Siragadikka Aasai : விஜயாவை வெறுத்து ஒதுக்கும் அண்ணாமலை... உள்ளத்தால் உயர்ந்து நிற்கும் மீனா!
மன்னிப்பு கேட்ட அண்ணாமலை!
''விஜயா இதுவரைக்கும் பண்ணதையெல்லாம் பொறுத்துகிட்டு போனது ஒரு நாள் அவ மாறுவான்ற நம்பிக்கையில்தான். ஆனா, இப்போ அந்த நம்பிக்கையே முழுசா போயிடுச்சு. அவ பண்ண தப்புக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்'' என்று அண்ணாமலை சொல்ல முத்து, மீனா ''நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கறீங்க'' என்று பதறுகின்றனர்.
''உன்னை இந்த வீட்டுக்கு கொண்டு வந்தது நான் தான்... இதுவரைக்கும் எவ்வளவோ நடந்து இருக்கு.. இது எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு தான் இருந்திருக்க.. இதுவே வேற ஏதாவது ஒரு பொண்ணா இருந்தா இங்கு நடந்திருக்கிறதே வேற'' என்று சொல்கிறார் அண்ணாமலை.
ஒட்டு கேட்ட விஜயா!
கோயிலில் இருந்து வீட்டுக்கு வரும் விஜயா உள்ளே இவர்கள் பேசுவதை வெளியே நின்றபடி கேட்கிறார். முத்துவும் மீனாவும் ''அம்மாகிட்ட பேசுங்க'' என்று சொல்ல அண்ணாமலை இனிமே அவ கிட்ட பேசப்போறது இல்லை என்று உறுதியாக சொல்லிவிடுகிறார். மேலும் ''நான்தான் ஏற்கெனவே சொல்லிட்டேன்ல... எதுக்கு என்னை கட்டாயப்படுத்திட்டு இருக்கீங்க'' என்றும் கோபப்படுகிறார்.
விஜயா வீட்டுக்குள் வர முத்து அப்பாவும், அம்மாவும் பேசிக்கட்டும் என்று திட்டமிட்டு மீனாவை கூட்டிச் சென்று மீனா ''நீ பூரி செஞ்சுட்டு குருமா இல்லைனா, உருளைக்கிழங்கு புட்டு செஞ்சிடு'' என்று சொல்கிறான். மீனா ''ரெண்டுத்தையும் செய்றேன்'' என்று சொல்லி கிச்சனுக்கு செல்ல அண்ணாமலை ''நான் மொட்டை மாடிக்கு போறேன்... காபி போட்டு எடுத்துட்டு வா மா'' என்று கிளம்பி சென்று விடுகிறார்.
மீனாவை வம்புக்கு இழுத்த விஜயா :
அடுத்ததாக கிச்சனுக்கு வந்த விஜயாவை பார்த்ததும் மீனா ''வாங்க அத்தை பூரி செய்யுறேன். உட்காருங்க சாப்பிடுங்க'' என்று சொல்ல ''பூரிப்புல ரொம்ப சந்தோஷமா பூரி செய்ற போல'' என்று கேட்க மீனா ''இல்ல அத்தை எண்ணெயில் தான் பூரி செய்கிறேன்'' என்று கவுன்ட்டர் கொடுக்க ''அவர்கிட்ட என்னை பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி பேச விடாம பண்ணிட்ட... அந்த சந்தோஷத்தை கொண்டாடத்தான் பூரி செய்றியா? நீயும் உன் புருஷனும் நல்லா சாப்பிடுங்க'' என்று கோபப்பட்டு வெளியே வருகிறாள்.
பூரியை பார்த்ததும் மாறிய மனோஜ்!
அடுத்து ரோகிணி மற்றும் மனோஜ் வேலைக்கு கிளம்ப மீனா வாங்க ரோகிணி சாப்பிட்டு போய்டுங்க பூரி செஞ்சிருக்கேன்... உங்களுக்கும் சேர்த்துதான் செஞ்சேன்'' என்று சொல்ல ரோகிணி ''எங்களுக்கு வேண்டாம்... நாங்க வெளியே சாப்பிடுறோம்'' என்று சொல்கிறாள். மனோஜ் ''வெளியே எதுக்கு சாப்பிடணும் ரோகிணி? வாசனை ரொம்ப நல்லா வருது. இங்கேயே சாப்பிட்டு போயிடலாம். நாம தான் மாசா மாசம் காசு கொடுக்குறோம்ல'' என்று சொல்லி ரோகிணியை இழுத்துச் செல்கிறான். விஜயாவையும் சாப்பிட கூப்பிட விஜயா ''எனக்கு வேண்டாம்'' என்று சொல்ல ரோகிணி ''நீங்க சாப்பிடாம இருந்து உங்க உடம்புக்கு ஏதாவது ஆகிட போகுது... வாங்க ஆன்ட்டி'' என்று அழைத்து வருகிறாள்.
அண்ணாமலை கொடுத்த ஷாக்!
