சின்னத்திரை சேனல்களுக்கான மார்க் ஷீட் என்று சொல்லப்படும் டிஆர்பி ரேட்டிங் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வெளியாகும். அந்தவகையில் இன்று காலை 11 மணிக்கு BARC வெளியிடும் இந்த ஆண்டின் 23-வது வாரத்துக்கான டிஆர்பி ரேட்டிங் ரிப்போர்ட் வெளியானது.
சேனல் : விஜய் டிவி
நேரம் : 9 PM
விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’தான் சின்னத்திரை உலகின் நம்பர் 1 சீரியல். விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த சீரியல் ஒரு கூட்டுக்குடும்பத்தில் வாழும் மூன்று அண்ணன் தம்பிகளின் கதையை சொல்கிறது. இதில் இரண்டாவது தம்பியாக முத்து கேரெக்டரில் நடிக்கும் வெற்றி வசந்தும், அவரது மனைவியாக மீனா கேரெக்டரில் நடிக்கும் கோமதி ப்ரியாவும்தான் ஹீரோ ஹீரோயின்கள். சரியாகப் படிக்காத குடிக்கு அடிமையாக இருந்த கணவன் முத்துவை, கோயில் வாசலில் பூ கட்டி பிழைப்பை நடத்தும் மீனா திருத்தி அவனோடு வாழ்க்கை நடத்துவதும், தன்னிடமும் தன் கணவனிடமும் பாரபட்சம் காட்டும் மாமியாருக்கு பதிலடி கொடுப்பதும்தான் இந்த சீரியலின் முக்கிய கதை.
சேனல் : சன் டிவி
நேரம் : 8 PM
ரேட்டிங் வந்திருக்கும் வாரம் வரை இரவு 8 மணிக்கு சன்டிவியில் ஒளிபரப்பாகிவந்த ‘சிங்கப்பெண்ணே’ இந்த வாரம் முதல் எதிர்நீச்சல் முடிவடைந்ததால் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக ஆரம்பித்திருக்கிறது. வ் ஏழ்மை காரணமாக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வரும் தைரியமான பெண்ணான ஆனந்தி எனும் பெண்ணின் கதையே ‘சிங்கப்பெண்ணே’ சீரியலின் ஒன்லைன். சென்னையில் கார்மென்ட் கம்பெனியில் வேலைபார்க்கும் ஆனந்தியை கம்பெனியின் மகேஷ் காதலிக்கிறான். ஆனால், அன்புவோ தனதுக்கு அழகன் என்கிற பெயரில் பரிசுகள் அனுப்புபவன் மேல் காதல் கொள்கிறாள். அந்த அழகன் அவளுடன் வேலைபார்க்கும் அன்பு என்பது அவளுக்கு எப்போது தெரியவரும், மகேஷின் காதல் என்னவாகும், ஆனந்தியை அழிக்க நினைக்கும் அவளுடைய ஹாஸ்டல் தோழி மித்ரா எனப் பல அடுக்குகளைக்கொண்ட கதையாக நகர்ந்துவருகிறது ‘சிங்கப்பெண்
சேனல் : சன் டிவி
நேரம் : 9 PM
ஆறு மாதங்களுக்கு முன்புவரை தமிழ் தொலைக்காட்சிகளின் நம்பர் ஒன் சீரியலாக இருந்த எதிர்நீச்சல் ரேட்டிங் வந்திருக்கும் இந்தவாரத்தோடு மூடுவிழா கண்டுவிட்டது. சீரியலில் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் கதையாக வந்து பெண்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்திய கதையம்சத்தைக் கொண்டிருந்தது எதிர் நீச்சல். க்ளைமேக்ஸ் வாரத்தில் 7.91டிஆர்பியோடு மூன்றாம் இடத்தைப்பிடித்து கெத்தாகவே விடைபெற்றிருக்கிறது எதிர்நீச்சல்.
சேனல் : சன் டிவி
நேரம் : 7.30
சைத்ரா ரெட்டி ஹீரோயினாக நடிக்க சன் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் ‘கயல்'. கே.பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ திரைக்கதையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சீரியல்தான் கயல். குடிகார அண்ணன், படிக்கும் இரண்டு தங்கைகள் இவர்களுக்கு இடையே பிறந்து நர்ஸாகப் பணிபுரியும் கயல் என்கிற முதிர்கன்னியின் கதைதான் ‘கயல்' சீரியல்.
