பாக்யாவால் வீட்டுக்கு வந்த ஈஸ்வரி… ராமமூர்த்தி சொன்ன குட்டி ஸ்டோரி - ‘பாக்கியலட்சுமி’ ஹைலைட்ஸ்!
சாலையில் அழுதபடி தனியே நிற்கும் ஈஸ்வரியை மருமகள் பாக்கியா தன்னுடைய வீட்டுக்கு அழைத்துவருகிறாள்.
என்ன நடந்தது என எல்லோரும் விசாரிக்க, எழில் அப்பாவையே அடிக்கப்புறப்படுகிறான். பாக்கியா அவனை அதட்டி வீட்டுக்குள் அனுப்புகிறாள்.
ராமமூர்த்தி குட்டி கதை சொல்லி ஈஸ்வரியை ஆறுதல் படுத்துகிறார்.
காட்சி - 1 : தலையில் அடித்து புலம்பும் ஈஸ்வரி!
பாக்கியா ஓடிப்போய் ‘’அத்தை என்ன ஆச்சு… ஏன் அழுறீங்க'’ எனக் கேட்க ஈஸ்வரி தலையில் அடித்துக்கொண்டு ‘’நான் அப்படி செய்வேனா… என்ன பார்த்து அப்படி சொல்லிட்டாங்க… போக இடம் இல்லாம இருக்கேன்’’ என்று அழ ‘’நீங்க வாங்க அத்தை நம்ம வீட்டுக்கு போகலாம்’’ என்று பாக்கியா ஈஸ்வரியை கூட்டிக்கொண்டு வருகிறாள்.
காட்சி - 2 : ஈஸ்வரியால் பதறிய குடும்பம்!
வீட்டுக்கு வந்த ஈஸ்வரி அப்படியே உடைந்து போய் கீழே உட்கார்ந்து அழுது புலம்ப எல்லோரும் குரலைக் கேட்டு ஓடி வருகின்றனர். ‘’பாட்டி என்ன ஆச்சு’’ என எல்லோரும் கேட்க ராமமூர்த்தி ‘’எதுக்கு அழுவுற சொல்லு’’ என கேள்வி கேட்க ‘’நான்தான் ராதிகாவை பிடிச்சி தள்ளுனேன்…. என்னாலதான் அந்த குழந்தை செத்துப் போச்சுன்னு சொல்றாங்க… நான் உலகமா நினைச்சுட்டு இருந்த கோபியே என்ன பார்த்து அப்படி சொல்லிட்டான்’’ என்று கதறி துடிக்கிறாள்.
‘’அந்த குழந்தை பிறக்கிறதுல எனக்கு ஆரம்பத்துல விருப்பம் இல்ல தான்.. வேண்டாம்னு தான் சொன்னேன். என்ன நடக்கும் என்ற பதட்டத்துல சொன்னேன். அதுக்காக கருவுல இருக்கிற குழந்தையை கொல்ற அளவுக்கு கொடூரமானவளா நான்… நீங்களே சொல்லுங்க நான் அப்படி பண்ணுவேனா’’ என எல்லோரிடமும் கேட்கிறார் ஈஸ்வரி.
உன் மகனா அப்படி சொன்னான்?
ராமமூர்த்தி ‘’உன் மகனா அப்படி சொன்னான்?’’ என்று கேட்க ‘’முதல்ல அந்த கமலா சொன்னா… அப்புறம் ராதிகா சொன்னா… அவங்க ரெண்டு பேருக்கும் ஆரம்பத்தில் இருந்தே நான் அந்த வீட்ல இருக்கிறது பிடிக்கல… அதனால அவங்க இத ஒரு சாதகமா பயன்படுத்திக்கிட்டாங்க. அவங்க ரெண்டு பேர் சொன்னத கேட்டு கோபியும் உங்களால தான் என் குழந்தை செத்துப் போச்சு வீட்டை விட்டு வெளியே போங்கன்னு சொல்லிட்டான். என் புள்ள தான் வேணும்னு உங்க எல்லாரையும் விட்டுட்டு போனேன்… ஆனா, அவன் என்னை வீட்டை விட்டு துரத்திட்டான்’’ என்று புலம்புகிறாள் ஈஸ்வரி!
‘’அவன் கூட போகாதனு நாங்க எல்லாரும் சொன்னோமே.. நீ கேட்கவே இல்ல, இப்ப என்ன ஆச்சு உன் புள்ளைய பத்தி நல்லா புரிஞ்சுகிட்டியா? கடவுள் உன் தலையில நல்லா அடிச்சு புரிய வச்சிருக்காரு’’ என்று சொல்கிறார் ராமமூர்த்தி.
சண்டைக்கு கிளம்பும் எழில்!
ஈஸ்வரியின் அழுகையால் எல்லோரும் உடைந்து போய் உட்கார்ந்து இருக்க எழில் ‘’அந்த ஆள சும்மா விடக்கூடாது’’ என்று சண்டைக்கு கிளம்ப பாக்யா ‘’அவர் தேள் மாதிரி..கொட்ட தான் செய்வாரு… இப்போ அத்தையோட நேரம் கொட்டு வாங்கிட்டு வந்து உட்கார்ந்து இருக்காங்க… அவங்கள சரி பண்றது தான் நம்மளோட வேலை… நீ உள்ள போ’’ என்று திட்டி அனுப்புகிறாள் பாக்யா.
காட்சி - 3 : சாப்பிட மறுக்கும் ஈஸ்வரி!
பாக்யா ஈஸ்வரிக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க ஈஸ்வரி ‘’எனக்கு வேணாம்… பசிக்கல…’’ என்று அழுதபடி இருக்க ராமமூர்த்தி ‘’சாமியார் ஒருத்தர் இருந்தாரு… அவரு பசிக்கும் போது வீடு வீடா போய் சாப்பாடு கேப்பாரு... சில வீட்ல சாப்பாடு கிடைக்கும், சில வீட்ல சாப்பாடு கிடைக்காது… சில வீட்ல திட்டி அனுப்புவாங்க. அப்போ அவருடைய சிஷ்யன் எல்லாரும் உங்களை இப்படி திட்டுறாங்களே… உங்களுக்கு கஷ்டமா இல்லையான்னு கேட்க, ‘ஒருத்தர் கிட்ட இருந்து ஒரு பொருளை வாங்கும் போது அந்த பொருள் நம்மகிட்ட வந்ததும் அது நம்முடையதாகிடும். அந்தத் திட்ட நான் வாங்குறது கிடையாது… அதனால அது என்னுடையது கிடையாது’ன்னு பதில் சொன்னாராம். அதே மாதிரி தான் உன் புள்ள பேசுறது எல்லாம் நீ காதுல வாங்கிக்காத, அவன் புத்தி அவ்வளவுதான்’’ குட்டி ஸ்டோரி சொல்லி ஆறுதல் தருகிறார் ராமமூர்த்தி.
நாளை பாக்யா நியாயம் கேட்டு கோபியைச் சந்திக்கும் எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது!