Baakiyalakshmi : கமலாவுக்கு காத்திருக்கும் ஆப்பு... மயூவால் பாக்யாவுக்கு தெரியவந்த உண்மை!
கோர்ட்டில் இருந்து நடந்து வரும் பாக்கியாவை நிற்க வைத்து அக்கம் பக்கத்தினர் ஒவ்வொருவராகக் கேள்வி கேட்க ''அத்தை கூடிய சீக்கிரம் வெளியே வந்திடுவாங்க'' என்று சொல்லியபடி நடந்து வருகிறாள் பாக்கியா. ராதிகா வீட்டை கடந்து வரும்போது ரோட்டில் மயூ நின்று கொண்டிருப்பதை பார்க்கிறாள். ''ஏன் மயூ வெளியில் நிக்கிற'' என்று கேட்க ''அம்மா வீட்ல இல்ல... ஸ்கூல்ல இருந்து சீக்கிரமா அனுப்பிட்டாங்க... சாவியும் இல்ல... போனும் உள்ள இருக்கு... அதனால வெயிட் பண்ணிட்டு இருக்கேன்'' என்று மயூ சொல்ல '''சரி பார்த்து பத்திரம்'' எனச்சொல்லிவிட்டு பாக்கியா அங்கிருந்து நகர்கிறாள்.
திடீரென இரண்டு ஆண்கள் மயூவையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனிக்கும் பாக்யா வீட்டுக்கு கூப்பிட மயூ ''வேண்டாம் ஆன்ட்டி... நான் பார்க் போறேன்... அங்க போய் ஹோம் ஒர்க் செய்யப் போறேன்... அம்மா வந்ததும் அங்கு வந்து கூட்டிப்பாங்க'' என்று சொல்லி பக்கத்து வீட்டு பெண்மணியிடம் விஷயத்தை சொல்லி கிளம்பிச் செல்கிறாள்.
மயூவை தேடி வந்த பாக்கியா!
அடுத்ததாக வீட்டுக்கு சென்ற பாக்கியா கையில் ஸ்நாக்ஸ் எடுத்துக் கொண்டு பார்க்கிற்கு மயூவை தேடி வருகிறாள். ஸ்னாக்ஸை கொடுக்க ''மயூ வேண்டாம்'' என்று சொல்ல ''ஏன் ஆன்ட்டி கொடுத்தா சாப்பிட மாட்டியா'' என்று கேட்டதும் வாங்கிக் கொள்கிறாள். பாக்கியா டல்லாக இருப்பதை கவனித்த மயூ ''ஏன் ஆன்ட்டி டல்லா இருக்கீங்க'' என்று கேட்க ''அதெல்லாம் ஒன்னும் இல்லை'' என்று சொல்கிறாள். ''எனக்குத் தெரியும் பாட்டி பத்தி நினைச்சுத்தானே கவலைப்படுறீங்க'' என்று கேட்க பாக்யா கண்ணீர் விடுகிறாள். ''உனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியுமா, தெரியாதா'' என்று கேட்க ''எனக்கு தெரியல... ஆனா பாட்டி அப்படி பண்ணி இருக்க மாட்டாங்கன்னு மட்டும் எனக்கு தெரியும்'' என்று சொல்கிறாள்.
பிறகு மயூ ''ஆன்ட்டி நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்... பாட்டி அம்மாவை தள்ளி விடல... ஃபிளவர் வாஸ் தடுக்கித்தான் அம்மா கீழ விழுந்தாங்க... நான் அப்போ அங்கதான் இருந்தேன்.. பாட்டி அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணத்தான் வந்தாங்க'' என்று சொல்ல பாக்கியா அதைக் கேட்டு என்ன மயூ சொல்ற என்று திருப்பி திருப்பி கேட்க ''ஆமா ஆன்ட்டி இதுதான் நடந்துச்சு'' என்று சொல்கிறாள்.
அவமானப்படுத்திய கமலா!
பாக்யா மற்றும் மயூ என இருவரும் பேசிக்கொண்டிருக்க அங்கே ராதிகாவும் கமலாவும் வருகின்றனர். ''ஏன் சீக்கிரம் வந்தா வீட்டுக்கு வெளியே வெயிட் பண்ண மாட்டியா... எதுக்கு இங்க வந்து இருக்க'' என்று கமலா கேள்வி கேட்கிறாள். ''ஆமா நீ எதுக்கு இங்க வந்த'' என்று பாக்கியாவை பார்த்து கேள்வி கேட்க ''ஆன்ட்டி நான் தனியா இருக்கேன்னுதான் இங்க வந்தாங்க'' என்று சொல்கிறாள் மயூ. ''தனியா கூட இருக்கலாம் ஆனா இவ கூடவோ இவ குடும்பத்து ஆளுங்க கூடவோ இருக்கக்கூடாது'' என்று சொல்கிறாள் கமலா.
