டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பெளலிங்கைத் தேர்ந்தெடுக்க இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
ஓவர் 1 & 2 - இந்தியா 11-0 (ரோஹித் 5, விராட் 1) இங்கிலாந்து ரீஸ் டாப்லி, ஜோஃப்ரா ஆர்ச்சர் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து பெளலிங் அட்டாக்கைத் தொடங்கியிருக்கிறது. ரோஹித் இரண்டு பவுண்டரிகளை அடிக்க இரண்டு ஓவர்களில் 11 ரன்கள் எடுத்திருக்கிறது இந்தியா. கோலி 1 ரன்னில் இருக்கிறார். பெரிய ஷாட் அடிக்கமுயன்றும் கோலியால் சரியாக டைம் செய்ய முடியவில்லை.
டாப்லியின் பந்தில் டீப் மிட் விக்கெட்டுக்கு மேல் கோலி ஒரு பெரிய சிக்ஸரை அடித்தார். சிக்ஸருக்கு அடுத்த இரண்டு பந்துகளிலேயே பழிவாங்கினார் டாப்லி. ஃபார்முக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பன்ட் களத்தில் இறங்க, ரோஹித் தன்னுடைய வழக்கமான அட்டாக்கிங் ஆட்டத்தை ஆடிவருகிறார்.
ஓவர் 4 - இந்தியா 29-1 (ரோஹித் - 16, பன்ட் - 2)
ரோஹித் பெரிய ஷாட்கள் அடிக்கமுயன்றும் பந்து பறக்கமறுக்கிறது. பவுண்டரிகள் அடிக்கமுடியாமல் திணறிவருகிறது இந்தியா.
ரீஸ் டாப்லியின் ஐந்தாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து தான் யார் என்பதை நிரூபித்திருக்கிறார் ரோஹித்.
ரிஷப் பன்ட் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். சாம் கரணின் பந்தை பவுண்டரிக்கு அடிக்கமுயன்று கேட்ச் கொடுத்தார் பன்ட்.
பவர்ப்ளே ஓவர்களின் முடிவில் கோலி, பன்ட் என இரண்டு முக்கியமான விக்கெட்களை இழந்து விளையாடிவருகிறது இந்தியா.
பவர்ப்ளே முடிந்தவுடனே லெக் ஸ்பின்னரான ஆதில் ரஷீதைக் கொண்டுவந்தார் பட்லர். ஆனால், ரோஹித் ஷர்மா ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் என பவுண்டரிகள் அடித்துவருகிறார். இந்தியா 50 ரன்களைக் கடந்தது.
ஆதில் ரஷீத்தின் முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகள் அடித்து ஸ்பின்னுக்கு அச்சம் இல்லை என உணர்த்தியிருக்கிறார் ரோஹித். சூர்யகுமார் நிதானமான ஆட்டம் ஆடிவருகிறார்.
ரிவர்ஸ் ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட்டான கிறிஸ் ஜோர்டனை எட்டாவது ஓவர் வீசக் கொண்டுவந்திருக்கிறார் கேப்டன் ஜோஸ் பட்லர். ஃபைன் லெக்கில் சூப்பர் சிக்ஸர் அடித்து ஜோர்டனுக்கு வெல்கம் பொக்கே கொடுத்திருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.
ஓவர் 8 - இந்தியா 65-2 (ரோஹித் - 37, சூர்யகுமார் - 13)
8 ஓவர்கள் முடிவில் இந்தியா 65 ரன்களைத் தொட்டிருக்கிறது இந்தியா. மழைக்காரணமாக இப்போது ஆட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது.
மழையால் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டால் இந்தியா இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுவிடும். சூப்பர் 8 போட்டிகளில் எல்லா போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்றிருந்ததால் இங்கிலாந்தைவிட அதிகப் புள்ளிகள் பெற்ற காரணத்தால் இந்தியா இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுவிடும்.
கயானாவில் போட்டி நடைபெறும் பிராவிடன்ஸ் பகுதியில் மழை நின்றுவிட்டது. இன்னும் 15 நிமிடங்களில் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓவர்கள் குறைக்கப்படலாம்!
இந்திய அணியின் கேப்டனாக டி20 போட்டிகளில் 5000 ரன்களைக் கடந்திருக்கிறார் ரோஹித் ஷர்மா!
