கோபி - ராதிகாவால் துரத்தப்படும் ஈஸ்வரி... அதிர்ந்துபோகும் பாக்யா? ‘பாக்கியலட்சுமி’ எபிசோட் ஹைலைட்ஸ்
சுருக்கம்
ராதிகா வீட்டில் எல்லோராலும் அவமானப்படுத்தப்படுகிறார் ஈஸ்வரி.
கோபியும் திட்டிய அதிர்ச்சியில் ஈஸ்வரி வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.
சாலையில் ஆதரவின்றி நிற்கும் மாமியார் ஈஸ்வரியை சந்திக்கிறார் மருமகள் பாக்கியலட்சுமி!
காட்சி - 1 : ஃப்ரீஸ்ஸாகி நின்ற பாக்யா!
செல்வி கூப்பிடுவதும் கேட்காமல், எழில் கூப்பிடுவதும் கேட்காமல் ஈஸ்வரி பற்றிய சிந்தனையில் அப்படியே பாக்யா கிச்சனில் ஃப்ரீசாகி நின்று கொண்டிருக்க எழில் பாக்யாவை உலுக்குகிறான். ‘’என்னமா ஆச்சு… பாட்டியை பத்தி யோசிச்சிட்டு இருக்கியா’’ என்று கேட்க ஆமாம் என்று சொல்கிறாள் பாக்யா. ‘’உன்னப்பத்தி யோசிக்காத அவங்கள பத்தி நீ எதுக்கு யோசிச்சிட்டு இருக்க… நீ என்னதான் அம்மா மாதிரி பாத்துக்கிட்டாலும், கடைசியா என் பையன்தான் வேணும்னு விட்டுட்டு போயிடுச்சுல்ல’’ என்று செல்வி பாக்கியாவைத் திட்டுகிறாள். ‘’சும்மா இரு செல்வி… அவங்க என்னுடைய அத்தை’’ என்று செல்வியின் வாயை அடைக்கிறாள் பாக்யா.
காட்சி - 2 : வீட்டுக்கு வந்த ராதிகா, அவமானப்பட்ட ஈஸ்வரி!
கோபி, ராதிகாவை ஆஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து கதவை திறக்க ஈஸ்வரி உட்கார்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். உள்ளே வந்த கமலா ‘’இன்னும் எதுக்கு நீ இங்க இருக்க? பாவி பாவி என் வீட்டு வாரிச அநியாயமா கொன்னுட்ட.. இன்னும் யாரை கொல்றதுக்காக இங்கே இருக்க ராதிகாவையா?’’ என்று கேள்வி கேட்க ஈஸ்வரி ‘’வாயை மூடு நான் ஒன்னும் பண்ணல’’ என்று சத்தம் போடுகிறாள். ‘’போதும் நிறுத்துங்க எல்லாத்தையும் நீங்கதான் பண்ணீங்க, என் குழந்தையை அநியாயமா கொன்னுட்டீங்க’’ என்று ராதிகா கோபப்பட ஈஸ்வரி ‘’நான் எதுவும் பண்ணல… குழந்தையை கொல்ற அளவுக்கு நான் ஒன்னும் மோசமானவ கிடையாது’’ என்று பதிலடி கொடுக்கிறாள். கோபியிடம் ஈஸ்வரி ‘’இவங்க ரெண்டு பேரும் என்னென்னமோ பேசுறாங்க… நீ ஆஸ்பிட்டல்ல நின்ன மாதிரியே அமைதியா நிக்கிறியேடா… அம்மா அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்கன்னு சொல்லுடா’’ என்று கண்ணீர் விட ‘’என்னமா சொல்ல சொல்றீங்க… எல்லாம் உங்களால தான்… என் குழந்தையை கொன்னுட்டீங்க’’ என்று சொல்ல வரும் கோபி ‘’இல்லாம பண்ணிட்டீங்க’’ என்று வார்த்தையை மாற்றி பேசி ‘’போய் உட்காருங்க மா’’ என்கிறான்.
‘’நீங்க இப்படி எல்லாம் பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கலமா.. தயவு செஞ்சி வெளில போயிடுங்கமா’’
கோபி தன் அம்மா ஈஸ்வரியிடம்
கமலா ‘’என்ன மாப்ள போய் உட்காருங்கன்னு சொல்றீங்க.. இன்னும் எதுக்கு இந்த அம்மா இந்த வீட்ல இருக்கணும் அடுத்து யாரை கொல்றதுக்கு ராதிகாவையா இல்ல என்னையா?’’ என்று ஆவேசப்படுகிறாள். ‘’இனிமேலயும் நீ இந்த வீட்ல இருக்க கூடாது… வெளியே போ’’ என்று சொல்லி கோபப்பட கோபியும் ‘’நீங்க இப்படி எல்லாம் பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கலமா.. தயவு செஞ்சி வெளில போயிடுங்கமா’’ என்று சொல்ல ஈஸ்வரி உடைந்து போய் ரூமுக்குள் செல்கிறாள்.
வெளியே போறியா? கழுத்தைப் புடிச்சு தள்ளவா?
ரூமுக்கு போன ஈஸ்வரி எல்லோரும் பேசுவதை நினைத்து கண்ணீர் விட்டு அழ வெளியே நின்றிருந்த கமலா ‘’கதவ சாத்திட்டு என்ன பண்ற… வெளியே போறியா இல்ல நானே கழுத்தை புடிச்சு தள்ளவா’’ என்று ஆவேசப்படுகிறாள். இதையடுத்து ஈஸ்வரி தனது சூட்கேஸை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வருகிறார்.
காட்சி - 3 : ரோட்டுக்கு வந்த ஈஸ்வரி!
வெளியே வந்த ஈஸ்வரி பாக்யா வீட்டுக்குச் செல்ல முடியாமல் ரோட்டில் கண்ணீர் விட்டபடி நிற்கிறாள். வீட்டுக்குள், கோபி அம்மாவை தடுக்கவும் முடியாமல் ராதிகாவை எதிர்த்து நிற்கவும் முடியாமல் கண்ணீர் விட்டபடி நிற்கிறான்.
காட்சி - 4 : ஓடி வந்த பாக்கியா, உடைந்து போன ஈஸ்வரி!
தலைவலியால் அப்படியே உட்கார்ந்து இருக்கும் பாக்யாவுக்கு ஈஸ்வரி கூப்பிடுவது போல் கேட்க வெளியே ஓடிவந்து பார்க்கிறாள். இங்கும் அங்கும் பார்த்த பாக்யா கடைசியாக ஈஸ்வரி ரோட்டில் கையில் சூட்கேஸூடன் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். ‘’அத்தை என்னாச்சு’’ என்று கேட்க ஈஸ்வரி தலையில் அடித்துக் கொண்டு கண்ணீர் விட பாக்கியா கண்களைத் துடைத்துவிட்டு ‘’அழாதீங்க அத்தை’’ என்று ஆறுதல் சொல்ல பாக்கியாவை கட்டிப்பிடித்து கண் கலங்குகிறாள் ஈஸ்வரி.
மாமியாரின் கண்ணீரும், மருமகளின் ஆறுதலமாக முடிந்திருக்கிறது எபிசோட்.