''இவங்க நமக்கு துரோகம் பண்ணவங்க உனக்கு வர இருந்த தம்பி, தங்கச்சி பாப்பாவ கொன்ன குடும்பம்'' என்றும் சொல்கிறாள். ''நீ என்ன திட்டத்தோட இங்க வந்த... மயூவ கடத்திட்டு போகலாம்னு வந்தியா'' என்று பாக்யாவை பார்த்து கேள்வி கேட்டு அவமானப்படுத்துகிறாள் கமலா. பிறகு கையில என்னது என்று கேட்க மயூ ஸ்நாக்ஸ் என்று சொல்ல ''இவ கொடுத்தாளா? கீழே போடு'' என்று தட்டி விடுகிறாள். மேலும் மயூவை கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி செல்கின்றனர்.
வழக்கறிஞரைப் பார்க்க வந்த பாக்கியா!
பாக்கியா பழனிச்சாமியுடன் சேர்ந்து வழக்கறிஞரை சந்தித்து மயூ சொன்ன விஷயத்தை சொல்ல அவர் ''ஈஸ்வரி அம்மாவை தப்பா புரிஞ்சிட்டு கேஸ் கொடுத்து இருக்காங்களா... இல்ல அவங்க மேல பழி போடணும்னு கேஸ் கொடுத்து இருக்காங்களான்னு தெரியலையே'' என்று சொல்ல பாக்கியா ''ராதிகா கண்டிப்பா பழி போடணும்னு அப்படி பண்ணி இருக்க மாட்டாங்க.. தப்பா புரிஞ்சுகிட்டு தான் கேஸ் கொடுத்து இருப்பாங்க'' என்று சொல்கிறாள்.
பிறகு வழக்கறிஞர் ''மயூ நேரடியா வந்து சாட்சி சொன்னா அடுத்த நிமிஷம் ஈஸ்வரி அம்மாவை விடுதலை பண்ணிடுவாங்க'' என்று சொல்ல பாக்கியா ''குழந்தையை எப்படி கோர்ட்டுக்கு கூட்டிட்டு வர முடியும்? அவள பேச வச்சு வீடியோ எடுத்து அதை கொண்டு போய் கொடுக்கலாமா'' என்று கேட்க பழனிச்சாமி ''அதெல்லாம் ஆதாரமா எடுத்துக்க மாட்டாங்க'' என்று சொல்கிறான். வழக்கறிஞரும் ''சார் சொல்றதுதான் சரி உங்க மாமியார் வெளியில வரணும்னா அதுக்கு ஒரே வழி தான் இருக்கு... மயூ தான் வந்து சாட்சி சொல்லணும்'' என்று சொல்கிறார்.
பாக்யா பழனிச்சாமியிடம் ''சார் குழந்தையை எப்படி கூட்டிட்டு வர முடியும்? ராதிகா அனுப்பி வைப்பாங்களா'' என்று கேள்வி கேட்க ''மேடம் தெரியாம தான் கூட்டிட்டு வரணும்'' என்று சொல்கிறான்.
ராமமூர்த்தியின் பகீர் முடிவு!
ராமமூர்த்தி ''எல்லாரும் ஈஸ்வரிக்கு எதிரா சாட்சி சொல்றாங்க.. எனக்கு அவ வெளியே வருவான்னு நம்பிக்கை இல்லை.. அவள வெளியே கொண்டு வர எந்த ஆதாரமும் இல்லை.. அதனால சாட்சிக்காரன் கால்ல விழுறதை விட சண்டைக்காரன் கால்ல விழலாம்னு முடிவு பண்ணிட்டேன்'' என்று சொல்கிறார். ''ஆமா ராதிகாவை சந்திச்சு கால்ல விழுந்து ஈஸ்வரி மேல கொடுத்த கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்கச் சொல்லப் போறேன்'' என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
பாக்கியா ''நீங்க யார் கால்லயும் விழ வேணாம்... கண்டிப்பா அத்தை வெளிய வந்துருவாங்க... ஏதாவது நடக்கும்'' என்று சொல்கிறாள். பிறகு எழில், செழியன் ''எப்படிமா பாட்டியை வெளியே கொண்டு வர முடியும்'' என்று கேட்க ''எனக்கு தெரியல... ஆனா கண்டிப்பா நாளைக்கு கோர்ட்ல ஏதாவது மேஜிக் நடக்கும்.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு'' என்று சொல்கிறாள்.
மயூதானே அந்த மேஜிக்!