Baakiyalakshmi : குற்ற உணர்ச்சியில் தவிக்கும் கோபி... கமலா மீது கோபத்தை கொட்டிய ராதிகா!
வாங்கி கட்டிக் கொண்ட கமலா!
ராதிகா தலையில் கை வைத்த படி சோஃபாவில் உட்கார்ந்து இருக்க கமலா அவளிடம் ராதிகா என்று பேசப்போக ''பேசாத மா'' என்று கோபப்படுகிறாள். உடனே கமலா மயூவை பிடித்து திட்டுகிறாள். ''எதுக்கு நீ கோர்ட்டுக்கு வந்த... எங்ககிட்ட சொல்லாம ஏன் வந்த'' என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள். ''அம்மாவுக்கும் பாட்டிக்கும் எதிரா நீ வந்து சாட்சி சொல்லுவியா... அந்த பாக்கியா உன்னை அப்படி சொல்ல சொன்னாளா'' என்று கேள்வி கேட்க மயூ ''ஆன்ட்டி எதுவும் சொல்லல... நான் உண்மையைத்தான் சொன்னேன்'' என்று அதிர்ச்சி கொடுக்கிறாள்.
ராதிகாவின் பதில்!
''அம்மா பொண்ணுன்னு எல்லாரும் எனக்கு எதிராக இருந்தா நான் என்னதான் பண்றது'' என்று கோபப்பட்டு ரூமுக்கு எழுந்து சென்று விடுகிறாள் கமலா. ''எல்லாம் உன்னால வந்தது'' என்று கமலா மயூவை திட்ட மயூ கண் கலங்குகிறாள். கோபி குடித்தபடி தன்னுடைய நண்பனிடம் ''அம்மாவுக்கு நான் பெரிய துரோகத்தை பண்ணிட்டேன்... யார் என்ன சொன்னாலும் நான் என் அம்மாவை நம்பி இருக்கணும்... ஆனா நானே அவங்கள கொலைகாரினு சொல்லிட்டேன்... வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டேன். என் அம்மாவுக்கு ஆதரவா பாக்கியா வந்து என்கிட்ட சண்டை போட்டா... என் கண்ணை பாத்து உங்க அம்மா மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையான்னு கேட்டா... அவ எங்க அம்மா மேல வச்ச நம்பிக்கையை கூட நான் வைக்கல'' என்று அழுது புலம்புகிறான். ''என் அப்பா சொன்னா மாதிரி நான் பொறக்காமலேயே இருந்திருக்கணும்'' என்று சலம்புகிறான்.
உண்மையைச் சொன்ன மயூ!
கமலா மீண்டும் மயூவை பிடித்து திட்ட ரூமுக்கு வந்து ராதிகாவிடம் மன்னிப்பு கேட்கிறாள். ராதிகா ''ஏன் என் கிட்ட சொல்லல, நீ எப்படி கோர்ட்டுக்கு வந்த பாக்கியா... உன்னை வந்து கூட்டிட்டு வந்தாங்களா... என்ன நடந்துச்சு சொல்லு'' என்று கேட்க மயூ ''ஸ்கூல் சீக்கிரமாக விட்டதால வெளியில் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்... பாக்கியா வீட்டுக்கு கூப்பிட்டாங்க... ஆனா நான் பார்க்குக்கு போறேன்னு அங்க போயிட்டேன். பாக்கியா ஆன்ட்டி அங்க வந்து என்கிட்ட பேசிட்டு இருந்தாங்க... ஈஸ்வரி பாட்டியோட பேச்சு வந்துச்சு... அவங்க அழுதாங்க எனக்கு பாவமா இருந்துச்சு... அதனால உண்மையை சொல்லிட்டேன்'' என்று சொல்கிறாள். கமலா இடையே இடையே புகுந்து பழியை பாக்கியா மீது தூக்கி போட முயற்சி செய்ய ராதிகா கோபப்படுகிறாள்.
''உண்மையாவே ஈஸ்வரி பாட்டி உங்கள பிடிச்சு தள்ளி விடல... அத நான் பார்த்தேன்'' என்று மயூ ராதிகாவிடம் சொல்கிறாள். ''அத நீ என்கிட்ட சொல்லி இருக்கலாமே மயூ'' என்று கேட்க ''உங்ககிட்ட சொல்ல பயமா இருந்துச்சும்மா'' என்று சொல்கிறாள். ''அம்மாவும் தானே அழுதுட்டு இருந்தேன்... என்னை உனக்கு பார்க்க பாவமா தெரியலையா... பாக்யா அழுததுதான் பாவமா இருந்துச்சா...'' என்று கேட்கிறாள். மயூ சாரி சொல்ல ராதிகா ''யாரும் எனக்கு ஃபேவர் பண்ணாதீங்க'' என்று கோபப்பட மயூ எழுந்து வர அவளைக் கட்டிப்பிடித்துக் கொள்கிறாள்.
தடபுடல் விருந்து சமைத்த பாக்கியா!
பாக்கியா வீட்டில் ஈஸ்வரி வெளியே வந்ததால் தடபுடலான விருந்தை ஏற்பாடு செய்து பாக்கியா எல்லோருக்கும் பரிமாற கோபி பாக்யா வீட்டின் வாசலில் வந்து நிற்கிறான்.
கோபிய வெச்சு அடுத்த டிராமா ஆரம்பம்!