இந்தியாவில் முதல்முறை... பெண்ணாக இருந்து ஆணாக மாறிய முதல் ஐஆர்எஸ் அதிகாரியின் மாற்றம் அங்கீகரிப்பு!
ஹைதராபாத்தில் இந்தியன் ரிவென்யூ சர்வீஸில் இணை ஆணையராக பண்யாற்றிவரும் 35 வயதான எம்.அனுசுயா தன் பாலினத்தை ஆண் என்றும், பெயரை அனுகதிர் என்றும் மாற்றம் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவரின் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது நிதியமைச்சகம்.
எம்.அனுசுயா என்ற பெயர் எம்.அனுகதிர் என மாற்றப்பட்டு, பெண் பாலினத்தில் இருந்து ஆணாக மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்திய குடிமைப் பணிகளில் இதுபோன்று நடப்பது வரலாறு காணாத நிகழ்வாகும்.
யார் இந்த அனுகதிர்?
அனுசுயாவாக சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர், 2023-ல் போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவனம் பல்கலைக்கழகத்தில் சைபர் லா மற்றும் சைபர் தடயவியல் துறையில் பிஜி டிப்ளமோ முடித்திருக்கிறார்.
2013-ல் சென்னையில் உதவி ஆணையராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் பின்னர் 2018-ல் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார். அவர் கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டு தனது தற்போதைய பதவியில் பணியாற்றி வருகிறார்.
எம்.அனுசுயா என்ற பெயர் எம்.அனுகதிர் என மாற்றப்பட்டு, பெண் பாலினத்தில் இருந்து ஆணாக மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்திய குடிமைப் பணிகளில் இதுபோன்று நடப்பது வரலாறு காணாத நிகழ்வாகும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் தனது பெயரையும் பாலினத்தையும் மாற்றிக்கொள்ள இந்திய வருவாய் சேவை அதிகாரியின் கோரிக்கையை நிதி அமைச்சகம் அனுமதித்துள்ளது. இந்திய சிவில் சர்வீசஸில் இதுவே முதல் முறை ஆகும்.
அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் இவர் 'மிஸ்டர் எம் அனுகதிர் சூர்யா' என்று அங்கீகரிக்கப்படுவார்.