பாக்கியலட்சுமி : கோபியை வெறுப்பேற்றும் கமலா… ராதிகா எடுக்கப்போகும் முடிவென்ன?!
கோபி விஷயத்தில் ராதிகா ''என்னம்மா பண்ணட்டும்'' என கமலாவிடம் வந்து நிற்க, கமலா ஒரு திட்டம் போடுகிறாள்.
கேஸ் சிலிண்டர் லீக், பால் பொங்கும் விஷயத்தில் ஜெனிக்கும், அமிர்தாவுக்கும் உரசல் வெடிக்கிறது.
கமலா கோபியை குடிகாரன், அம்மா கொலைகாரி என்றெல்லாம் வெறுப்பேற்ற மீண்டும் அறையப்போகிறான் கோபி!
கலங்கும் ராதிகா, கமலாவின் முடிவு!
கமலா கோபி அடிக்க வந்ததை நினைத்து கண்கலங்க ராதிகா அங்கு வர கமலா ‘’என்னையே அடிக்க கை ஓங்குறாரு… நீயா இருந்து இருந்தா அடிச்சிருப்பாரு போல… உன் வாழ்க்கையை நானே கெடுத்து விட்டுட்டேன்’’ என்று கண் கலங்குகிறாள். ராதிகா ‘’ஆரம்பித்துல என் மேலயும் மயூ மேலேயும் பாசமா இருந்த கோபி இப்போ எங்க போனார்னு தெரியல. மத்தவங்கள பழிவாங்கறதா நினைச்சு அவர் என்னதான் பழி வாங்கிட்டு இருக்காரு. என் வாழ்க்கையே போச்சு… இப்போ நான் என்ன பண்ணட்டும் சொல்லுமா’’ என்று கேட்க கமலா ‘’உன் வாழ்க்கையை சரி பண்ண வேண்டியது என்னுடைய பொறுப்பு. எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும்’’ என்று மனசுக்குள் ஏதோ ஒன்றை முடிவு செய்கிறாள்.
ஜெனி, அமிர்தா மோதல்!
பாக்யாவின் வீட்டில் திடீரென கேஸ் ஸ்மெல் வர அமிர்தா ஓடி வந்து பார்க்க பால் பொங்கி கேஸ் ஆஃப் ஆகி லீக் ஆகி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். யாரு கேஸ் ஆன் பண்ணி விட்டது என்று யோசித்துக் கொண்டிருக்க செல்வி அங்கு வர அக்கா நீங்க தான் பால் வச்சிட்டு ஆன் பண்ணி விட்டுட்டு போனீங்களா என்று கேட்க நான் எதுவும் பண்ணல, நான் மார்க்கெட் போயிட்டு இப்பதான் வரேன் என்று சொல்கிறாள். பிறகு ஜெனி அங்கு வர ‘’நான் தான் பால் வச்சிட்டு போனேன் பால் பொங்கிடுச்சா’’ என்று கேட்க அமிர்தா ‘’பால் பொங்குறதெல்லாம் பிரச்சனை இல்லை.. போகும்போது ஆஃப் பண்ணிட்டு போயிருக்கலாம்ல’’ என்று சொல்ல ஜெனி ‘’குழந்தை அழுதா அதனாலதான் போயிட்டேன்’’ என்று சொல்கிறாள். இப்படியே பேசி பேசி அமிர்தா மற்றும் ஜெனிக்கு வாக்குவாதம் ஏற்படுகிறது. ஜெனி ‘’ஆன்ட்டி வீட்டு வேலையை என்னைத்தான் பாத்துக்க சொல்லி இருக்காங்க’’ என்று சொல்கிறாள். ‘’சாதாரண விஷயம் அதையே உங்களால பார்க்க முடியல’’ என்று அமிர்தா சொல்ல இருவருக்கும் மோதல் உருவாகிறது.
சண்டையைப் பிரித்து விட்ட செழியன், எழில்!
கீழே சத்தம் கேட்டு வரும் எழில், செழியன் ‘’என்னாச்சு என்ன கேஸ் ஸ்மெல் வருது’’ என்று கேட்க ‘’நான் தான் பாலை பொங்க விட்டுட்டேன்… அதுக்குத்தான் இவ்வளவு பிரச்சனை’’ என்று ஜெனி சொல்கிறாள். செழியன் அமிர்தா தரப்பிலிருந்து பேச எழில் ஜெனி தரப்பிலிருந்து பேசி இருவரையும் மேலே அழைத்துச் சென்று பிரச்சனையை தீர்க்கின்றனர்.
சந்தோஷத்தில் ஈஸ்வரி!
தோழியை பார்த்த ஈஸ்வரி அவருடன் எடுத்த போட்டோக்களை பார்த்து இனியாவிடம் இன்னும் நிறைய போட்டோ எடுத்திருக்கலாம் என்று பேசுகிறாள். இனியா சின்ன வயசுல நடந்த விஷயங்கள் பற்றி சொல்லுங்க என்று கேட்க ஒரு தீபாவளியின் போது நானும் சாவித்திரியும் ஒரே மாதிரி துணி எடுத்து ஒரே மாதிரி அலங்காரம் பண்ணிக்கிட்டு ஊரை சுற்றி வந்து போட்டோ எடுத்துக்கிட்டோம் என்று அந்த நினைவுகளை பகிர்கிறாள்.
மீண்டும் கை ஓங்கிய கோபி!
வீட்டுக்கு வரும் கோபி கிச்சன் சம்பந்தமான ஒரு டாக்குமென்ட்டைத் தேட கமலாவிடம் சென்று ‘’டிவி பக்கத்துல ஒரு பச்சை கலர் ஃபைல் வெச்சிருந்தேன் பார்த்தீங்களா’’ என்று கேட்க அவள் அமைதியாகவே இருக்க கோபி மற்ற இடங்களில் தேடி விட்டு மீண்டும் வந்து கேட்க கமலா அப்போதும் அமைதியாகவே இருக்கிறாள்.
பிறகு ‘’ராதிகா எங்க’’ என்று கேட்க வெளியில ‘’போய் இருக்கா’’ என்று சொல்ல கோபி ‘’அவளுக்கு உடம்பு சரியில்லை… எதுக்கு வெளியே அனுப்பனீங்க’’ என்று கேட்க ‘’அவ உங்க பொண்டாட்டினு இப்பதான் உங்களுக்கு ஞாபகம் வருதா’’ என்று கமலா மீண்டும் கோபியிடம் வாக்குவாதம் செய்யத் தொடங்குகிறாள். ‘’இந்த வீட்ல நிம்மதியே இல்ல… மூச்சு முட்டுதுனு சொல்லிட்டு வெளியே போய் இருக்கா’’ என்று சொல்ல கோபி ராதிகாவுக்கு போன் போடுகிறான்.
‘’இப்ப எதுக்கு அவளுக்கு போன் போடுறீங்க உடனே இங்க வர சொல்ல போறீங்களா? ஏன் அவ நிம்மதியா இருக்க கூடாதா? அவ வாழ்க்கையே நாசமா போச்சு தள்ளாடிட்டு வர ஒரு குடிகார புருஷன், குழந்தையை கொன்ன கொலைகாரி மாமியார்’’ என்று பேச கோபி மீண்டும் அடிக்க கை ஓங்குகிறான்.
கோபி - ராதிகா பிரியப்போகிறார்களா?!