செய்திகள்
ஆம்ஸ்ட்ராங் கொலை : ரூட் போட்ட ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிக்க முயன்றதாக மாதவரத்தில் வைத்து என்கவுன்ட்டர் செய்திருக்கிறது சென்னை போலீஸ்!
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை(5, ஜூலை) ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டார் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவரது கொலைக்கு காரணமாக இருந்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவனான ரவுடி திருவேங்கடத்தை மாதவரத்தில் வைத்து போலீஸ் என்கவுன்டர் செய்து சுட்டிக்கொன்றிருக்கிறது.
ஆட்டோ டிரைவர் போல நடித்து ஆம்ஸ்ட்ராங்கின் நடவடிக்கைகளை ஒரு மாதமாக கண்காணித்து அவரைக்கொலை செய்ய ரூட் போட்டவன் திருவேங்கடம். போலிஸ் காவலில் இருந்த இவனை தப்பிக்க முயன்றதாகச் சொல்லி மாதவரத்தில் வைத்து போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.