Baakiyalakshmi : பாக்கியாவால் ஜெயிலில் இருந்து வெளியே வந்த ஈஸ்வரி.. கமலாவுக்கு வேட்டு வைத்த ராதிகா!
வார்னிங் கொடுத்த நீதிபதி!
‘’வீட்டில் பிரச்சனை இருந்தால் அதை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்… இப்படி பொய் கேஸ் கொடுக்கக் கூடாது’’ என்று கோபப்படும் நீதிபதி இன்ஸ்பெக்டரையும் ‘’கம்ப்ளெய்ன்ட் வந்தா அதை விசாரிக்க மாட்டீங்களா’’ என்று கடிந்து கொள்கிறார். இதனால் கமலா பேரதிர்ச்சி அடைகிறாள்.
‘’மயூராவின் சாட்சிக்குப் பிறகு இந்த வழக்கில் பெரிய திருப்பம் உருவாகியுள்ளது.. ஈஸ்வரி குற்றம் அற்றவர் என்பது நிரூபணம் ஆவதால் அவரை விடுதலை செய்து இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது’’ என உத்தரவிட பாக்கியாவின் குடும்பத்தினர் எல்லோரும் சந்தோஷமாக கமலா அதிர்ச்சியாக ராதிகா, கமலாவை முறைக்கிறாள்.
கோபத்தைக் காட்டிய ராதிகா!
ராமமூர்த்தி ‘’ரொம்ப நன்றிமா’’ என்று பாக்யாவை கையெடுத்து கும்பிட பாக்யா ‘’என்ன மாமா நீங்க இப்படி எல்லாம் பண்றீங்க’’ என்று கூல் செய்கிறாள். பிறகு ராதிகா கமலா மற்றும் மயூரா என மூவரும் கோர்ட்டில் இருந்து வெளியே வர மயூவை பார்த்த பாக்கியா நன்றி சொல்வதற்காக செல்ல ராதிகா ‘’யாரை கேட்டு குழந்தையை கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க’’ என்று கோபப்படுகிறாள். கமலா ‘’அந்த அம்மாவை வெளியே எடுக்க எந்த எல்லைக்கும் போவீங்களா? உங்க டிராமாவுல குழந்தையையும் சேர்த்து பொய் சாட்சி சொல்ல வச்சிருக்கீங்க’’ என்று கோபப்படுகிறாள். ‘’கோர்ட்டுன்றதால அமைதியா போறேன்’’ என்று ராதிகா அங்கிருந்து கிளம்புகிறாள். பிறகு கமலாவிடம் ‘’இப்போ உனக்கு சந்தோஷமா என்னை பொய்க்காரியாக்கிட்ட.. வீட்டு பக்கமே வந்துடாத’’ என்று கோபத்தை காட்டுகிறாள்.
ஈஸ்வரி வெளியே வர பாக்யாவை பிடித்து கண்கலங்க எல்லோரும் ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்ல கோபி ஓரமாக நின்று அம்மா வெளியே வந்ததை கண்ணீர் விட்டு சந்தோஷப்பட்டு பார்க்கிறான்.
ஆரத்தியோடு வரவேற்ற குடும்பம்!
வீட்டில் உள்ள ஜெனி, இனியா, அமிர்தா ஆகியோர் ஆவலுடன் காத்திருந்து ஈஸ்வரிக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்கின்றனர். வீட்டுக்கு வந்த ஈஸ்வரி மீண்டும் வருத்தப்பட பாக்யா ஆறுதல் சொல்லி குளிச்சிட்டு வாங்க என்று அனுப்பி வைக்கிறாள்.
ரூமுக்குள் வந்ததும் ஈஸ்வரி ‘’நீ இல்லனா நான் உள்ளவே கிடந்து செத்துப் போய் இருப்பேன்’’ என்று கலங்க ஈஸ்வரி ‘’அப்படியெல்லாம் நடக்க விட்டிருக்க மாட்டேன்’’ என்று ஆறுதல் சொல்கிறாள்.
பூரித்துப்போன ஈஸ்வரி!
‘’உலகத்துல உன்னை மாதிரி மருமக யாருக்குமே கிடைக்க மாட்டா… நீ எனக்கு மருமகளா கிடைக்க நான் புண்ணியம் பண்ணி இருக்கணும்’’ என சந்தோஷப்படுகிறாள்!
பாக்கியா ஹேப்பி அண்ணாச்சி!