Bhole Baba மத கூட்டம்...உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் 100-க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் பலி!
உத்தரப்பிரதேசத்தில் போலே பாபா மற்றும் அவரது மனைவி கடந்த பல ஆண்டுகளாக மத பிரசாரக் கூட்டம் நடத்திவருகிறார்கள். இந்த பாபாவின் இயற்பெயர் நாராயண் சாகர் ஹரி. இவர்கள் இன்று மதியம் ஹத்ராஸ் மாவட்டத்தில் Fullerai எனும் பகுதியில் நடந்த கூட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.
கூட்டம் முடிந்து மக்கள் திரும்பிப்போக ஆரம்பித்தபோது அங்கிருந்த பள்ளத்தில் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்தபோதுதான் நெரிசலாக ஆரம்பித்தது என்கிறார்கள். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகிறது.
இறந்தவர்களில் பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் இருப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்களோடும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகிறது.
கூட்டத்துக்கு முறைப்படி அனுமதி கொடுக்கப்பட்டிருந்ததாகவும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததாகவும் உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.