Baakiyalakshmi : கோர்ட்டில் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட மயூ.. ராதிகாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
ஈஸ்வரிக்கு தண்டனையை நீதிபதி அறிவிக்கப்போக பாக்யா என்ட்ரி கொடுக்கிறாள்.
மயூ உண்மையைச் சொல்ல நீதிபதி அதிர்ச்சி அடைகிறார்
அடுத்து நடக்கப்போவது என்ன?!
மீண்டும் தொடங்கிய விசாரணை!
நீதிபதி மீண்டும் கூப்பிட கூண்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறாள் ஈஸ்வரி. கமலா ''நேத்தே தண்டனை என்னனு சொல்லிடுவாங்கன்னு நினைச்சேன்... இன்னைக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கும்னு தெரியும். ஆனா எவ்வளவு நாள்னு தான் இன்னும் தெரியல.. ஆயுள் தண்டனையா இருந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும்'' என்று பேசிக் கொள்கிறாள்.
நீதிபதி கொடுத்த அதிர்ச்சி!
இரு தரப்பு விவாதத்தையும் கேட்டு முடித்த பிறகு நீதிபதி, ''ஈஸ்வரி ராதிகாவை பிடித்து தள்ளி கொலை முயற்சி செய்தது உறுதியாகிறது'' என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் அவருக்கு அதிகபட்ச தண்டனையாக என தண்டனையை அறிவிக்க வர ராமமூர்த்தி ''அவ கண்டிப்பா எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டா... அவளை விட்டுடுங்க'' என்று அழுது புலம்புகிறார்.
ராமமூர்த்தியை வெளியேற்றிய போலீஸ்!
போலீஸ் ராமமூர்த்தியை அங்கிருந்து வெளியே அழைத்துச்செல்ல, நீதிபதி ஈஸ்வரிக்கான தண்டனையை ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு கூறுவதாக தள்ளி வைக்கிறார். உடனே கமலா ''அந்த ஆள் மட்டும் அமைதியா இருந்திருந்தா என்ன தண்டனைனு அறிவிச்சிருப்பாங்க'' என்று ஆவேசப்படுகிறாள்.
கோட்டுக்கு வந்த பாக்கியா!
ராமமூர்த்தி அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சு போச்சு என்று அழுது புலம்ப அங்கு வந்த பாக்கியா ''மாமா என்ன ஆச்சு'' என்று கேட்க எழில் ''பாட்டியை குற்றவாளினு சொல்லிட்டாங்க'' என்று சொன்னதும் அதிர்ச்சி ஆகும் பாக்கியா ''தீர்ப்பு சொல்லிட்டாங்களா'' என்று கேட்க ''இன்னும் இல்லை'' என்று சொல்கின்றனர்.
ரகசியம் பேசிய பாக்கியா!
பாக்கியா உள்ளே வந்து வழக்கறிஞரிடம் பேச ''தீர்ப்பு சொல்லும் போது இவ இல்லாம போயிடுவாளோனு நினைச்சேன்... நல்லவேள வந்துட்டா'' என்று கமலா சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க பாக்கியா வழக்கறிஞரிடம் ஏதோ பேசுவதை கேட்டு ''என்ன ரகசியம் பேசுறாங்க'' என்று குழப்பம் அடைகிறாள்.
மீண்டும் கூடிய கோர்ட்!
கோர்ட் மீண்டும் கூட நீதிபதி தீர்ப்பு சொல்ல தயாராக ஈஸ்வரி வழக்கறிஞர் இறுதியாக ''ஒரே ஒரு சாட்சியை விசாரிக்க அனுமதி வேண்டும்'' என்று கேட்க நீதிபதி ''தீர்ப்பு சொல்ற நேரத்துலதான் சாட்சியை கூட்டிட்டு வருவீங்களா'' என்று கோபப்படுகிறார். பிறகு அனுமதி கொடுக்க பாக்யா வெளியே வந்து மயூவை காரில் இருந்து அழைத்து வருகிறாள்.
அதிர்ச்சியான ராதிகா & கமலா!
கோர்ட்டில் ''மயூரா மயூரா மயூரா'' என பெயரை சொன்னதும் ராதிகா மற்றும் கமலா அதிர்ச்சி அடைகின்றனர். பாக்கியா உடன் மயூ வருவதைப் பார்த்து இன்னும் பேரதிர்ச்சி அடைகின்றனர். ராதிகா இ''து என்னால அனுமதிக்க முடியாது... அவ சின்ன பொண்ணு'' என்று சத்தம் போட நீதிபதி ''அமைதியா இருங்க'' என்று அடக்குகிறார். பிறகு மயூவை கோர்ட்டு கூண்டில் ஏற்றுகின்றனர். வழக்கறிஞர் விசாரணையை தொடங்க ''அவ சின்னப்பொண்ணு... அவள எதுக்கு விசாரிக்கிறீங்க'' என்று ராதிகா சத்தம் போட கமலா ''அதான் நடந்தது எல்லாத்தையும் நான் சொல்லிட்டேனே... அப்புறம் அவளை எதுக்கு விசாரிக்கணும்'' என்று கூச்சலிட ''அமைதியா இருக்கீங்களா இல்ல வெளிய அனுப்பவா'' என்று நீதிபதி அதிர்ச்சி கொடுக்கிறார்.
உண்மையை உடைத்த மயூ!
மயூவிடம் விசாரணை தொடங்க அவள் ''அம்மா தண்ணி குடிக்க போனாங்க... பாட்டி டைனிங் டேபிள்ல உட்காந்ந்துட்டு இருந்தாங்க... அம்மா கீழ இருந்த ஃபிளவர் கேஸ் தடுக்கி தான் விழுந்தாங்க... பாட்டி அம்மாவை பிடிக்கத்தான் ஓடி வந்தாங்க... ஆனா, அதுக்குள்ள அம்மா கீழ விழுந்துட்டாங்க'' என்று சொல்கிறாள். இதைக் கேட்டு பாக்கியாவின் குடும்பத்தினர் எல்லோரும் நிம்மதி அடைய ராதிகா மற்றும் கமலா அதிர்ச்சி அடைகின்றனர். ''குடும்பத்துல பிரச்சனை இருக்கலாம் அதுக்காக இப்படி பொய்யாவா கம்பளைண்ட் கொடுப்பீங்க'' என்று நீதிபதி கோபப்படுகிறார்.
பாக்யா ராக்ஸ்!