பாக்கியாவை பார்த்து கோபி எடுத்த முடிவு… மிரண்டு போன பழனிச்சாமி! 'பாக்கியலட்சுமி' இன்றைய எபிசோட் ஹைலைட்ஸ்!
ராதிகா நைட் எல்லாம் கோபி சொன்ன விஷயங்களால் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறாள். அடுத்த நாள் காலையில் பாக்யாவுக்கு ரெஸ்டாரண்டில் இருந்து போன் கால் வர அவர் கிளம்பிச் செல்கிறார். வழியில் ஈஸ்வரி மற்றும் கோபியை பார்க்க ஈஸ்வரி ‘’எங்க பாக்கியா இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட’’ என்று கேட்கிறார். பாக்கியா ‘’ரெஸ்டாரண்ட் போறேன் அத்தை.. கிரைண்டர் வேலை செய்யலைனு போன் பண்ணாங்க… அதனாலதான் கிளம்பி போறேன்’’ என்று சொல்கிறார். பாக்கியா சென்றதும் கோபி ‘’இவ்வளவு காலையில் வேலைக்கு போயிட்டா வீட்ல இருக்க வேலையெல்லாம் யார் பார்ப்பா’’ என்று கேட்க ‘’அதுவும் பாக்யா தான் பண்ணுவா.. வீட்லயும் சமைச்சு வச்சுட்டு ரெஸ்டாரண்ட்ல வேலை செஞ்சிட்டு திரும்பவும் வீட்டுல வந்து வேலை செய்வா’’ என்று சொல்ல கோபி ஷாக் ஆகிறான்.
இதையடுத்து வீட்டுக்கு வந்த கோபி பாக்யாவுக்கு போட்டியாக வீட்டில் இருக்கும் எல்லா வேலையையும் செய்ய தொடங்குகிறான். ஈஸ்வரியை உட்கார வைத்து ‘’இன்னைக்கு நானே உங்களுக்கு பிரேக்ஃபாஸ்ட் செஞ்சி தரேன்’’ என்று சொல்ல ஈஸ்வரி கோபி சமையலை நினைந்து பயப்படுகிறார். கோபி தோசை ஊற்ற தோசை வராத நிலையில் மாவு சரியில்ல என்று சொல்கிறான். உதவி செய்யப் போன ராதிகாவையும் விரட்டி அடிக்கிறான். பிறகு ஈஸ்வரி தோசையை எப்படி ஊத்தணும் என்று சொல்லிக் கொடுக்க அவரே தோசையை ஊற்றி கொண்டு வந்து சாப்பிட வைக்கிறார்.
இதனால் ராதிகா பயங்கர அப்செட்டில் இருக்க அங்கு வந்த ஈஸ்வரி ‘’ஆத்தாவும் பொண்ணும் என்ன பேசுறீங்க, கோபி உங்கள கண்டுக்கறதே இல்லனு பேசுறீங்களா.. இன்னும் கொஞ்ச நாள்ல என் பையனை அம்மா தாயே ஆள விடு என்று சொல்ல வெச்சி இங்க இருந்து அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் பாரு’’ என்று சவால் விடுகிறார்.
அடுத்ததாக பழனிச்சாமி பாக்கியா ரெஸ்டாரன்ட் பக்கத்தில் புதிய கடையை திறக்க பழனிச்சாமி வீட்டுக்கு சென்ற நேரத்தில் பாக்யா அவரது கடையை அலங்கரித்து ஆச்சரியப்படுத்துகிறார். இப்படியாக இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவடைகிறது.