இரண்டாவது 15 நிமிட ஆட்டத்தில் கோல் அடித்து முன்னிலையில் இருந்த இந்திய அணி, மூன்றாவது 15 நிமிட ஆட்டத்தில் கோட்டைவிட்டது. பெல்ஜியம் இந்த 15 நிமிடத்தில் அடுத்டுத்து கோல்கள் அடித்து 2-1 என முன்னிலைப்பெற, இந்தியாவால் கடைசி 15 நிமிடத்தில் ஈக்குவலைசர் கோல் அடிக்கமுடியவில்லை. பெனால்ட்டி கார்னர் வாய்ப்பைகளை தவறவிட்டதே இந்தியாவின் இந்தத் தோல்விக்கு மிக முக்கியக் காரணம்!