வீட்டை விட்டு வெளியே போக சொன்ன ராதிகா… அவமானப்பட்ட கோபி! ‘பாக்கியலட்சுமி’ ஹைலைட்ஸ்
கெஞ்சும் கோபி!
‘’எங்க போறீங்க’’ என்று கோபி கேட்க ராதிகா பதில் சொல்லாத நிலையில் கோபி மயூவிடம் ‘’நீயாவது சொல்லுமா’’ என்று கேட்கிறான். ‘’ஹாஸ்பிட்டலுக்கு செக்கப் போறோம்’’ என்று மயூ சொல்ல கோபி ‘’ஆமால டாக்டர் இன்னைக்கு வர சொல்லி இருந்தாரு. நான் மறந்து போயிட்டேன்… ஒரு ஃபைவ் மினிட்ஸ் டைம் குடு ரெடி ஆகிட்டு வந்துடுறேன்… நம்ம கார்லயே போகலாம்’’ என்று சொல்ல கமலா ‘’எதுக்கு மாப்ள எங்களுக்காக உங்க டைம் வேஸ்ட் பண்றீங்க.. நீங்க உங்க அம்மாவ பத்தி யோசிச்சிட்டு இருங்க’’ என்று வெறுப்பேற்றுகிறாள். கோபி ‘’அத்தை நீங்க வேற ஏன்? கொஞ்சம் அமைதியா இருங்க’’ என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க கேப் வந்ததும் ராதிகா வாங்க போகலாம் என்று சொல்கிறாள்.
பிறகு கோபி ‘’சரி மயூவை எதுக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறீங்க?’’ என்று கேள்வி கேட்க கமலா ‘’அவள தனியாவா விட்டுட்டு போக முடியும்’’ என்று திருப்பி கேட்க கோபி ‘’நான் பார்த்துக்கிறேன்’’ என்று சொல்கிறான். கமலா ‘’வேண்டாம் மாப்பிள்ளை… உங்க அம்மா போன் பண்ணா நீங்க அம்போன்னு விட்டுட்டு போயிடுவீங்க… நாங்க கூடவே கூட்டிட்டு போறோம்’’ என்று சொல்லி கிளம்பி செல்கிறார்கள்.
கமலாவுடன் ஏற்பட்ட வாக்குவாதம்!
அதன் பிறகு ஹாஸ்பிட்டல் சென்றவர்கள் மீண்டும் திரும்பி வர கோபி ‘’என்ன சொன்னார்கள்’’ என்று கேள்வி கேட்க ராதிகா ‘’அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை’’ என்று சொல்லிவிட்டு ரூமுக்குள் செல்கிறாள். பிறகு கமலாவிடம் ‘’நீங்களாவது சொல்லுங்க அத்தை… என்ன சொன்னாங்க’’ என்று கேட்க ‘’வேளாவேளைக்கு மாத்திரை சாப்பிட சொன்னாங்க… எதைப் பத்தியும் யோசிக்க வேண்டாம்னு சொன்னாங்க… ஆனா அவளால இந்த வீட்ல அப்படி இருக்க முடியுமா நீங்களே சொல்லுங்க’’ என்று கேட்கிறாள்.
கோபப்பட்ட கோபி!
‘’உங்க அம்மா பண்ண வேலையால அவளால நிம்மதியா சாப்பிட கூட முடியல’’ என்று சொல்ல கோபி ‘’என் அம்மாவ பத்தி பேசாதீங்க’’ என்று சொல்ல கமலா ‘’அப்படித்தான் பேசுவேன். என் பொண்ணு மேல எனக்கு அக்கறை இருக்கு’’ என்கிறாள். ‘’நாங்களா இருக்கவே போனா போகுதுன்னு அமைதியா இருக்கோம். வேற யாராவது இருந்திருந்தா இந்நேரம் உங்க அம்மா ஜெயில்ல ஒன்னு ரெண்டு மூணுனு கம்பி எண்ணி இருப்பாங்க’’ என்று சொல்ல கோபி ‘’எல்லையை மீறி போறீங்க அவ்வளவுதான் மரியாதை’’ என்று கோபப்படுகிறான்.
வீட்டை விட்டு வெளியே போக சொன்ன ராதிகா!
‘’எங்க அம்மா அப்படித்தான் பேசுவாங்க அவங்க ஒன்னும் நடக்காததை பேசலையே.. நடந்தது தானே சொல்றாங்க.. அதெல்லாம் கேட்டுக்கிட்டு இந்த வீட்ல இருக்க முடியுமா இருங்க இல்லனா கிளம்பி உங்க அம்மாவோட போய்கிட்டே இருங்க நாங்க ஒன்னும் உங்கள கட்டாயப்படுத்த மாட்டோம்’’ என்று ஷாக் கொடுக்கிறாள்.
கும்பகோணம் வந்ததும் குணமான ஈஸ்வரி!
பாக்கியா, ஈஸ்வரி, ராமமூர்த்தி ஆகியோர் கும்பகோணம் வந்து சேர்கின்றனர். கும்பகோணம் வந்ததும் ஈஸ்வரி ‘’நாம இப்போ எங்க இருக்கோம்’’ என்று கேள்வி கேட்டு ‘’கோயிலுக்கு பின்னாடி குளக்கரையில் நிறைய வீடுகள் இருக்கும்.. அங்கதான் நாங்க கொஞ்ச நாள் இருந்தோம்’’ எனவும் தனது தோழிகள் பற்றியும் பேசுகிறாள்.
போதையில் பிரச்சனையில் சிக்கிய கோபி!
மீண்டும் அவமானத்தால் பாரில் சரக்கு அடித்துக் கொண்டிருக்கும் கோபி தன்னுடைய நண்பன் செந்திலிடம் வீட்டில் நடந்த விஷயங்களை சொல்லி புலம்புகிறான். ராதிகா வீட்டை விட்டு வெளியே போக சொன்னதையும் நினைத்து வருத்தப்படுகிறான். கோபி சத்தம் போட்டு பேச இதனால் பக்கத்தில் இருப்பவர்கள் கடுப்பாகின்றனர். இதனால் கோபி அவர்களிடம் வாக்குவாதம் செய்ய கடைசியில் கைகலப்பில் முடிகிறது.
அதிர்ச்சியான எழில், செழியன்!
இந்த நேரம் பார்த்து எழில் மற்றும் செழியன் என இருவரும் அந்தப்பக்கமாக வர, கோபி சண்டையிடுவதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். செழியன் கோபியை காருக்குள் ஏற்றி எழிலை பக்கத்தில் உட்கார சொல்ல அவன் முடியாது என மறுக்கிறான்.
கோபியின் போதை சலசலப்பு என்னாகுமோ?!