‘’நீ எல்லாம் ஒரு பொம்பளையா?’’ அம்மாவையே அவமானப்படுத்திய கோபி - ‘பாக்கியலட்சுமி’ எபிசோட் ஹைலைட்ஸ்!
கோபி ராதிகாவை வந்து பார்த்து நலம் விசாரிக்க, ‘’உங்ககிட்ட ஒன்னே ஒன்னுதான் சொல்லணும்… எனக்கு உங்க முகத்தை பார்க்கவே பிடிக்கல தயவுசெஞ்சி வெளியே போயிடுங்க’’ என்று திட்டி அனுப்புகிறாள் ராதிகா.
கோபி வெளியே வர கோபியின் அம்மா ஈஸ்வரி ‘’ராதிகாவுக்கு எப்படி இருக்குடா?’’ என்று நலம் விசாரிக்க ‘’கோபி இருக்கா’’ என்று பதில் சொல்ல ஈஸ்வரி உள்ளே வந்து ராதிகாவை பார்த்து, ‘’இப்ப எப்படி இருக்கு ராதிகா… வலியெல்லாம் பரவாயில்லையா’’ என்று கையைப் பிடிக்க ராதிகா உதறி தள்ளுகிறாள்.
'’பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறீங்க’’ என்று ராதிகாவின் அம்மா கமலா, ஈஸ்வரியை பிடித்து திட்ட தொடங்க கோபி எதுவும் பேசாமல் அப்படியே நிற்கிறான். ‘’நான் என்ன தப்பு பண்ணேன்’’ என்று ஈஸ்வரி கேட்க ‘’ஆரம்பத்திலிருந்து இந்த குழந்தை வேண்டாம் வேண்டாம்னு நீங்கதானே சொல்லிட்டு இருந்தீங்க… இப்போ அவளைப் பிடிச்சித் தள்ளி கருவ கலைச்சிட்டீங்க’’ என்று சொல்கிறான். ஈஸ்வரி ‘’நான் எதுவும் பண்ணல’’ என்று சொல்ல ராதிகா ‘’நீங்க சொன்ன மாதிரியே என் கரு கலைஞ்சு போச்சு… என் குழந்தையை கொன்னுட்டீங்க… இப்போ உங்களுக்கு சந்தோஷமா உங்க மூத்த மருமகளுக்கு எந்த அவமானமும் கிடையாது’’ என்று சொல்கிறாள். ராதிகா ஈஸ்வரியை வெளிய போங்க என்று சத்தம் போடுகிறாள். கோபி அம்மாவைத்திட்டுவதைப் பார்த்தும் எதுவுமே சொல்லாமல் நிற்கிறான்.
ஈஸ்வரி வெளியே வர கோபி பின்னாடியே வர கோபியிடம் ‘’நான் எதுவும் பண்ணலப்பா நீயாவது என்னை நம்பு'' என்று சொல்ல ‘’ஆரம்பத்தில் இருந்தே இந்த குழந்தையை கலைச்சிடு கலைச்சிடுன்னு சொல்லிட்டே இருந்தீங்க. பிடிக்காத ஒரு வாழ்க்கையில் இருந்து வெளியே வந்து புடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கை அமைச்சுக்கிட்டு குழந்தை பெத்துக்கறது ஒன்னும் தப்பு இல்லையே.. உலகம் முழுக்க இது நடந்துட்டு தானே இருக்கு… என்னமோ நான் கொலை குத்தம் பண்ண மாதிரி எல்லாரும் கூட்டு சேர்ந்து அவமானப்படுத்தி வெளியே அனுப்புனீங்க. இப்போ நீங்க ஆசைப்பட்ட மாதிரியே இந்த குழந்தை இல்லாம போயிடுச்சு… என் குழந்தை செத்துப் போச்சு… இப்போ உங்களுக்கு எந்த கௌரவ குறைச்சலும் கிடையாது… ரொம்ப சந்தோஷமா நீங்க நினைச்ச மாதிரியே நடந்துருச்சு’’ என்று தாயையே பழிசொல்கிறான் கோபி.
மறுபக்கம் ஈஸ்வரியை நினைத்து வருத்தமாக இருக்கும் பாக்கியா ‘’நான் போய் அத்தையை பார்த்துட்டு வந்துடுறேன்’’ என்று ராதிகா வீட்டுக்கு வந்து கதவைத்தட்ட, ஈஸ்வரி கதவை திறக்காததால் ‘’போன் செய்து எங்க இருக்கீங்க’’ என்று கேட்க ஈஸ்வரி நடந்த விஷயத்தை எதுவும் சொல்லாமல் அழுதபடி பேசிவிட்டு போனை வைக்கிறார்.
இதனால் அதிர்ச்சியாகும் பாக்யா வீட்டுக்கு வந்து செழியனை கூப்பிட்டு ‘’உங்க அப்பாவுக்கு போன் போட்டு பாட்டி எங்க இருக்காங்கன்னு கேளு’’ என்று சொல்ல செழியன் ‘’அவருக்கு எதுக்கு போன் பண்ணனும்… நான் பண்ண மாட்டேன்’’ என்று சொல்ல பாக்கியா ‘’நீ பாட்டி பத்தி கேட்டுட்டு போனை வச்சுடு… வேற எதுவும் பேச வேண்டாம்’’ என்று கெஞ்சி கேட்டு பேச வைக்கிறார்.
‘’பாட்டி இங்கதான் இருந்தாங்க… இப்ப எங்கேயாவது பக்கத்துல போய் இருப்பாங்க’’ என்று கோபி செழியனிடம் சொல்ல சரிப்பா என்று போனை வைத்து விடுகிறான். அத்தை எதுக்கு அப்போ அழுதாங்க என்று பாக்கியா யோசனையிலேயே இருக்கிறாள். ஈஸ்வரியின் கதை என்னவாகும் என்பதோடு முடிந்திருக்கிறது பாக்யலட்சுமியின் இன்றைய எபிசோட்!