பாக்யாவால் ஈஸ்வரிக்கு மனமாற்றம்… ராதிகாவால் கோபிக்கு 'போதை' மாற்றம்- ‘பாக்கியலட்சுமி’ ஹைலைட்ஸ்!
ராதிகா வீட்டைவிட்டுப்போங்க எனச்சொன்னதால் குடித்துவிட்டு பாரில் பிரச்சனை செய்துகொண்டிருந்த கோபியை எழிலும், செழியனும் ராதிகா வீட்டில் டிராப் செய்கிறார்கள்
செழியன் அப்பா ஏன்மா இப்படியெல்லாம் பண்றாரு என அழ பாக்கியலட்சுமி அவனைத் தேற்றுகிறாள்.
கமலா ‘’இந்த குடிகாரனையா நீ லவ் பண்ண’’ என ராதிகாவின் கோபத்தைக் கிளறுகிறாள்.
செழியன் எழிலை பக்கத்தில் உட்கார சொல்ல எழில் ‘’என்னாலலாம் உட்கார முடியாது’’ என்று கோபப்பட ‘’அப்ப நீ கார் ஓட்டு’’ என்று சொல்லி செழியன் கோபி பக்கத்தில் உட்கார்ந்து வருகிறான். காரில் கோபி ‘’யார் நீங்க’’ என்று புலம்பியபடி வருகிறான். ‘’ஓ பார்ல வேலை செய்ற பசங்களா’’ என்று கேட்க எழில் கடுப்பாகிறான்.
பாக்யாவின் போன் கால், சமாளித்த எழில்!
காரில் கோபியோடு எழிலும், செழியனும் போய்க்கொண்டிருக்க பாக்கியா போன் செய்ய எழில் போனை எடுக்க ‘நாங்க கும்பகோணம் வந்துட்டோம்… பாட்டி இங்க வந்த பிறகு ஓரளவுக்கு சரியாகிட்டாங்க'’ என்று சொல்கிறாள். கோபி விடாமல் புலம்பிக்கொண்டிருக்க பாக்கியா ‘’எங்க இருக்கீங்க’’ என்று கேட்க ‘’நானும் செழியனும் வெளியில கார்ல போயிட்டு இருக்கோம்’’ என்று சொல்ல செழியன் பெயரை கேட்டதும் கோபி ‘’செழியன் என் பையன்’’ என்று புலம்புகிறான்.
பாக்யா கேட்ட கேள்வி!
‘’என்னடா உங்க அப்பா குரல் மாதிரி இருக்கு’’ என்று பாக்யா கேட்க, எழில் கீழே இறங்கி கோபி போதையில் பிரச்சனை செய்து கொண்டிருந்த விஷயத்தையும் வீட்டில் டிராப் செய்ய அழைத்துச் செல்லும் விஷயத்தையும் சொல்கிறான்.
கமலாவை கலாய்க்கும் கோபி!
செழியன் கோபியை கூட்டி வந்து வீட்டில் டிராப் செய்து விட்டு கிளம்ப ராதிகா ‘’கோபி குடிச்சு இருக்கீங்களா?’’ என்று கேட்க கமலா ‘’பார்த்தாலே தெரியலையா’’ என்று சொல்கிறாள். கமலா ராதிகாவிடம் ‘’இந்த ஆளையா நீ காதலிச்ச? இவர் இப்படி இருப்பார்னு தெரிஞ்சிருந்தா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கவே மாட்டேன்’’ என்கிறாள்.
கோபி ‘’யாருமா நீ தொண தொணன்னு பேசிகிட்டு இருக்க… வாயை கொஞ்சம் மூடு’’ என்கிறான். ‘’நான் என்னைக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணேனோ அன்னிக்கு பிரச்சனை ஆரம்பிச்சுருச்சு… நானும் ராதிகாவும் சந்தோஷமா இருந்தோம்… அவ அம்மா அந்த கமலா வந்தா... அன்னையிலிருந்து ஒரே பிரச்சனைதான். பிசாசு பிசாசு’’ என்று புலம்ப இதைக் கேட்டு கமலா ‘’எனக்கு இதெல்லாம் தேவைதான்’’ என்று கோபப்படுகிறாள்.
செழியனின் அழுகை!
அடுத்ததாக பாக்கியா போன் செய்ய செழியன் ‘’ஏம்மா அவரு இப்படி மாறிட்டாரு’’ என்று கோபியை நினைத்து அழ பாக்யா ‘’உங்க அப்பா ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது. அவர் என்ன பண்றாருன்னு தெரிஞ்சுதான் பண்றாரு. அவர் மத்தவங்கள பத்தி யோசிக்காம பண்றதுக்கு நாம என்ன பண்ண முடியும்’’ என்று ஆறுதல் சொல்லி எழிலிடம் ‘’செழியனை கொஞ்சம் பாத்துக்கோ’’ என்று சொல்கிறாள்.
பாக்கியா கொடுக்கும் சர்ப்ரைஸ்!
அடுத்ததாக கும்பகோணத்தில் பாக்யா, ஈஸ்வரி, ராமமூர்த்தி, இனியா ஆகியோர் கோயிலுக்கு வந்து கோபுர தரிசனம் செய்கின்றனர். அதன் பிறகு எல்லோரும் ஓர் இடத்தில் உட்கார்ந்து இருக்கின்றனர். திடீரென பாக்யாவுக்கு ஒரு போன் கால் வர அவள் வெளியே எழுந்து வந்து ஈஸ்வரி சொன்ன சாவித்திரியை அழைத்துக்கொண்டு உள்ளே வருகிறாள்.
ஈஸ்வரி சாவித்திரியை அடையாளம் தெரியாமல் இருக்க அதன் பிறகு சாவித்திரி நான்தான் உன்னோட ஸ்கூல் பிரண்ட் என அறிமுகம் செய்து கொள்ள சந்தோஷத்தில் ஈஸ்வரி தனது தோழியை கட்டிப்பிடித்துக் கொள்கிறாள்.
பாக்யாவின் ஈஸ்வரியின் மனதில் மாற்றத்தை உண்டு பண்ண, ராதிகா கோபியின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டுபண்ணப்போகிறாள்!