166 ரன்கள் என்கிற இந்தியாவின் டார்கெட்டை வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 8 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் முடித்துவிட்டது இலங்கை. இந்திய அணியின் பெளலர்களால் இலங்கையின் பேட்ஸ்மேன்களை வீழ்த்தமுடியாமல் போனதே தோல்விக்கு காரணம். கேப்டன் சமாரி அட்டப்பட்டு 43 பந்துகளில் 61 ரன்கள் அடிக்க, ஷர்ஷிதா சமரவிக்ரமா 51 பந்துகளில் 69 ரன்கள் அடித்து இலங்கையை சாம்பியனாக்கியிருக்கிறார்கள்.