ஆர்ம்ஸ்ட்ராங் கொலை: உணவு டெலிவரி ஆட்கள் வேடத்தில் வந்த கொலையாளிகள்…கையில் வெடிகுண்டு, வெட்டுக்கத்தி!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் சென்னையில் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆன்லைன் உணவு டெலிவரி ஆட்களைப் போல வேடம் அணிந்து பைக்குகளில் வந்த 6 கொலையாளிகள் வெட்டுக்கத்திகளோடு, வெடிகுண்டுகளையும் கொண்டுவந்திருக்கிறார்கள். ஆர்ம்ஸ்ட்ராங்கை வெட்டிக்கொன்றபின் வெடிகுண்டுகளையும், கத்திகளையும் அங்கேயே விட்டுச்சென்றிருக்கின்றனர்.
ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஆர்ம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார் பழனிசாமி.
5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறது சென்னை மாநகரக் காவல்துறை!