் பொது அஞ்சலிக்கு அனுமதி கேட்டுவருகிறார்கள் ஆர்ம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள். ஆனால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என தமிழக அரசு அனுமதி மறுத்து வருகிறது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை நீடித்துவருகிறது.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ‘’ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று இரவு சரணடைந்தவர்கள்தான் உண்மையிலேயே குற்றவாளிகளா எனத்தீவிரமாக விசாரிக்கவேண்டும். இந்தக் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்'’ எனப்பேசியிருக்கிறார்.