பெண்கள் சிங்கிள்ஸ் ரவுண்ட் ஆஃப் 64 சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, பிரிட்டனின் அன்னா ஹர்ஸியை எதிர்கொண்டார். டாமினிட்டேங் ஆட்டமுறையை பின்பற்றிய மணிகா பத்ரா 4-1 என்கிற செட் கணக்கில் பிரிட்டன் வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழாவில் இந்தியாவின் தேசியகொடியை ஏந்திவந்தவரும், பதக்கம் வெல்வார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டவருமான சரத் கமல் இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தார். டெனி கோசுல் எனும் ஸ்லோவேனிய வீரரை எதிர்கொண்ட சரத் கமல் 4-2 என்கிற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
இந்தியாவின் ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயதான ஶ்ரீஜா அகுலா ஸ்வீடன் வீராங்கணையான கிறிஸ்டினா கால்பெர்க்குடன் மோதினார். இதில் ஶ்ரீஜா 4-0 என்கிற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
முதல்நாளில் வெற்றிபெற்ற ஹர்மித் தேசாய் நேற்று ரவுண்ட் ஆஃப் 64 இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தார். பிரான்சின் ஃபெலிக்ஸ் லெப்ரானுடன் மோதிய ஹர்மித் 4-0 என நேர்செட்களில் வீழ்ந்தார்.
துப்பாக்கி சுடுதல் போட்டியில் 0.1 புள்ளி வித்தியாசத்தில் மூன்றாவது இடத்துக்குப்பின் தங்கி வெண்கலம் வென்றார் மனு பாக்கர். இரண்டாவது நாளிலேயே இந்தியாவுக்குப் பதக்கம் வாங்கித்தந்து பெருமைதேடித்தந்திருக்கிறார் 22 வயதான மனு பாக்கர்.
இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் லீக் சுற்றில், ஜெர்மனியின் ஃபேபியன் ராத்தை எதிர்கொண்டார். இதில் பிரனாய் 21-18, 21-12 என நேர்செட்டில் ஜெர்மனி வீரரை வீழ்த்தினார்.
வில்வித்தை போட்டியின் காலிறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. இதில் நெதர்லாந்து மகளிர் அணியை எதிர்த்து விளையாடிய தீபிகா குமாரி, பஜன் கவுர்,அங்கிதா பகத் தோல்வியைத் தழுவி அரையிறுதி வாய்ப்பை இழந்தனர்.
டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வியடைந்தார். களிமண் தரையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரான்ஸின் கோரெண்டின் மௌடெட்டிடம் 6-2, 2-6, 7-5 என தோல்வியடைந்தார் நாகல்.
நீச்சல் போட்டியில் இந்தியாவின் 14 வயது இளம் வீராங்கனையான தினிதி தேசிங்கு ஆச்சர்யப்படுதினார். பெண்கள் 200மீட்டர் ஹீட்ஸ் போட்டியில் கலந்துகொண்ட அவர் தனது பிரிவில் 2 நிமிடம் 6 நொடி 96 மைக்ரோ விநாடிகளில் நீந்தி முதலிடம் பிடித்து வியப்பூட்டினார். ஆனால், 30 பேர் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதிபெற முடியும் என்கிற நிலையில் மற்ற ஹீட்ஸ் பிரிவுகளில் கலந்துகொண்டவர்கள் தினிதியைவிட குறைந்த வேகத்தில் 200மீட்டர்ஸை நீந்திக்கடந்திருந்ததால் தினிதி அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறினார். அதேப்போல் ஶரீஹரி நடராஜும் ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறினார்.
50 கிலோ எடைப்பிரிவில் ரவுண்ட ஆஃப் 32 சுற்றில் இந்தியாவின் நிகத் ஜரீன் ஜெர்மனியின் மாக்ஸி க்ளோட்சர் எனும் வீராங்கனையுடன் மோதினார். இதில் நிகத் ஜரீன் 5-0 என்கிற புள்ளிக்கணக்கில் ஜெர்மனி வீராங்கனையைத் தோற்கடித்து ரவுண்ட் ஆஃப் 16 போட்டிக்குத் தகுதிபெற்றார்.
ஹாட்ரிக் பதக்கம் வென்றுதர காத்திருக்கும் பி.வி.சிந்து லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் மாலத்தீவின் ஃபாத்திமத் அப்துல் ரசாக்கை 21- 9, 21-6 என நேர்செட்களில் தோற்கடித்தார்.
படகோட்டத்தில் சிங்கிள் ஸ்கல் ரோயிங் பிரிவில் பல்ராஜ் பன்வார் வெற்றிபெற்று காலிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளார்.