ஏர் இந்தியா நேர்முகத்தேர்வுக்கு ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர்கள்... குழப்பமும், நெருக்கடியும்!
ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் 2,216 காலியிடங்களுக்கான வாக்-இன் நேர்காணல்களை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது. பல்வேறு பழுது மற்றும் பராமரிப்புப் பணிகளைச் செய்யும் நபர் மற்றும் பயன்பாட்டு முகவர்களுக்கான பணியிடங்களைத் நிரப்புவதற்காக இந்த நேர்காணல் திட்டமிடப்பட்டது. இந்நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அலுவலகத்தின் முன் குவிந்ததால் கூட்ட நெரிசல் எற்பட்டு பரபரப்பு உண்டானது.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணற, அனைவரின் Resume-களையும் கொடுக்குமாறு கூறியதுடன், தகுதியுள்ளவர்களை நேர்முக தேர்வுக்கு அழைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். வேலையின்மையால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தற்போது தொடர்கதையாகியுள்ளது
சமூக வலைதளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் வீடியோக்கள் ஆயிரக்கணக்கான மக்கள் நேர்காணல் மையத்தை நோக்கி விரைவதைக் காட்டுகின்றன. சிலர் வாகனங்கள் மற்றும் மரங்களில் ஏறி மையத்திற்கு செல்வதையும் பார்க்கமுடிகிறது.
நெரிசலுக்கு மத்தியில், சூழ்நிலையைத் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போலீஸ்காரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.