பாக்கியலட்சுமி : கமலாவை அடிக்க கை ஓங்கிய கோபி... கலவரமாகும் ராதிகா!
கமலாவால் ராதிகாவுக்கும், கோபிக்கும் இடையே உருவான சண்டை பெரிதாகிறது.
கோபி ராதிகாவின் அம்மா கமலாவை அடிக்கப்பாய, கோபியின் சட்டையைப் பிடிக்கிறாள் ராதிகா.
கோபியின் நண்பன், ''எழிலன், செழியன்தான் பார் சண்டையில் இருந்து உன்னை காப்பாத்தி வீட்டுக்கு கூட்டிப்போனாங்க'' எனச் சொல்கிறான்.
தோழியை பார்த்து சந்தோஷப்பட்ட ஈஸ்வரி!
பாக்யா அழைத்து வந்த தனது தோழியை பார்த்ததும் சந்தோஷப்படும் ஈஸ்வரி அவருடன் உட்கார்ந்து கதை பேச சாவித்திரி ‘’உங்க கல்யாணத்துக்கு நான் வந்தேன்.. அப்போ ஈஸ்வரி உங்கள பாத்து சிரிச்சிருக்கா.. ஆனா நீங்க சிரிக்கல அதனால உம்மனா மூஞ்சியா இருப்பாரு போல இவர் கூட எப்படி வாழ்றதுனு புலம்பினா’’ என்று சொல்கிறார். பிறகு ஈஸ்வரி ‘’நீங்க எல்லாம் கொஞ்சம் எழுந்து போங்க… நானும் சாவித்திரியும் தனியா பேசணும்’’ என்று அனுப்பிவிட்டு தோழியோடு பேசுகிறாள்.
டீ போட்ட ஜெனி, தெறித்து ஓடிய குடும்பம்!
அதன் பிறகு செழியன் டீ கேட்க செல்வி வீடு துடைத்து விட்டு போட்டுத் தருவதாக சொல்ல ஜெனி நான் போட்டு தரேன் என்று சொல்லி சர்க்கரையை அளவில்லாமல் அள்ளிப் போட்டு கொண்டு வந்து கொடுக்க செழியன் வாயில் வைக்க முடியாமலும் நல்லா இல்லை என்று சொல்ல முடியாமலும் தவிக்கிறான். இந்த நேரத்தில் எழில் கீழே வர ஜெனி அவனுக்கும் டீ கொடுக்க டீயை குடித்த எழில் ‘’சர்க்கரையை அள்ளி போட்டு இருக்கீங்க.. இது டீ இல்ல பாயாசம் மாதிரி இருக்கு. உங்களுக்கும் சமையலுக்கும் செட்டே ஆகாது’’ என்று சொல்கிறான். ‘’அளவுதானே அதிகமாயிடுச்சு நான் போய் பர்பெக்டா டீ போட்டுக் கொண்டு வரேன்’’ என்று சொல்ல ஆளாளுக்கு ஒரு பக்கம் தெறித்து ஓடுகின்றனர்.
கமலாவை அடிக்க கை ஓங்கிய கோபி
அடுத்ததாக சோஃபாவில் படுத்து தூங்கிய கோபி காலையில் எழுந்து உட்கார ராதிகா ‘’நைட்டு எதுக்கு என் அம்மாவை அப்படி மரியாதை இல்லாம பேசினீங்க’’ என்று சத்தம் போட கோபி ‘’நான் எதுவும் பேசி இருக்க மாட்டேன். உங்க அம்மா தான் ஏதாவது வாயை கிளறி இருப்பாங்க’’ என்று சொல்கிறான். ‘’உங்க அம்மாவை பத்தி பேசினா உங்களுக்கு கோபம் வர மாதிரிதானே எங்க அம்மாவை பத்தி பேசினா எனக்கும் கோபம் வரும்’’ என்று ராதிகா அவேசப்படுகிறாள்.
கமலாவோ கோபியிடம் ‘’உங்கம்மா ஒரு கொலைகாரி… அப்படி இருக்கும் போது நீங்க இவ்வளவு பேசுறீங்க… இன்னும் அவங்க மட்டும் நல்லவங்களா இருந்திருந்தா அவ்வளவுதான் போலையே’’ என்று பேச கோபி ‘’போதும் நிறுத்துங்க… இன்னொரு வார்த்தை என் அம்மாவை பத்தி தப்பா பேசினீங்க அவ்வளவுதான்’’ என்று அடிக்க கை ஓங்க ராதிகா அதிர்ச்சி அடைந்து நிற்கிறாள்.
சட்டையை பிடித்து மன்னிப்பு கேட்க சொன்ன ராதிகா!
ராதிகா ‘’கோபி என்ன பண்ணிட்டு இருக்கீங்க இதெல்லாம் சுயநினைவோடத்தான் பண்றீங்களா’’ என்று சட்டையை பிடித்து கேள்வி கேட்டவள் ‘’என் அம்மா கிட்ட மன்னிப்பு கேளுங்க’’ என்று சொல்ல கோபி ‘’உங்க அம்மா என்ன எல்லாம் பேசுறாங்க… மன்னிப்பு கேட்க முடியாது’’ என்று சொல்கிறான்.
கிச்சனிலும் ஒரே டென்ஷன்!
அதன் பிறகு கிச்சனுக்கு வந்த கோபி அங்கேயும் வேலை பார்ப்பவர்களிடம் டென்ஷனாக பேசிக் கொண்டிருக்கிறான். ‘’உங்களால ஒழுங்கா வேலை பண்ண முடிஞ்சா பண்ணுங்க இல்லனா கிளம்பி போயிட்டே இருங்க’’ என்று கோபப்படுகிறான்.
கோபிக்கு கிடைக்கும் அட்வைஸ்!
இந்த நேரம் பார்த்து கிச்சனுக்கு வரும் கோபியின் நண்பன் ‘’டேய் கோபி எதுக்குடா இப்படி டென்ஷனா இருக்க? கொஞ்சம் அமைதியா இரு வீட்ல இருக்க பிரச்சனையை வேலையில காட்டாத… ஏற்கனவே எல்லாத்தையும் லாஸ் பண்ணிட்டுதான் இப்போ புதுசா ஒரு பிசினஸ் ஆரம்பிச்சிருக்க... திரும்பவும் அதே நிலைமைக்கு போற மாதிரி பண்ணிடாத’’ என்று அட்வைஸ் செய்கிறான்.
உண்மையை உடைத்த நண்பன்!
‘’வீட்ல ஏதாவது பிரச்சனையா.. நேத்து என்ன நடந்துச்சு தெரியுமா?’’ என்று கேட்க கோபி ‘’என்ன நடந்துச்சு’’ என்று திருப்பி கேட்க ‘’பார்ல நீ குடிச்சிட்டு ரகளை பண்ணிட்டு இருந்த.. உன் பசங்கதான் வந்து உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட்டானுங்க’’ என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறான்.
கோபியின் மனம் மாறப்போவதற்கான சிக்னல் ஸ்டார்ட் ஆகிடுச்சு!