Baakiyalakshmi : கோபி சொன்ன சாட்சி… ஈஸ்வரிக்கு கிடைத்த தண்டனை!
பாக்கியா சொன்ன சாட்சியால் ''கோபி, ராதிகா கல்யாணத்துக்கு பிறகும் இவங்களுக்கு இடையேயான உறவு வலுவானதாக இருந்திருக்கு.. அதனாலதான் ஈஸ்வரி இப்படி செஞ்சிருக்காங்க'' என்று வழக்கறிஞர் பேசி அதிர்ச்சி கொடுத்து பாக்கியாவை அனுப்பி வைக்கிறார்.
கோபியிடம் நடந்த விசாரணை!
அடுத்ததாக கோபியிடம் விசாரணை செய்யும்போது ''உங்க அம்மாதான் ராதிகாவை பிடிச்சு தள்ளுனாங்களா'' என்று கேட்க ''எனக்கு தெரியாது... நான் வீட்டில் இல்லை'' என்று சொல்கிறான். பிறகு ''உங்ககிட்ட இந்த குழந்தை வேண்டாம்னு பல தடவை சொல்லி இருக்காங்களா'' என்று கேட்க கோபி ''எங்க அம்மா என்னுடைய வயசு, என் மேல இருக்க அக்கறைல சொன்னாங்க'' என்று சொல்ல ''ஈஸ்வரி பலமுறை இந்த குழந்தை வேண்டாம்னு சொன்னது இதன் மூலம் உறுதியாகிறது'' என வழக்கறிஞர் பதிவு செய்கிறார்.
நீதிபதி கொடுத்த தீர்ப்பு!
நீதிபதி விசாரணையின் முடிவில் ''ஈஸ்வரி தவறு செய்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளது... ஆகவே அடுத்த விசாரணை வரும் வரை ஈஸ்வரியை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடுகிறேன்'' என நீதிபதி சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைய ஈஸ்வரி நான் எதுவும் பண்ணல என்று அழுகிறாள்.
கோபியின் மீது கொலை வெறி!
எழில் கோபியின் மீது கோபப்பட பாக்கியா ''அவரை திருத்துறது நம்ம வேலை கிடையாது... அத்தைய வெளியே கொண்டு வரணும்... அதுக்கான வேலையை செய்யலாம்'' என்று சொல்கிறாள். ராமமூர்த்தி உடைந்து போய் அழுகிறார். ''எனக்கு ஈஸ்வரிய பாக்கணும் அவ கிட்ட பேசணும்'' என்று சொல்ல எழில் ''நான் அதுக்கான ஏற்பாடு செய்றேன்'' என்று சொல்லி வழக்கறிஞரை அழைத்துக் கொண்டு செல்கிறான்.
ராதிகாவை பார்த்து பாக்கியா கேட்ட கேள்வி!
எழில் சென்று ரொம்ப நேரமாகியும் திரும்ப வராததால் பாக்கியா அவனைப் பார்க்க கிளம்பி வர எதிரே ராதிகாவும் கமலாவும் வர ''உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? அத்தை இப்படி எல்லாம் பண்ணி இருக்கவே மாட்டாங்க... அவங்க பையன் மேல அவங்க உயிரையே வச்சிருக்காங்க... அப்படி இருக்கும்போது அவங்க பையனுக்கு துரோகம் பண்ணுவாங்களா? உங்கள நான் என்னமோ நெனச்சேன்.. ஆனா நேரம் பார்த்து பழி வாங்கிட்டீங்க'' என்று திட்டுகிறாள். ராதிகா ''குழந்தையை இழந்த வலி எனக்குத்தான் தெரியும்'' என்று திரும்பப் பேச அங்கு வந்த எழில் ''இவங்ககிட்ட என்னமா பேச்சு... வா பாட்டிய பார்க்கலாம்னு சொல்லிட்டாங்க'' என்று அழைத்துச் செல்கிறான்.