சேனல் : விஜய் டிவி
நேரம் : 8.30
ஆயிரம் எபிசோடுகளைக் கடந்தும் செம ஸ்ட்ராங்காக டாப் டென் சீரியல்களில் முதல் ஐந்து இடங்களுக்குள் பிடித்துவிடுகிறது பாக்யலட்சுமி. கடந்த சில வாரங்களாக சிறகடிக்க ஆசைக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தது ‘பாக்யலட்சுமி’. பாக்யா என்கிற நடுத்தரவயதுப் பெண்ணின் கதைதான் பாக்யலட்சுமி. பாக்யாவின் கணவன் ராதிகா என்னும் பெண்ணோடு கள்ளத்தொடர்பில் இருக்க அது எப்போது பாக்யாவுக்குத்தெரியவரும் என்பதுதான் ஆரம்பத்தில் கதையாக இருந்தது. இப்போது கிட்டத்தட்ட இரண்டு பொண்டாட்டி கதைக்களத்தில் பயணிக்கும் பாக்யலட்சுமியில் இப்போது ராதிகா கர்ப்பமாக இருக்கிறார். கோபி ஏற்கெனவே தாத்தாவாகிவிட்டது இதில் குறிப்பிடத்தக்கது.
சேனல் : விஜய் டிவி
நேரம் : 8 மணி
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஏற்கெனவே முடிந்துவிட்டநிலையில் இப்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 - தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்கிற குறிப்போடு ஒளிபரப்பாகிவருகிறது. தந்தையும், அவருடைய மூன்று மகன்களுக்கும் இடையேயான கதைதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். சீசன் 2 ஆரம்பிக்கும்போது டிஆர்பியில் பின்னடைவைச் சந்தித்த பாண்டியன் ஸ்டோர்ஸின் ரேட்டிங் தற்போது உயர்ந்துவருவதில் விஜய் டிவி ஹேப்பி.
சேனல் : விஜய் டிவி
நேரம் : 8.30 மணி
சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப்போல சீரியலும் ஆயிரம் எபிசோடுகளைக் கடந்துவிட்டது. அண்ணன் தங்கை பாசக்கதையான வானத்தைப்போல சீரியலில் பிரபல தொலைக்காட்சி நடிகர் ஶ்ரீ கதாநாயகனாக நடித்துவருகிறார்.
சேனல் : சன் டிவி
நேரம் : 9.30 மணி
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மல்லி' சீரியலில் ஜீ தமிழில் பேரன்பு சீரியலில் நடித்துவந்த விமல் வெங்கடேசனும், நிகிதாவும் நடிகிறார்கள். சிங்கிள் பேரன்ட்டான கதாநாயகனையும், அவனது 6 வயது மகளையும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கும் கதாநாயகி எப்படி காதலியாகவும், தாயாகவும் மாறப்போகிறாள் என்பதுதான் கதை.
சேனல் : விஜய் டிவி
நேரம் : 7.30 மணி
சினிமா நடிகையான மெளனிகா நடிக்கும் சீரியல் ‘ஆஹா கல்யாணம்’. மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த கோடீஸ்வரி என்கிற பெயர்கொண்ட மெளனிகா தன் மூன்று மகள்களையும் பெரிய கோடீஸ்வர மாப்பிள்ளைகளுக்குத் திருமணம் கட்டிக்கொடுக்க முயற்சிக்கிறார். கோடீஸ்வர மாப்பிள்ளைகள் கிடைத்தார்களா, மெளனிகாவின் கனவு நிறைவேறியதா, மகள்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
சேனல் : சன் டிவி
நேரம் : 7 மணி
கிராமத்தைச் சேர்ந்த கறுப்பு நிறப்பெண்ணான சுந்தரியின் கதைதான் இது. ஐஏஎஸ் படிக்க ஆசைப்படும் சுந்தரிக்கு எதிர்பாராதவிதமாக திருமணம் நடக்கிறது. ஆனால், ஏற்கெனவே காதலியோடு திருமணம் செய்துகொண்ட அவன் தன் திருமணத்தை மறைக்க என்ன நடக்கிறது என்பதுதான் இந்த சீரியலின் ஆரம்பக் கதை. இப்போது சீசன் 2-வாக சுந்தரி ஐஏஎஸ்-ஆக பயணிக்கும் கதை ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.