Baakiyalakshmi : கைது செய்யப்பட்ட ஈஸ்வரி... கோபியை அடிக்கப்பாய்ந்த அப்பா!
ஈஸ்வரி கைது செய்யப்பட்டதும் கோபித்தில் கோபியை அடிக்கிறார் அப்பா ராமமூர்த்தி.
கோபி ராதிகாதான் அம்மாவின் கைதுக்கு காரணம் என சண்டைபோட கமலா தான்தான் கம்ப்ளெய்ன்ட் கொடுத்ததாகச் சொல்கிறாள்.
ஈஸ்வரி நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட அடுத்து நடக்கப்போவது என்ன?!
ராமமூர்த்தியின் ஆவேசம்!
ராமமூர்த்தி கோபியை போட்டு அடி வெளுத்து எடுப்பதோடு ''எல்லாரையும் விட்டுட்டு உன்னையே நம்பி உன் கூட வந்தா... அவளுக்கு இப்படி ஒரு துரோகம் பண்ணிட்டியே... நீ நல்லாவே இருக்க மாட்ட'' என்று கோபப்படுகிறார். கோபி ''அப்பா நான் எதுவும் பண்ணல'' என்று சொல்ல வர ''அந்த வார்த்தையை சொல்லாத... இனிமே நீ எனக்கு புள்ளையும் இல்ல நான் உனக்கு அப்பாவும் இல்ல'' என்று ஆவேசப்படுகிறார்.
இனியாவின் மீது சத்தியம்!
இனியா ''உங்களுக்கு பாட்டி மேல கொஞ்சம் கூட பாசமே இல்லையாப்பா... பாட்டி மேல மட்டும் இல்ல யார் மேலயும் பாசம் இல்ல'' என்று கோபப்பட கோபி ''நான் எதுவும் பண்ணலடா இது உன் மேல சத்தியம்'' என்று சத்தியம் செய்ய வர எழில் கையைப் பிடித்து ''பண்றதெல்லாம் பண்ணிட்டு பொய் சத்தியம் செய்யப் போறீங்களா'' என்று கோபப்பட்டு திட்டுகிறான். ''திரும்பவும் நான் எதுவும் பண்ணலப்பா'' என்று சொல்ல வர ராமமூர்த்தி கோபியை திட்டி அடிக்க போக பாக்யா தடுத்து நிறுத்தி ''இப்போ அத்தையை வெளியே கொண்டு வரதுதான் முக்கியம்'' என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பி செல்கின்றனர்.
ராதிகாவிடம் கோபத்தை கொட்டிய கோபி!
நேராக கோபமாக வீட்டுக்கு வந்த கோபி கதவை வேகமாக தட்ட ராதிகா கதவை திறக்க ''இதுக்குத்தான் வெளியே போய் நின்னுகிட்டு இருந்தியா... ஆபீஸ் போற மாதிரி போய் கம்ப்ளெய்ன்ட் கொடுத்துட்டு என் அம்மாவ கைது பண்ணுறது பார்க்கிறதுக்காக வெளியே போய் நின்னுகிட்டு இருந்தியா... இவ்வளவுதானா நீ'' என்று ஆவேசப்படுகிறான். கோபி ராதிகாவிடம் சத்தம் போடுவதைப் பார்த்து வெளியே வந்த கமலா ''அவகிட்ட எதுக்கு சத்தம் போட்டுட்டு இருக்கீங்க'' என்று கேட்க ''நானும் ராதிகாவும் பேசிட்டு இருக்கோம்... இடையில நீங்க வராதீங்க'' என்று கோபப்படுகிறான் கோபி.
கமலா கொடுத்த அதிர்ச்சி!
''ராதிகா எதுவும் செய்யல... அவளுக்கு இந்த விஷயம் தெரிய கூட தெரியாது... உங்க அம்மா மேல கம்ப்ளைன்ட் கொடுத்தது நான் தான். எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசுங்க'' என்று அதிர்ச்சி கொடுக்கிறாள் கமலா. ''என் அம்மாவுக்கு மட்டும் ஏதாச்சு ஆச்சு இங்க யாரையும் சும்மா விடமாட்டேன்... கொன்னு போட்றுவேன்'' என்று மிரட்ட மயூ வீட்டுக்கு வர கோபி பேச்சை நிறுத்தி விடுகிறான். ''ஸ்டேஷனுக்கு போய் பார்த்துட்டு வந்து வச்சிக்கிறேன்'' என்று கிளம்பி செல்ல கமலா ''ஸ்டேஷன்ல இவரால ஒன்னும் பண்ண முடியாது'' என்று நக்கலாக பேசுகிறாள்.
கலங்கி துடிக்கும் ராமமூர்த்தி!
ஸ்டேஷனுக்கு வெளியே ராமமூர்த்தி கலங்கியபடி நின்று கொண்டிருக்க பாக்யா, எழில் ஆகியோர் ஆறுதல் சொல்கின்றனர். இந்த நேரம் பார்த்து கோபி ஈஸ்வரி பார்க்க ஸ்டேஷனுக்கு வர ராமமூர்த்தி ''நீ அவளை பார்க்கக்கூடாது'' என்று ஆவேசப்பட்டு அடிக்க பாய்கிறார். பிறகு கோபி ஸ்டேஷனுக்குள் உள்ளே சென்று இன்ஸ்பெக்டரிடம் ''என் அம்மாவை பார்த்து பேசணும்'' என்று சொல்ல ''அவர் இப்போ பாத்து பேச முடியாது'' என்று சொல்லி விடுகிறார்.
கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் ஈஸ்வரி!
ஈஸ்வரியை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல வண்டியை ரெடி பண்ண சொல்லி கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல ஈஸ்வரி ராமமூர்த்தியை பார்த்ததும் ''நான் எதுவும் பண்ணலங்க'' என்று அழுது துடிக்க கோபி தூரமாக நின்று கலங்கி நிற்கிறான்.
உடைந்து போன ராமமூர்த்தி!
ராமமூர்த்தியை வீட்டிற்கு அழைத்து வர அவர் அப்படியே உடைந்து போய் வருகிறார். செல்வி ''அம்மா வசதியா வாழ்ந்து பழகிட்டாங்க... அவங்கள போய் ஜெயில்ல கொண்டு போய் வச்சுட்டாங்களே'' என்று சொல்ல பாக்யா கண்ணீர் விட்டு அழுகிறாள்.
ஈஸ்வரியை காப்பாற்றப்போவது பாக்யாவா அல்லது கோபியா?!