செய்திகள்
கள்ளக்குறிச்சியில் விஜய்… பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!
நடிகர் விஜய் இன்று காலை தமிழக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், மாலை கள்ளக்குறிச்சிக்கு நேரிலேயே சென்று பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களது உறவினர்களையும் சந்தித்தார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42-ஐ தாண்டிவிட்டது. நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தவிவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் நடிகர் விஜய் பாதிக்கப்பட்ட பகுதிக்கு இன்று மாலை சென்றார்.
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த விஜய்யை பொதுமக்கள் சூழ்ந்துகொண்டனர். பெண்கள் கதறியழுது தங்களுடைய துயரத்தை அவரிடம் பகிர்ந்துகொண்டனர். இதில் ஒரு பெண் விஜய்யின் காலில் விழுந்து ''காப்பாத்து தலைவா'' அழுதது குறிப்பிடத்தக்கது.
சிகிச்சையளித்துவரும் மருத்துவர்களும் நடிகரும், தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விவரித்தனர்.