பரதநாட்டியம் கிளாஸ் தொடங்கிய விஜயா… அவமானத்துக்கு மீனா கொடுத்த பதிலடி… ‘சிறகடிக்க ஆசை’ இன்றைய எபிசோட் ஹைலைட்ஸ்!
மூத்த மருமகள் ரோகிணி கொடுத்த ஐடியாவால் விஜயா எல்லோரையும் வீட்டுக்கு வரவைத்து ரூமுக்குள் பரதநாட்டியம் ஆடி ஆச்சரியப்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறார். முத்துவிடம் வரும் தம்பி ரவி’’ அம்மா எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வர சொன்னாங்க… என்னப்பா என்ன விஷயம்’’ என்று கேட்க ‘’நாங்களே அதை தெரிஞ்சுக்க தான் காத்துக்கிட்டிருக்கோம்.. நீ நில்லு’’ என்று சொல்கிறான்.
அடுத்ததாக ரூமுக்குள் இருந்து சலங்கை சத்தம் வர முத்து, மீனா, ரவி, ஸ்ருதி என எல்லோரும் ‘சந்திரமுகி’ பேய் வந்துவிட்டது என்று பயப்பட அண்ணாமலை அது ‘’பேய் இல்ல உங்க அம்மாதான்’’ என்று சொல்கிறார். ரோகிணி ரூமின் கதவைத் திறக்க பரதநாட்டிய கெட்டப்பில் என்ட்ரி கொடுக்கிறார் விஜயா.
விஜயாவின் கெட்டப்பை பார்த்து எல்லோரும் மிரண்டு போய் நிற்க மூன்றாவது மருமகளான ஸ்ருதி ‘’நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’’ என்று ஓடிப்போய் விஜயாவை கட்டிப்பிடித்துக் கொள்கிறார். அதன்பிறகு விஜயா ‘’இந்த வீட்ல இருக்க எல்லாரும் சம்பாதிக்கிறீங்க… நான் வீட்ல இருக்கறதுனால எனக்கு மரியாதை இல்லாம போயிடுச்சு… மரியாதையை மீட்டெடுக்க நான் முடிவு பண்ணிட்டேன்’’ என்று சொல்கிறார்.
அப்படி என்ன பண்ணப்போறீங்க என முத்து கேட்க விஜயா, ‘’ரோகினி அத நீயே சொல்லு’’ என்று சொல்ல ‘’ஆன்ட்டி பரதநாட்டியம் கிளாஸ் தொடங்கி எல்லோருக்கும் கத்து தரப் போறாங்க’’ என்று சொல்ல முத்து ஷாக் ஆக, மீனா ‘’ஆமாங்க… பார்வதி ஆன்ட்டி வீட்ல இடம்தரேன்னு சொல்லியிருக்காங்க. அங்கதான் அத்தை கிளாஸ் நடத்த போறாங்க’’ என்று சொல்கிறாள். ஸ்ருதி ‘’வாவ் உங்களுக்குள்ள இப்படி ஒரு திறமை இருக்கா’’ என்று கேட்க ‘’ஆமாமா… என்னுடைய திறமையை கல்யாணம் ஆனதும் பூட்டி வெச்சிருந்தேன். இந்த சலங்கை ஒரு பெட்டிக்குள்ள அடைஞ்சி கிடந்துச்சு. இப்போ அது திரும்பவும் என் காலுக்கு வந்து இருக்கு’’ என்று சொல்கிறார்.
‘’ஒருத்தருக்கு மாசம் 2000 ரூபாய் பீஸ். 40 பேர் வந்தா கூட மாசம் 80 ஆயிரம் சம்பாதிப்பேன்’’ என்று விஜயா சொல்ல, அதைக்கேட்டு முத்து, அண்ணாமலை, ரவி ஆகியோர் வாய் அடைத்துப் போகின்றனர்.
‘’இதை சொல்லத்தான் உங்க எல்லாரையும் வர சொல்லி இருந்தேன். இப்ப போய் சாப்பிடுங்க’’ என்று சொன்ன விஜயா, வெளியில பரதநாட்டிய சிகாமணி விஜயானு பெரிய போர்ட் வைக்கணும், அதுக்கு போட்டோ எடுக்க சொல்லி பர்ஃபார்மன்ஸ் செய்ய ரோகிணி போட்டோ மற்றும் வீடியோவை எடுக்கிறாள்.
அடுத்த நாள் பார்வதி வீட்டில் விஜயாவுக்கு பேனர் எல்லாம் வைத்து பரதநாட்டிய கிளாஸ் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. மீனா பூஜைக்கு எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ய பார்வதி விளக்கேற்றி தொடங்கிடலாமா என்று கேட்க ‘’இரு பார்வதி முக்கியமான விஐபி வராங்க’’ என்று சொல்கிறார்.
கொஞ்ச நேரத்தில் ஸ்ருதியின் அம்மா வீட்டுக்கு வர விஜயா அவரை ஆரத்தி எடுத்து வரவேற்கிறாள். ஸ்ருதி எங்க அம்மா தான் இந்த விஐபி-யா என்று கேட்க விஜயா ‘’ஆமாமா… அவங்க கையால் தான் மனோஜ் பிசினஸ் தொடங்கி வெச்சாங்க.. இன்னைக்கு பிசினஸ் நல்லா போயிட்டு இருக்கு, அதனாலதான் அவங்க கையால என்னுடைய கலைப்பயணத்தையும் தொடங்கனும் வர வெச்சேன்’’ என்று சொல்கிறார்.
ஸ்ருதியின் அம்மா சுதாவை வைத்து விளக்கேற்ற வைக்கிறார் விஜயா. பிறகு ஸ்ருதியை கூப்பிட்டு விளக்கேற்ற சொல்ல மூத்த மருமகளான ரோகிணி அதிர்ச்சி அடைகிறாள். அடுத்து ரோகினியை கூப்பிட்டு விளக்கேற்ற வைக்கிறார். ரோகிணி விளக்கேற்றியதும் மீனா தன்னைக் கூப்பிடுவார்கள் என்று எதிர்பார்க்க ‘’பார்வதி நீ வா’’ என்று கூப்பிடுகிறார் விஜயா. இதனால் மீனாவின் முகம் மாறுகிறது.
அண்ணாமலை விஜயாவிடம் ‘’நீ பண்றது சரியா இல்ல… ரெண்டு மருமகளை கூப்பிட்டியே மீனாவை கூப்பிட்டியா?’’ என்று கேட்க விஜயா ‘’விளக்குல இருக்கிறது 5 முகம்தான்’’ என்று சொல்கிறாள். மீனா ‘’பரவால்ல மாமா அவங்க விளக்கேத்த என்ன ஊத்தி எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சது நான்தான். அதுவே எனக்கு சந்தோஷம்’’ என்று சொல்லி விஜயாவுக்கு பதிலடி கொடுக்கிறார்.
முத்து ‘’சரியான பாயின்ட் மீனா.. விளக்கேத்த எண்ணெய் ஊற்றி திரி போட்டதுனால தான் அவங்களால விளக்கேத்த முடிஞ்சது. எண்ணெய்யும் திரியும் இல்லாம விளக்கேத்த முடியுமா? அப்போ அம்மாவோட பரத நாட்டியம் கிளாஸை உன் கையால தான் தொடங்கி இருக்க’’ என்று சொல்கிறான்.
முத்துவின் பன்ச்சோடு ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.