பாராளுமன்றத்துக்குள் நுழையும் முன் பெண் பத்திரிகையாளரை சந்தித்து ஹலோ சொன்ன ராகுல் காந்தி… யார், ஏன்?
தலைவர் பொறுப்பேற்ற பின் இன்று காலை சபாநாயகர் தேர்தலுக்காக பாராளுமன்றத்துக்குள் நுழையும் முன் பத்திரிகையாளர்கள் ராகுல் காந்தியை சூழ்ந்துகொண்டு அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். அப்போது பத்திரிகையாளர்களிடையே இருந்த பெண் பத்திரிகையாளரான மவுசமி சிங்கிடம் ஹலோ சொன்ன ராகுல் காந்தி அவரிடம் நலம் விசாரித்தார். அவர் ராகுலின் அன்புக்கு நன்றி சொல்ல, பத்திரிகையாளர்கள் ராகுல் காந்தியின் இந்தச்செயலைப் பாராட்டினர்.
மவுசமி சிங் பிரல ஆங்கில ஊடகத்தின் செய்தியாளர். தேர்தலுக்குப்பின் ராகுல் காந்தி நடத்திய ‘பங்குச்சந்தை மோசடி' பத்திரிகையாளர் சந்திப்பின்போது மவுசமி பாஜக சார்பாகக் கேள்விகேட்கிறார் எனக் கடிந்துகொண்டார் ராகுல் காந்தி. அது பத்திரிகையாளர்களிடையே சலசலப்பை உண்டாக்கியது. ராகுல் காந்திக்கு எதிராக கண்டனங்களையும் மூத்த பத்திரிகையாளர்கள் பதிவு செய்தனர்.
இந்தநிலையில்தான் மவுசமியிடம் நலம் விசாரித்து நட்பு பாராட்டியிருக்கிறார் ராகுல் காந்தி!