மழை நின்றுவிட்டதால் போட்டி மீண்டும் 11.10 மணிக்குத் தொடங்குகிறது. ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.
போட்டி மீண்டும் ஆரம்பமாகிறது. நடுவர்கள், இந்திய பேட்ஸ்மேன்கள், இங்கிலாந்து வீரர்கள் களத்துக்கு வந்துவிட்டார்கள். 8 ஓவர்களில் 65 ரன்கள் அடித்திருக்கிறது இந்தியா.
லயம் லிவிங்ஸ்டன் வீசிய ஓவரில் வெறும் நான்கு ரன்களே அடிக்கப்பட ஒன்பது ஓவர்களில் 69 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருக்கிறது இந்தியா.
ஆதில் ரஷீத்தின் பத்தாவது ஓவரில் சூர்யகுமார் யாதவ் டிரிஃப்ட் ஷாட் ஆடி பவுண்டரி அடிக்க இந்தியா 10 ஓவர்களில் 77 ரன்கள் குவித்துள்ளது.
சிக்ஸரோடு பதினோறாவது ஓவரை முடித்திருக்கிறார் ரோஹித் ஷர்மா. மழையின் குறுக்கீட்டுக்குப் பின் அடிக்கப்பட்ட முதல் சிக்ஸர் இது. லாங் ஆனில் ஒரு பர்ஃபெக்ட் சிக்ஸர் அடித்தார் ரோஹித்.
கோலி, பன்ட் சீக்கிரமே அவுட் ஆக, இந்தியாவின் பேட்டிங்கை நங்கூரம் போட்டு நிறுத்தவேண்டிய நிர்பந்ததுக்குத் தள்ளப்பட்டார் ரோஹித் ஷர்மா. தன் கடமையை உணர்ந்து மிகவும் பொறுப்பாக ஆடி 50 ரன்களைக் கடந்திருக்கிறார். சிக்ஸரோடு 50 ரன்களைக் கடந்திருக்கிறார் ரோஹித். 36 பந்துகளில் 55 ரன்கள். சூர்யகுமார் - ரோஹித் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்திருக்கிறது.
39 பந்துகளில் 57 ரன்களில் அடித்து அவுட் ஆகியிருக்கிறார் ரோஹித் ஷர்மா. ஆதில் ரஷீத்தின் சுழலை சரியாகக் கணிக்கத் தவறி போல்டானார் ரோஹித்!
14 ஓவர்களின் முடிவில் 113 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருக்கிறது இந்தியா. களத்தில் தற்போது சூர்யகுமாரோடு இணைந்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா.
இன்னும் 5 ஓவர்களே மீதம் இருக்க 90 பந்துகளில் 118 ரன்கள் அடித்திருக்கிறது இந்தியா. ரன்ரேட் 7.86
ரன்களை சேர்க்க வேண்டிய முக்கியமான கட்டத்தில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியிருக்கிறார் சூர்யகுமார் யாதவ். 36 பந்துகளில் 47 ரன்கள் அடித்தார் சூர்யகுமார். களத்தில் தற்போது இறங்கியிருப்பது ரவீந்திர ஜடேஜா!
24 பந்துகளில் இன்னும் எத்தனை ரன்கள் சேர்க்கும் இந்தியா?! 170 ரன்களுக்கு மேல் அடித்தால் அது இந்தியாவின் பெளலர்கள் டிஃபெண்ட் செய்ய சரியாக இருக்கும். 170 ரன்களைக் குவிக்குமா இந்தியா
டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான கிறிஸ் ஜோர்டன் பந்துவீச்சில் லாங் ஆனில் அற்புதமான சிக்ஸர் அடித்தார் ஹர்திக் பாண்டியா!
கிறிஸ் ஜோர்டனின் அடுத்தடுத்த பந்துகளில் ஃப்ளாட் சிக்ஸர்கள் அடித்து அசத்தியிருக்கிறார் ஹர்திக் பாண்டியா!
ஃபிளாட் சிக்ஸர்கள் அடித்த ஹர்திக் ஹாட்ரிக் சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.கிறிஸ் ஜோர்டனுக்கு முதல் விக்கெட்!
அடுத்தடுத்த பந்துகளில் ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபேவை பெவிலியனுக்கு அனுப்பியிருக்கிறார் ரிவர்ஸ் ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட் கிறிஸ் ஜோர்டன். இந்தியா 18 ஓவர்களின் முடிவில் 147 ரன்கள் அடித்திருக்கிறது.
