Baakiyalakshmi : ''கொன்னுடுவேன்'' என எச்சரித்த கோபி... ஈஸ்வரியைத் தேடும் போலீஸ்!
கோபியின் கோபத்தை தூண்டும்விதமாக கமலா பேசிக்க்கொண்டே போக கொன்னுடுவேன் என எச்சரிக்கிறான் கோபி.
போலீஸுக்குப் போகும் கமலா கோபி மீது புகார் தராமல் ஈஸ்வரி மீது புகார் தருகிறாள்.
பாக்யாவின் வீட்டுக்கு ஈஸ்வரியைக் கைது செய்ய வருகிறது போலீஸ்.
டென்ஷனான கோபி!
கமலா ‘’குடிகார புருஷன், கொலைகார மாமியார் இவங்க கூட எல்லாம் எப்படி என் பொண்ணு நிம்மதியா வாழ முடியும்? அவ வாழ்க்கையே போச்சு’’ என்று சொல்ல கோபி திரும்பத் திரும்ப என் அம்மாவ பத்தி பேசாதீங்க உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை என்று சொல்ல ‘’நான் அப்படித்தான் பேசுவேன்’’ என்று கமலா வீம்பு பிடிக்கிறாள்.
‘’அத்தை வேண்டாம் இதோட நிறுத்திக்கோங்க’’ என்று கோபி திரும்பவும் வார்னிங் கொடுக்க கமலா ‘’நான் அப்படித்தான் பேசுவேன்… என்னையா பண்ணுவ? உன்னால என்ன பண்ண முடியும்’’ என்று கேட்க ‘’வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லுவேன்’’ என்கிறான் கோபி. ‘’இது என் பொண்ணோட வீடு… நான் இங்கதான் இருப்பேன்… என்ன வீட்டை விட்டு வெளியே போக சொல்ல நீ யாரு’’ என்று கேள்வி கேட்கிறாள். ‘’நான் உங்க பொண்ணோட புருஷன்’’ என்று கோபி சொல்ல ‘’நீ என்ன சொன்னாலும் நான் இந்த வீட்லதான் இருப்பேன். உன்னால என்ன பண்ண முடியும்’’ என்று கமலா வாக்குவாதம் செய்கிறாள்.
‘’நானும் ராதிகாவும் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்தோம். என்னைக்கு நீங்க இந்த வீட்டுக்குள்ள கால் எடுத்து வச்சீங்களோ அன்னைக்கு வந்துச்சு பிரச்சனை.. அவள ஏத்திவிட்டு எங்க வாழ்க்கையை கெடுத்துட்டீங்க… நீ எல்லாம் ஒரு அம்மாவா’’ என்று கோபி கேட்க, ‘’நான் கெட்டவளாவே இருந்துட்டு போறேன். ஆனா உங்க அம்மா மாதிரி கொலைகாரி இல்லை’’ என்று சொன்னதும் கோபி உச்சகட்ட டென்ஷன் ஆகி ‘’இன்னொரு வார்த்தை பேசனீங்க கொன்னு போட்ருவேன்’’ என்கிறான்.
‘’நான் சாயங்காலம் வரதுக்குள்ள நீங்க இந்த வீட்ல இருக்க கூடாது. மூட்டை முடிச்சு எல்லாம் கட்டிக்கிட்டு கிளம்பி போயிடணும்’’ என்று சொல்லி கோபி வெளியே கிளம்ப கமலா போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்புகிறாள்.
ஈஸ்வரி மீது போலீசில் கம்ப்ளைன்ட்!
மகளிர் காவல் நிலையம் வந்த கமலா இன்ஸ்பெக்டரை சந்தித்து ‘’ஈஸ்வரி என் பொண்ணை கொல்ல முயற்சி பண்ணி குழந்தையை கொன்னுட்டாங்க’’ என்று கம்ப்ளைன்ட் கொடுத்து ‘’என் பொண்ணோட உயிரை நீங்க தான் காப்பாத்தணும்’’ என்று அழுது புலம்புகிறாள். பிறகு போலீஸ் ‘’நாங்க பார்த்துக்கிறோம் நீங்க கிளம்புங்க’’ என்று அனுப்பி வைக்கின்றனர்.
வீட்டுக்கு வந்த போலீஸ்!
பாக்யா வீட்டில் எழில் சாமி கும்பிட்டு விட்டு வாய்ப்புக்காக கதை சொல்ல கிளம்ப எதிரே போலீஸ் வந்து நின்று அதிர்ச்சி கொடுக்கின்றனர். ஈஸ்வரி குறித்து விசாரிக்க எல்லோரும் பதறிப் போக ஈஸ்வரி மேல கம்ப்ளைன்ட் வந்திருப்பதாக சொல்லி வீடு புகுந்து அவரை தேடுகின்றனர். ஈஸ்வரி கும்பகோணம் சென்ற விஷயம் அறியும் போலீஸ் கும்பகோணம் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்து அவங்கள கைது பண்ணி சென்னைக்கு அழைத்து வரச்சொல்லி ஆர்டர் போட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ‘’இதை அவங்க மட்டும்தான் பண்ணாங்களா… இல்ல நீங்களும் கூட்டா’’ என்று கேட்டு ஷாக் கொடுக்கிறார்.
ஈஸ்வரியை கைது செய்யப்போகும் போலீஸை எப்படி சமாளிக்கப்போகிறாள் பாக்யா?!