Baakiyalakshmi : ஈஸ்வரியிடம் நடக்கும் விசாரணை... ஆக்ரோஷமான கோபி, அரண்டுபோன கமலா!
பாட்டியை அரெஸ்ட் பண்ணிட்டாங்களே என பாக்கியாவின் வீடே அழுது புலம்புகிறது.
டென்ஷனில் கோபி ராதிகாவின் வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் தூக்கிப்போட்டு கமலாவின் கழுத்தையும் பிடிக்கிறான்.
ஈஸ்வரியிடம் விசாரணையைத் தொடங்குகிறது போலீஸ்!
கதறி துடிக்கும் பாக்யாவின் குடும்பம்!
வீட்டுக்கு வந்த ராமமூர்த்தி ஒரு பக்கம் உடைந்து அழ இன்னொரு பக்கம் அதை பார்க்க முடியாமல் பாக்கியா கண்ணீர் விட்டு கலங்கியபடி நிற்க ஈஸ்வரியை நினைத்து இனியா, செழியன் என ஆளாளுக்கு கண் கலங்குகின்றனர். அம்மாவை ஜெயிலுக்குள் அடைத்த ஆக்ரோஷத்தில் வீட்டுக்கு வரும் கோபி கதவைத் தட்ட ராதிகா, கமலா கதவை திறக்காமல் இருக்கும் நிலையில் காலால் எட்டு உதைத்து கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைகிறான். வீட்டில் உள்ள பொருட்களை தூக்கிப்போட்டு உடைக்கும் கோபி இப்போ உங்களுக்கு சந்தோஷமா என தனது கோபத்தை கொட்டி தீர்க்கிறான்.
ராதிகா சொன்ன வார்த்தை… கோபிக்கு ஏகிறிய பிபீ!
‘’உங்க அம்மா செஞ்ச தப்புக்கான தண்டனையை தான் அனுபவிக்கிறாங்க’’ என்று ராதிகா சொல்ல கோபிக்கு பிபீ அதிகமாகிறது. ‘’உனக்காக பாவம் பார்த்து வாழ்க்கை கொடுத்தேன் பாரு... அது தான் நான் பண்ண பெரிய தப்பு’’ என்று கோபப்படுகிறான்.
ராதிகா கேட்ட கேள்வி!
‘’யாரு நீங்க எனக்கு வாழ்க்கை கொடுத்தீங்களா? உங்களால தான் என் வாழ்க்கையே போச்சு’’ என்று சொல்ல ‘’ஆமா நான் தான் உனக்கு வாழ்க்கை கொடுத்தேன்… அன்னைக்கு வீடு ஜப்தியாகும் நிலைமையில் இருந்த... ஞாபகம் இல்லையா மறந்து போச்சா’’ என்று அதிர்ச்சி கொடுக்கிறான். கோபி மற்றும் ராதிகா இடையே வாக்குவாதம் முற்ற கோபி ‘’உங்களால இன்னைக்கு எங்க அம்மா ஜெயில்ல இருக்காங்க’’ என்று ஆவேசப்படுகிறான். ‘’அவங்களுக்கு மட்டும் ஏதாவதாச்சு ஆச்சு உங்க யாரையும் சும்மா விடமாட்டேன்’’ என்று கோபப்படுகிறான். கோபத்தில் கமலாவின் கழுத்தை நெறிக்க ராதிகா ‘’எங்க அம்மாவ கொலை பண்ண பார்க்கிறீர்களா’’ என்று கேட்க ‘’உங்க அம்மாவ தொட்டதும் உனக்கு கோபம் வருதுல… அதே மாதிரி தான்… எனக்கும் கோபம் வருது. எங்க அம்மாவுக்கு ஏதாவது ஆகட்டும் உங்க ரெண்டு பேரையும் வீட்டோட கொளுத்திடுவேன்’’ என்று வார்னிங் கொடுத்து வெளியே வருகிறான்.
ஜெயிலுக்குள் கண்ணீரில் தவிக்கும் ஈஸ்வரி!
ஜெயிலுக்குள் இருக்கும் ஈஸ்வரி ராதிகாவின் அம்மா பழி சுமத்தியது, கோபி வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னது என எல்லாவற்றையும் நினைத்து கண் கலங்கியபடி இருக்கிறாள்.
உடைந்து அழும் கோபி!
கிளவுட் கிச்சனுக்கு வந்த கோபி அப்படியே உடைந்து போய் உட்கார்ந்து இருக்க சதீஷ் அங்கு வந்து ஆறுதல் சொல்ல ‘’என் அம்மாவுக்கு நான் பெரிய துரோகம் பண்ணிட்டேன்.. அவங்க இப்போ ஜெயில்ல இருக்காங்க… வீட்ல கூட தனியா இருந்தது கிடையாது… இப்போ ஜெயில்ல தனியா இருக்காங்க’’ என்று அழுது புலம்புகிறான். ‘’நீ சாப்டியா’’ என்று கேட்கும்போது ‘’அம்மா வேற சாப்பிட்டாங்களா இல்லையான்னு தெரியல, அவங்க சாப்பிட்டதும் மாத்திரை போடணும்’’ என்று தலையில் அடித்துக் கொண்டு அழுகிறான்.
ஈஸ்வரியிடம் நடக்கும் விசாரணை!
மறுபக்கம் இன்ஸ்பெக்டர் ‘’எதுக்கு இப்படி பண்ணீங்க’’ என்று ஈஸ்வரியிடம் கேட்க, ‘’நான் எதுவும் பண்ணல’’ என்று ஈஸ்வரி சொல்ல ‘’உங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே ராதிகாவை பிடிக்காதுதானே’’ என்று போலீஸ் கேட்க ‘’ஆமாம் அவளை எனக்கு பிடிக்காததுக்கு ஆயிரம் காரணம் இருந்தது... ஆனா, அது எல்லாம் உங்களுக்கு நான் எப்படி சொல்லி புரிய வைப்பேன்னு தெரியல’’ என்று அழ ‘’சும்மா அழுது நடிச்சு ஏமாத்தப் பாக்காதீங்க… உண்மையை மட்டும் சொல்லுங்க’’ என்று லத்தியை காட்டி மிரட்டுகின்றனர்.
கோபி, பாக்யா ஈஸ்வரியை எப்போதுதான் வெளியே எடுப்பார்களோ!