‘பாக்கியலட்சுமி’ இன்று : பாக்கியாவை பழிவாங்கிய ராதிகா… இனியாவால் அவமானப்பட்ட பாக்கியா!
கெஞ்சும் இனியா, செழியன்!
செழியன் மற்றும் இனியா இருவரும் ராதிகாவிடம் ‘’வேண்டாம் அம்மாவுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிடும்’’ என்று கெஞ்சுகின்றனர். ஆனால் ராதிகா ‘’உங்க அம்மா இப்போ இங்க வரணும்… எவ்வளவு நேரம் ஆனாலும் அவங்க இங்க வந்தாதான் உங்களை விடுவேன்’’ என்று சொல்கிறாள். செழியனை போன் போடச் சொல்ல அவன் வேண்டாம் என்று சொல்ல ராதிகா ‘’நீ போடலைன்னா என்ன நானே போன் பண்றேன்’’ என்று போனை எடுக்கிறாள். ஆனா, ‘’நான் போன் பண்ணா உங்க அம்மா எடுக்காம கூட போயிடுவாங்க… அதனால உன்னோட போன்ல இருந்து போன் பண்ணு… நான் பேசுறேன்’’ என்று சொல்கிறாள்.
பாக்யாவுக்கு வந்த அதிர்ச்சி தகவல்!
வேறு வழியின்றி செழியன் போன் செய்ய ராதிகா போனில் இனியா பப்புக்கு வந்த விஷயத்தை சொல்லி போலீஸ் கைது செய்ய இருந்த விஷயத்தையும் சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறான். உடனே நீங்க இங்க கிளம்பி வரணும்’’ என்று சொல்ல பாக்கியா பதற்றம் அடைகிறாள்.
போட்டியை விட்டு கிளம்பிச் சென்ற பாக்யா!
உள்ளே ஓடிவந்த பாக்யா ‘’அத்தை இனியாவுக்கு பெரிய பிரச்சனை நான் உடனே போகணும்… என்ன நடந்துச்சு… ராதிகா எப்படி அங்க போனாங்கன்னு தெரியல… ஆனா இப்போ ராதிகாகூட தான் இருக்கா… நான் போயிட்டு வந்துடறேன்… நீங்க பாத்துக்கோங்க’’ என்று சொல்ல ஈஸ்வரி ‘’நானும் வரேன்’’ என்று சொல்ல செல்வி ‘’அக்கா நான் மட்டும் எப்படி’’ என்று கேட்க ‘’உன்னால முடிஞ்ச அளவுக்கு சமாளி’’ என்று சொல்லிவிட்டு நடுவர்களிடம் அவசரமான வேலை என்று சொல்லி கிளம்பி செல்கிறாள்.
குழப்பத்தில் கோபி!
இவர்கள் திடீரென கிளம்பி செல்வதை பார்த்து கோபி என்னாச்சு என்று தெரியாமல் குழப்பமடைகிறான். செல்வி தனியாளாக சமைக்க முடியாமல் அல்லல் படுகிறாள்.
அதிர்ச்சி கொடுத்த ராதிகா!
பாக்யா மற்றும் ஈஸ்வரி என இருவரும் பப்புக்கு வந்து இறங்குகின்றனர். இனியா, ராதிகா காருக்குள் இருப்பதை பார்த்த பாக்கியா ‘’இனியா என்னாச்சு… என்ன பிரச்சனை’’ என்று கேட்டு கதவை திறக்க ராதிகா தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையை தொடங்குகிறாள். ‘’இங்க ஃபர்ஸ்ட் ப்ளோர்ல ஒரு பப் இருக்கு... உங்க பொண்ணு சீனியர்ஸோட சேர்ந்து பப்புக்கு வந்து குடிச்சிட்டு கலாட்டா பண்ணி இருக்கா… பப்பு ஓனர் கம்ப்ளைன்ட் கொடுக்கவே போலீஸ் எல்லாரையும் கைது பண்ணி கூட்டிட்டு போக இருந்தாங்க… அந்த நேரம் பார்த்து நான் இந்த பக்கமா வரவே போலீஸிடம் பேசி எவ்வளவோ கஷ்டப்பட்டு உங்க பொண்ணை காப்பாத்தி இங்க வச்சிருக்கேன். நான் நினைச்சிருந்தா கண்டும் காணாம போய் இருக்கலாம்… அப்படி போயிருந்தா உங்க பொண்ணு இந்நேரம் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்திருப்பா… நாளைக்கு பேப்பர்ல அவளோட போட்டோவோட நியூஸ் வந்திருக்கும்… அப்புறம் குடும்பத்தோட போய் கோர்ட்ல இருந்து தான் அவளை கூட்டிட்டு வந்து இருக்கணும்… உங்க நல்ல நேரமா இல்ல உங்க குடும்பத்தோட நல்ல நேரமான்னு தெரியலை. நான் அவளை காப்பாத்திட்டேன். ஆனா நீங்க என்ன பண்ணீங்க? இதுதான் பாக்கியாவுக்கும் ராதிகாவுக்கும் இருக்கிற வித்தியாசம்’’ என்று சொல்கிறாள்.
இனியாவை திட்டிய ஈஸ்வரி!
இனியாவை காருக்குள் கூட்டி வந்த ஈஸ்வரி ‘’ஏன்டி இப்படி பண்ண’’ என்று போட்டு அடிக்கிறாள். மறுபக்கம் ராதிகா பாக்யாவிடம் ‘’வயசு பொண்ண ஒழுங்கா வளர்க்க கத்துக்கோங்க’’ என்று அட்வைஸ் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்ப பாக்கியா ராதிகா கையைப் பிடித்து நன்றி சொல்கிறாள். ராதிகா எதுவும் பேசாமல் கிளம்பி செல்கிறாள். பிறகு தலையில் அடித்துக் கொண்டு அழுகிறாள் பாக்கியா.
அதைத்தொடர்ந்து பாக்யா காருக்குள் வந்து ஏறியதும் ஈஸ்வரி ‘’அவள நிம்மதியாவே இருக்க விடமாட்டீங்களா? தினம் தினம் உங்களை நினைச்சு அவ கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்கணுமா? இதுக்கு நீ எல்லாரையும் கொன்னுட்டு இருக்கலாம்’’ என்று கோபப்படுகிறாள்.
நொந்து போன பாக்கியா!
இங்கே செல்வி சமையல் சரியாக வராத நிலையில் பாக்யாவுக்கு போன் போட்டு ‘’எங்க இருக்க… எப்ப வருவ?’’ என்று கேட்க ‘’இனியாவோட வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்… நான் வருவேனான்னு தெரியாது’’ என்று சொல்கிறாள். ‘’அப்போ உனக்கு பரிசு வேண்டாமா’’ என்று கேட்க ‘’இனியா யாரும் கொடுக்க முடியாத பரிச கொடுத்துட்டா... இதைவிட வேற என்னவேணும்’’ என நொந்து போய் சொல்கிறாள்!
பாக்கியா போட்டிக்கிப் போவாளா?!