முடிவுக்கு வரும் சன் டிவியின் ‘சுந்தரி’ சீரியல்… 7 மணிக்கு வரப்போகும் புதிய சீரியல் என்ன?!
சன் டிவியில் 1000 எபிசோடுகளைக் கடந்த வெற்றிகரமான சீரியல் ‘சுந்தரி'. ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்கிற லட்சியத்தோடு கிராமத்தில் இருந்து வரும் சராசரிப் பெண்ணின் கதை என்பதால் ‘சுந்தரி’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நிறத்தாலும், கணவனாலும் ஒதுக்கப்படும் ஒரு பெண் எப்படி தன் லட்சியத்தில் வெற்றிபெற்றாள் என்கிற இந்த கதையின் நாயகியாக கேப்ரியெல்லா செலஸ் நடித்தார்.
தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த ‘சுந்தரி’ ஒரு கட்டத்தில் டிஆர்பியில் சாதனைப்படைத்து வந்தது. ஆனால், தற்போது சீரியலின் டிஆர்பி தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதால் ‘சுந்தரி'யை அடுத்த வாரத்தோடு முடிக்க இருக்கிறது சன் டிவி.
இனி இரவு 7 மணிக்கு ‘மூன்று முடிச்சு' என்கிற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் விஜய் டிவியின் ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் நடித்த ஸ்வாதி கொண்டே ஹீரோயினாக நடிக்க, ஜீ தமிழ் சேனலில் ‘சண்டக்கோழி' சீரியலில் நடித்த நியாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.
திருமணமே வேண்டாம் எனச் சொல்லிக்கொண்டிருக்கும் கதாநாயகிக்கும், ஏற்கெனவே ஒரு காதல் தோல்வியால் குடிக்கு அடிமையாகியிருக்கும் நாயகனுக்கும் இடையே திடீர் திருமணம் நடக்க அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதுதான் ‘மூன்று முடிச்சு' சீரியலின் கதை!