பாக்யாவை பார்க்க ஆசைப்பட்ட ஈஸ்வரி!
ஈஸ்வரியை பார்ப்பதற்காக எல்லோரும் நின்று கொண்டிருக்க பாக்கியா உள்ள போய் ''அத்தைக்கு தைரியம் சொல்லுங்க அழாதீங்க'' என்று சொல்கிறாள். வெளியே வந்த கான்ஸ்டபிள் நீங்களாம் ஈஸ்வரி குடும்பமா என்று கேட்க ஆமாம் என்று சொன்னதும் ''ராமமூர்த்தியை நீங்க போய் பாருங்க மாமா'' என்று பாக்கியா அனுப்பி வைக்க ''கான்ஸ்டபிள் இங்க பாக்கியா யாரு? அவங்கள தான் ஈஸ்வரி பார்க்கணும்னு சொன்னாங்க'' என்று சொல்ல ராமமூர்த்தி நீ போய் பாத்துட்டு வாம்மா என்று அனுப்பி வைக்கிறார்.
கண்கலங்கிய ஈஸ்வரி, ஆறுதல் சொன்ன பாக்கியா!
பாக்யாவை பார்த்ததும் ஈஸ்வரி ''நான் காலம் முழுக்க இங்கதான் இருக்கணுமா... ஒரு நாள் கூட என்னால ஜெயில்ல இருக்க முடியல'' என்று கண்ணீர் விட்டு அழ பாக்யா ''கண்டிப்பா அடுத்த ஹியரிங்ல உங்களை வெளியே எடுத்துடலாம்.. நீங்க எந்த தப்பும் பண்ணலன்னு நிரூபிச்சிடலாம்'' என்று ஆறுதல் சொல்கிறாள். நீங்க தைரியமா இருங்க என்று பேசுகிறாள்.
ஈஸ்வரி இனிமே வர மாட்டா... அழுது புலம்பும் ராமமூர்த்தி!
வீட்டுக்கு வந்த பாக்யாவின் குடும்பத்தினர் ஆளுக்கு ஒரு பக்கமாக நின்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்க ராமமூர்த்தி ''இனிமே ஈஸ்வரி வரமாட்டா அவ புள்ளையோட போனா அப்படியே ஜெயிலுக்கு போயிட்டா... அவ ஜெயில்லயே இருந்து வருத்தப்பட்டு சாக வேண்டியதுதான்... அவள நினைச்சு நான் இங்க சாக வேண்டியதுதான்'' என்று கண்ணீர் விட்டு அழுது புலம்ப குடும்பத்தினர் எல்லோரும் ஆறுதல் சொல்கின்றனர். ''தாத்தா அழாதீங்க உங்களுக்கு ஏதாவது ஆகிட போகுது'' என்று சொல்ல ''எனக்கு ஏதாவது ஆகட்டும்... அதைத்தான் நானும் ஆசைப்படுறேன்'' என்று அழுகிறார்.
அடுத்ததாக பாக்கியா வெளியே சென்ற நிலையில் பெண்மணி ஒருவர் ஊரிலிருந்து ''இப்பதான் வந்தேன்... பக்கத்துல இருக்கவங்க நடந்த விஷயங்களை சொன்னாங்க... ஈஸ்வரி அம்மா வெளிய வந்துட்டாங்களா'' என்று கேட்க ''பாக்கியா இல்லை'' என்று சொல்ல ''அப்போ அவங்கதான் இப்படி பண்ணாங்களா'' என்று சொல்ல வர பாக்யா ''அத்தை அப்படி கண்டிப்பா பண்ணி இருக்க மாட்டாங்க'' என்று சொல்கிறாள்.
ஈஸ்வரி ஜெயிலுக்குள் இருப்பதும், வெளியில் இவர்கள் அழுவதும் என ஒரே அழுகாச்சியாக இருக்கிறது 'பாக்கியலட்சுமி'!