கோயிலுக்குப் போகும் பாக்யா குடும்பம்… கோபியை வெளுக்கப்போகும் ராதிகா… ‘பாக்கியலட்சுமி’ ஹைலைட்ஸ்!
காட்சி - 1 : பாக்யாவின் அதிரடி முடிவு!
ஈஸ்வரி உடைந்து போய் கிடப்பதை பார்த்த பாக்கியா அவரை கும்பகோணம் கோவிலுக்கு அழைத்துச் செல்லலாம் என்று முடிவெடுப்பதோடு மாமானார் ராமமூர்த்தியிடம் இது குறித்து பேசுகிறாள். ‘’அத்தை இடம் மாறி இருந்தா, வேற ஒரு மனுஷங்களை பார்த்தா கொஞ்சம் சரியாவாங்க… அதனால அவங்கள கும்பகோணம் கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டு வரலாம்’’ என்று சொல்கிறாள்.
‘’ஈஸ்வரி இங்கேயே சாப்பிடாம கொள்ளாம இருக்கா அவளை வெளியூர் கூட்டிட்டு போய் அங்கேயும் அதே மாதிரி இருந்தா கஷ்டம் தானமா’’ என்று ராமமூர்த்தி சொல்ல ‘’அத்தை கொடைக்கானல் போகும்போது ரொம்ப சந்தோஷமா ஜாலியா என்ஜாய் பண்ணாங்க. கண்டிப்பா அவங்க மனசு மாறிடும்’’ என்று சொல்கிறாள். இதனால் ராமமூர்த்தி உன் மனசுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யுமா என்று சொல்கிறார்.
காட்சி - 2 : ஹை பிபீ-யில் கோபி!
ரெஸ்டாரன்ட் வந்த கோபி பாக்கியா சொல்லிய வார்த்தைகளால் ஒவ்வொன்றையும் நினைத்து நினைத்து உச்சகட்ட டென்ஷனில் இருப்பதோடு வேலை செய்பவர்கள் எல்லோரையும் பிடித்து சத்தம் போட்டு விடுகிறான்.
காட்சி - 3 : பிளானை சொன்ன பாக்கியா!
அடுத்ததாக பாக்கியா எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது அத்தையை கும்பகோணம் கோவிலுக்கு கூட்டிச்செல்லப் போவதாக சொல்ல எழில், செழியன் ‘’நாங்க வேணும்னா கூட வரட்டுமா’’ என்று கேட்க ‘’நீங்க உங்க வேலையைப் பாருங்க… வண்டி மட்டும் ஏற்பாடு பண்ணுங்க… நாங்க போயிட்டு வரோம்’’ என்று சொல்கிறாள். பிறகு இனியாவை கூப்பிட கோவிலுக்கு என்பதால் இனியா ‘’வரணுமா’’ என்று கேட்க பாக்யா நீ இருந்தா பாட்டி இன்னும் கொஞ்சம் சந்தோஷப்படுவாங்க என்று சொல்கிறாள்.
செல்வி ‘’அக்கா நானும் வரேன்’’ என்று சொல்ல பாக்கியா ‘’நீ என்கூட வந்துட்டா வீட்டையும் ரெஸ்டாரன்ட்டையும் யார் பார்த்துக்கிறது… ஒழுங்கா நீ வீட்டை பார்த்துக்க’’ என்று திட்டுகிறாள். ‘’வரமாட்டேன்னு சொல்ற இனியா பாப்பாவ திட்டி கூட்டிட்டு போற… வரேன்னு சொல்ற என்னை விட்டுட்டு போற’’ என்று கிண்டல் செய்கிறாள் செல்வி.
போதையில் புலம்பும் கோபி!
மறுபக்கம் கோபி அளவுக்கு அதிகமாக குடித்து நண்பனிடம் வாழ்க்கையே போச்சு என புலம்புகிறான். இறுதியாக வீட்டுக்கு வந்து போதையில் கதவை தட்டி உள்ளே வந்த பிறகு மயூவிடம் கோபி பேச ராதிகா மயூவை ‘’ரூமுக்குள் போ’’ என அதட்டி அனுப்பி வைக்கிறாள்.
ராதிகா கலவரத்துக்குத் தயாராவது அவர் கண்களிலேயே தெரிகிறது.