19வது ஓவரில் 150 ரன்களைக் கடந்திருக்கிறது இந்தியா. ஆர்ச்சரின் பந்துவீச்சில் ஜடேஜா அடித்த கட் ஷாட் பவுண்டரி மூலம் 150 ரன்களைக் கடந்திருக்கிறது!
19 ஓவர்களின் முடிவில் 159 ரன்கள் அடித்திருக்கிறது இந்தியா. கடைசி ஓவரை கிரிஸ் ஜோர்டன் வீச இருக்கும் நிலையில் 170 ரன்களைத் தொடுமா இந்தியா?!
ஜோர்டனின் பந்துவீச்சில் லாங் ஆனில் சிக்ஸர் அடித்திருக்கிறார் அக்சர் பட்டேல். இந்தியா 170 ரன்களைத் தொட்டது!
சிக்ஸர் அடித்தாலே அடுத்தப்பந்தில் அவுட் ஆக்கிவிடுகிறார் கிறிஸ் ஜோர்டன். 6 பந்துகளில் 10 ரன்கள் அடித்து அவுட் ஆனார் அக்சர்!
இங்கிலாந்துக்கு 172 ரன்கள் டார்கெட் கொடுத்திருக்கிறது இந்தியா. 2022 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இதேப்போல் 168 ரன்கள் அடித்திருந்தது இந்தியா. இந்த டார்கெட்டை விக்கெட்டே இழக்காமல் சேஸ் செய்து முடித்தது இங்கிலாந்து. ஓப்பனர்கள் பட்லரும், ஹேல்ஸும் முறையே 80, 86 ரன்கள் அடித்து 16 ஓவரில் மேட்ச்சை முடித்துவிட்டார்கள். அடிலெய்டில் நடந்தது கயானாவில் நடக்க வாய்ப்பில்லை என நம்புவோம்!
பட்லரும், ஃபில் சால்ட்டும் களத்தில்
பட்லரும், சால்ட்டும் மிகவும் நிதானமாக ஆடிவருகிறார்கள். மூன்று ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழக்காமல் 26 ரன்கள் அடித்துள்ளது!
5 ஓவர்களுக்குள் பட்லர், சால்ட் இருவரையும் பெவிலியனுக்கு திரும்ப வைத்திருக்கிறார்கள் அக்சர், பும்ரா. 35 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருக்கிறது இங்கிலாந்து.
பேர்ஸ்டோவை போல்டாக்கி டக் அவுட் செய்து அனுப்பியிருக்கிறார் அக்சர் பட்டேல்
மூன்று ஓவர்களில் 3 விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார் அக்சர் பட்டேல். மொயின் அலி ஸ்டம்ப்பிங செய்யப்பட்டு அவுட். பட்லர், பேர்ஸ்டோ, மொயின் அலி என மூன்ற்ய் முக்கிய விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார் அக்சர். 49 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருக்கிறது இங்கிலாந்து.
குல்தீப் யாதவின் பந்தை சரியாக கணிக்கத்தவறி விக்கெட்டை இழந்திருக்கிறார் சாம் கரண். 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்லளை இழந்து 62 ரன்கள் அடித்திருக்கிறது இங்கிலாந்து. வெற்றிக்கு இன்னும் 60 பந்துகளில் 110 ரன்கள் அடிக்கவேண்டும்.
இந்திய பெளலர்களின் அட்டகாசமான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்துவருகிறது இங்கிலாந்து. கடைசியாக ஹேரி புரூக் அவுட் ஆக 70 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்திருக்கிறது இங்கிலாந்து.
முன்னதாக அக்சர் 3 விக்கெட்கள் எடுக்க இப்போது குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்கள் எடுத்திருக்கிறார். கிறிஸ் ஜோர்டன் அவுட் ஆக 72 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்திருக்கிறது இங்கிலாந்து.
அக்சர் நான்கு விக்கெட்கள் வீழ்த்த, இங்கிலாந்து தற்போது 9 விக்கெட்களை இழந்து பரிதவித்து வருகிறது!
172 ரன் டார்கெட்டை அடிகமுடியாமல் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. இந்தியா சனிக்கிழமை தென்னாப்பிரிக்காவுடன் இறுதிப்போட்டியில் மோத இருக்கிறது.