Baakiyalakshmi : கூண்டில் ஏற்றப்பட்ட ஈஸ்வரி... எதிர்த்து சாட்சி சொன்ன ராதிகா, கமலா!
ஈஸ்வரியை கோர்ட்டில் நிறுத்த வழக்கறிஞர்கள் ஈஸ்வரி மீது அபாண்டமான பழி சுமத்துகிறார்கள்.
ராதிகாவும், கமலாவுமே ஈஸ்வரிக்கு எதிராக சாட்சி சொல்கிறார்கள்.
இறுதியாக பாக்கியா கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுகிறாள்.
அழுது துடிக்கும் ஈஸ்வரி!
போலீஸ் ''நீங்கதான் ராதிகாவை பிடிச்சு தள்ளினீங்களா'' என்று கேட்க ''நான் எதுவும் பண்ணல'' என்று அழுகிறார் ஈஸ்வரி. ''ஆரம்பத்திலிருந்து உங்களுக்கு ராதிகாவை பிடிக்காது தானே'' என்று போலீஸ் கேட்க ''எனக்கு பிடிக்காதுதான்... ஆனா, அதுக்காக ஒரு குழந்தையை கொல்லுற அளவுக்கு நான் கொடூரமானவ கிடையாது... என்னை நம்புங்க நான் எதுவும் செய்யல'' என்று சொல்லி அழ போலீஸ் ''ஒழுங்கு மரியாதையா உண்மையை ஒத்துக்கோங்க இல்லனா விசாரணை வேற மாதிரி இருக்கும்'' என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
ராமமூர்த்திக்கு ஆறுதல் சொன்ன பாக்கியா!
மறுபக்கம் வீட்டில் எல்லோரும் உடைந்து போய் அழுது கொண்டே இருக்க ராமமூர்த்திக்கு பாக்கியா ஆறுதல் சொல்கிறாள். ''இன்னைக்கு மாதிரி நாளைக்கு இருக்காது... அத்தை எந்த தப்பும் பண்ணல... அவங்க நாளைக்கு வீட்டுக்கு வந்துருவாங்க'' என்று சொல்கிறாள்.
கோர்ட்டில் கூடிய குடும்பம்!
மறுநாள் காலையில் மொத்த குடும்பமும் கோர்ட்டில் ஒன்று கூடி ஈஸ்வரிக்காக காத்திருக்க போலீஸ் ஜீப்பில் வந்து இறங்குவதை பார்த்த ராமமூர்த்தி கண்கலங்கி அழுகிறார். குடும்பத்தைப் பார்த்த ஈஸ்வரி நான் எதுவும் பண்ணல என்று அழுகிறாள். நீதிபதி வந்தபின் ஈஸ்வரி கூண்டில் ஏற்றப்பட்டு விசாரணை தொடங்குகிறது. கமலா தரப்பு வக்கீல் ''உங்களுக்கு உங்க பையன் கோபி ராதிகாவை கல்யாணம் பண்ணிக்கிட்டதுல சுத்தமா விருப்பம் இல்ல தானே'' என்று கேட்க ஈஸ்வரி ''எனக்கு விருப்பமில்லைதான்... ஆனா, நான் எதுவும் செய்யல... நான் ராதிகாவை தள்ளி விடல'' என்று சொல்கிறார். ராதிகா கர்ப்பம் ஆனதும் ''இந்த குழந்தை வேண்டாம்னு சொன்னீங்களா'' எனக் கேட்க ''ஆமா சொன்னேன்... ஆனா, நான் குழந்தையை கொல்லல'' என்று அழுகிறாள் ஈஸ்வரி.
ராதிகாவின் வாக்கு முலம்!
அடுத்ததாக ராதிகாவை கூண்டில் ஏற்றி ''உங்க மாமியாருக்கு உங்க கல்யாணத்துல விருப்பம் இருந்ததா'' என்று கேள்வி கேட்க ராதிகா ''இல்லை ''என்று சொல்கிறாள். ''அவங்க இந்த குழந்தையை கலைச்சிடுனு சொன்னாங்களா'' என்று கேட்க ''ஆமாம்'' என்று சொல்கிறாள். ''அவங்கதான் உங்கள பிடிச்சு தள்ளினாங்களா... உங்களால உறுதியாக சொல்ல முடியுமா'' என்று கேட்க ராதிகா நடந்ததை நினைத்து பார்த்து ''ஆமாம்'' என்று சொல்கிறாள்.
கமலாவின் வாக்குமூலம்!
அடுத்ததாக கமலாவை கூண்டில் ஏற்றி விசாரணை செய்ய ''இவங்க புடிச்சு தள்ளினதை நான் என் இரண்டு கண்ணால பார்த்தேன். இவங்க மொத்த வன்மத்தையும் ராதிகாவை பிடிச்சித் தள்ளி தீர்த்துக்கிட்டாங்க... இவங்கள வெளியவே விடாதீங்க'' என்று சொல்கிறாள் கமலா.
பாக்கியாவிடம் விசாரணை!
அதன் பிறகு பாக்கியாவை கூண்டில் ஏற்றி ''நீங்கதான் ஈஸ்வரியோட முதல் மருமகளா? விவாகரத்து ஆன பிறகும் எதுக்கு நீங்க வீட்டை விட்டு வெளியே போகல'' என்று கேள்வி கேட்க ''அத்தை, மாமா, பசங்க எல்லோரும் நான் அவங்க கூட இருக்கணும்னு ஆசைப்பட்டாங்க... என்னுடைய ஆசையும் அதுதான்'' என்று சொல்கிறாள். ''உங்க மாமியார் தான் ராதிகாவை பிடிச்சு தள்ளினாங்களா'' என்று கேட்க ''அத்தை அப்படி கண்டிப்பா பண்ணி இருக்கவே மாட்டாங்க'' என்று சொல்கிறாள்.
வேடிக்கை பார்க்கும் கோபி செய்யப்போவது என்னவோ?!