அண்ணாமலையும் சாப்பிட வர விஜயா இருப்பதை பார்த்து அவர் ''நான் அப்புறம் சாப்பிடுறேன்'' என்று சென்று விடுகிறார். ஸ்ருதி ''நானும் ரவியும் வெளியே சாப்பிடலாம்னு இருந்தோம். ஆன்ட்டி நகையை கழட்டி உங்க முகத்துல வீசி எறிஞ்சதுனால நீங்க வருத்தப்பட்டு இருக்கீங்க. சமைச்சிருக்க மாட்டீங்கனு நினைச்சோம்'' என்று ஸ்ருதி சொல்ல முத்து ''ஒரு வேலை உனக்கு அப்படி நடந்திருந்தா என்ன பண்ணி இருப்ப'' என்று கேட்க ''நான் இவ்ளோ பொறுமையாலாம் இருந்திருக்க மாட்டேன்... கிளம்பி போயிட்டே இருந்திருப்பேன்'' என்று சொல்கிறாள். ''பல குரலுக்கு தெரியுறது கூட உனக்கு தெரியல'' என்று மீனாவைப் பார்த்து சொல்கிறான் முத்து.
வெளியே கிளம்பும் அண்ணாமலை விஜயாவிடம் சொல்லாமல் மீனாவிடம் மட்டும் சொல்லிவிட்டு செல்ல விஜயா சாப்பிடாமல் எழுந்து சென்று விடுகிறாள் .
மனோஜ் கடைக்கு வந்த போலீஸ்!
மனோஜ் ''என்னாலதான் அம்மா இப்போ அசிங்கப்பட்டு நிக்கிறாங்க... அப்பாவும் அம்மாகிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டாரு'' என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்க கடைக்கு வரும் போலீஸ் ''உங்ககிட்ட இருந்து திருடுன பொருளை எல்லாம் இவர்தான் பணம் கொடுத்து வாங்கி இருக்காரு. இவர் பொருளை எல்லாம் திருப்பி கொடுத்துடுறேன்ன்னு சொல்றார்'' என்கிறார். ''ஆனா இவர் பொருளை வாங்குறதுக்காக கொடுத்த பணத்தை நீங்க திருப்பி கொடுக்கணும்'' என்று சொல்ல மனோஜ் ''நாங்க எதுக்கு திருப்பி கொடுக்கணும்... இவர் வாங்குனது திருட்டு பொருள்தானே'' என்று சொன்னதும் ''அது எங்களுக்கு எப்படி தெரியும்?'' என்று அந்த நபர் பதில் கொடுக்கிறார். இறுதியாக ரோகிணி ''அந்த பணத்தை நாங்க கொடுத்துட்டு பொருளை வாங்கிக்கிறோம்'' என்று சொல்கிறாள். மனோஜ் எப்படி பணத்தை கொடுக்கிறது என்று கேட்க ''ஜீவா கொடுத்த பணத்தில் மீதி கொஞ்சம் இருக்குல்ல... அதுல முத்துவுக்கு ரெண்டு லட்சமும் இவருக்கு ஒரு லட்சம் கொடுத்திடலாம்'' என்கிறாள்.
ஸ்ருதிக்கு கோரிக்கை வைத்த மீனா!
அதன் பிறகு சுருதி ஸ்டுடியோ கிளம்ப மீனா ''வீட்ல நடந்த பிரச்சனை பற்றி உங்க வீட்ல எதுவும் சொல்ல வேண்டாம்'' என்று சொல்கிறாள். ''சின்னவங்க தப்பு பண்ணா அது பெருசா எடுத்துக்க மாட்டாங்க... ஆனா, வீட்ல இருக்குற பெரியவங்க தப்பு பண்ணா அந்த குடும்பத்தையே தப்பா பேசுவாங்க. இந்த விஷயத்துல அத்தையும் சம்பந்தப்பட்டு இருக்காங்க... அதனால, உங்க வீட்ல இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம்... அப்புறம் அத்தைக்குத்தான் அவமானமா போயிரும்'' என்று சொல்ல ''தப்பு யார் பண்ணாலும் தப்புதான்... எனக்கு சின்னவங்க பெரியவங்க எல்லாம் பார்க்க தெரியாது'' என்று சொல்லும் ஸ்ருதி ''உங்களுக்காக நான் இதை என் வீட்ல சொல்ல மாட்டேன்'' என்று சொல்ல விஜயா ''இவ நமக்கு நல்லது பண்றாளா இல்ல நல்ல பேர் எடுக்க இப்படி பண்றாளா'' என்று குழம்புகிறாள்.
தண்ணீர் வாங்காத அண்ணாமலை!
புத்தகத்தை எடுத்து தூசி தட்டும் அண்ணாமலை அதிலிருந்து வந்த தூசியால் விடாமல் இரும்ப விஜயா தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்க மறுத்து அவரே டைனிங் டேபிள் சென்று தண்ணீர் எடுத்து குடிக்கிறார். இதனால் விஜயா கோபமாகி ரூமுக்கு வந்து விடுகிறாள்.
அப்பா, அம்மா சண்டை எப்ப முடிவுக்கு வரப்போகுதோ?!