''ஜாஃபர் சாதிக்கின் மனைவியிடம் இருந்து 1 கோடி ரூபாய் வாங்கினேனா?'' - இயக்குநர் அமீர் விளக்கம்!
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜாஃபர் சாதிக்கின் மனைவி ஆமினாவின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் இயக்குனர் அமீரின் வங்கிக் கணக்கிற்கு வந்ததாக நேற்று செய்திகள் வெளியாகின. இதில் துளியும் உண்மை இல்லை என்பதை அறிக்கையின் மூலமகா மறுத்திருக்கிறார் இயக்குநர் அமீர்.
‘’ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்க வேண்டிய ஊடகங்கள் வெறும் பரபரப்பிற்காக என்னைப் போன்றவர்களைப் பற்றி தவறான தகவல்களை செய்தியாக வெளியிடுவதால் மக்களிடையே நன் மதிப்பையும், நம்பகத்தன்மையையும் இழக்க நேரிடும்.
இந்த வழக்கின் துவக்கத்திலிருந்தே NCB மற்றும் அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறேன். அப்படி இருக்கையில் என்னைப் பற்றி சில முக்கிய செய்தி தொலைக்காட்சி ஊடகங்களும், சில சமூக வலைதள ஊடகங்களும் தவறான தகவல்களையே தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரித்து எப்படியாவது இந்த வழக்கில் என்னைச் சேர்த்துக் கைது செய்து விட வேண்டும் என்று விரும்புவது ஏன்? நான் எந்த விதமான சட்டவிரோத செயல்களிலோ, சட்டவிரோத பண பரிவர்த்தனையிலோ ஒரு போதும் ஈடுபட்டதில்ல'’ என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார் அமீர்.