பாரிஸின் முக்கிய ரயில் பாதைகளில் தீவைப்பு… ஒலிம்பிக் தொடக்கவிழா திட்டமிட்டபடி தொடங்குமா?!
ஒலிம்பிக் தொடக்க விழா இன்னும் சற்று நேரத்தில் (இந்திய நேரம் இரவு 11) மணிக்குத் தொடங்கும் நிலையில் இன்று காலை பாரிஸின் முக்கிய ரயில் பாதைகள் திட்டமிடப்பட்ட தாக்குதலால் தீவைத்துகொளுத்தப்பட்டிருக்கிறது.
ரயில் பாதைகள் சேதப்படுத்தப்பட்டதால் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக ஸ்டேடியத்தில் இல்லாமல் நகரின் மையப்படுதியான செய்ன் ஆற்றையொட்டிய பகுதியில் நடைபெறும் நிலையில் இந்த ரயில் பாதை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இதனால் பார்வையளர்கள் பலரும் திட்டமிட்டபடி ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியைக் காண வரமுடியாத சூழல் உருவாகியிருக்கிறது.
ரயில் பாதைத் தாக்குதலால் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா நிகழ்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை. போட்டிகள் திட்டமிட்டபடி பிரமாண்ட விழா மூலமாகத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செயின் ஆற்றில் கிட்டத்தட்ட 6 கிமீட்டர் தூரம் 100 படகுகளில் 10 ஆயிரம் வீரர் வீராங்கனைகளை பயணித்து ஒலிம்பிக் தொடக்க விழா பேரணியில் பங்கேற்க இருக்கிறார்கள். இந்தியாவின் சார்பில் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலும் இந்திய கொடியை ஏந்தி தலைமை தாங்க இருக்கின்றனர்.