‘பாக்கியலட்சுமி’ இன்று : இனியாவின் பப் பஞ்சாயத்து… கோபிக்கு வந்த ‘கேக்’ பிரச்னை… படபடப்பில் பாக்யா!
பதட்டத்தில் பாக்கியா!
பாக்யா மற்றும் கோபிக்கும் இடையே இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடக்க பாக்கியா 100 சதவீதம் இந்த போட்டியில் ஜெயிப்பேன்னு நம்பிக்கை இருப்பதாக நடுவர்களிடம் சொல்கிறாள். அதேபோல் கோபியும் கண்டிப்பாக நானும் ஜெயிப்பேன் என உறுதியாக சொல்கிறான். இதற்கிடையில் பாக்கியா போனை எடுத்து எடுத்துப் பார்த்து சமைத்துக் கொண்டிருக்க ஈஸ்வரி ‘’அதான் செழியன் இருக்கான்ல… அவன் இனியாவ பார்த்துப்பான்… நீ சமைக்கிறது மட்டும் பாரு’’ என்று சொல்கிறாள்.
என்ஜாய் இனியா, பதறும் பாக்கியா!
பாக்யா ‘’ஒரு நிமிஷம் நான் இனியாவுக்கு போன் பண்ணி பாத்துட்டு வந்துடறேன்’’ என்று சொல்லி தனியாக வந்து போன் செய்ய இனியா போனை எடுக்காமல் இருக்க செழியனுக்கு போன் போடுகிறாள். செழியன் ‘’நான் வெளியில தான்மா இருக்கேன்… இனியாவை கூட்டிட்டு போறேன்’’ என்று சொல்ல ‘’நீ போய் கதவைத் தட்டி இனியாவ கூட்டிட்டு கிளம்பு டைம் ஆகுது’’ என்று சொல்கிறாள்.
செழியன் கதவைத் தட்ட வீட்டுக்குள் இருந்து வந்த ஒரு பெண்ணிடம் இனியா குறித்து விசாரிக்க ‘’வீட்ல யாரும் இல்லை’’ என்று சொல்கிறாள். ‘’நான் இந்த வீட்ல தான் வேலை செய்றேன்… நான் வரும்போது யாரும் இல்ல… வீடு பூட்டி தான் இருந்தது… என் கிட்ட இருக்க சாவிய போட்டு தான் கதவை திறந்து உள்ள வந்தேன்’’ என்று சொல்லி வீட்டை பூட்டிக் கொண்டு கிளம்பி விடுகிறாள்.
உச்சகட்ட டென்ஷனில் கோபி!
கோபி இரண்டு செஃப்களிடம் கேக் நல்லபடியா வந்துறும்ல போட்டியில ஜெயிச்சிடலாமா என்று கேட்க கண்டிப்பா நல்லபடியா வந்துரும் சார் நீங்க கவலைப்படாதீங்க நாம ஜெயிச்சுடலாம் என்று சொல்ல கோபி சந்தோஷப்படுகிறான். செழியன் என்ன செய்வது என தெரியாமல் குழம்பிப் போய் இருக்க அம்மாவுக்கு சொல்லிடலாமா என்று போனை எடுத்து வேண்டாம் பயந்துடுவாங்க என்று முடிவை மாற்றிக் கொள்கிறான்.
அடிதடியில் இறங்கிய இனியா நண்பர்கள்!
‘’சீனியர் சொன்னா கேக்கணும்’’ என்று இனியா நம்பரை கேட்க இனியா ஃப்ரண்ட்ஸ் ‘’தர முடியாது’’ என்று சொல்ல இருவருக்கும் இடையே சண்டை உருவாகிறது. வீட்டிலிருந்தே மாறி மாறி போன் வந்து இருப்பதை பார்த்து பயந்து போய் போன் பேச வெளியே வந்த இனியா இவர்களை பிரித்து விட முயற்சி செய்ய பவுன்சர்ஸ் வந்து சண்டையை பிரிக்கின்றனர்.
போலீஸ் வரை சென்ற பஞ்சாயத்து!
பப் உரிமையாளர் போலீசுக்கு போன் போட்டு ‘’இங்க ஒரே பிரச்சனை நீங்க வாங்க’’ என்று தகவல் கொடுக்க ‘’தெரியாம பண்ணிட்டாங்க விட்டுடுங்க’’ என்று இனியா சொல்ல ‘’கொஞ்சம் விட்டு இருந்தா கண்ணாடி எல்லாம் ஒடச்சிருப்பாங்க… போலீஸ் வரட்டும் அவங்க வந்து என்ன பண்றாங்களோ பண்ணட்டும்’’ என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
கலங்கி நிற்கும் இனியா!
‘நான் இங்க வந்திருக்கவே கூடாது… அம்மா பேச்சை கேட்டுகிட்டு வீட்டிலேயே இருந்திருக்கணும்… நான் பண்ணது தப்புதான்’ என்று அழுகிறாள். மறுபக்கம் செழியன் இனியா போனை எடுக்காததால் ஒரே குழப்பத்தில் இருக்கிறான். அடுத்ததாக கோபி தரப்பு செய்த கேக் கருகி போக என்ன இப்படி ஆயிருச்சு என்று டென்ஷன் ஆகிறான். நடுவர்கள் இன்னும் உங்களுக்கு டைம் இருக்கு வேற ஏதாவது புது டிஷ் பண்ணுங்க என்று கூல் செய்கின்றனர்.
பொய் சொன்ன செழியன்!
மறுபக்கம் பாக்யா தனது டிஷ்ஷை முடித்து ஒரு பவுலில் மாற்றி அதை ஃப்ரிட்ஜில் வைக்க சொல்லி கொடுக்கிறாள். திரும்பவும் போனை எடுத்துப் பார்க்க ஈஸ்வரி திட்ட ‘’இப்ப காலம் கெட்டு கிடக்க அத்தை... நான் போய் போன் பேசிட்டு வந்துடறேன்’’ என்று செழியனுக்கு போன் செய்ய அவன் இனியா வந்துவிட்டதாகவும் ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் சொல்லி சமாளிக்கிறான். ஒரு பக்கம் பொய் சொன்ன செழியன் இன்னொரு பக்கம் கடுமையான போட்டியில் பாக்கியா, பப்பில் கண்ணீருடன் இனியா என பரபரப்பான களத்தில் நிற்கிறது பாக்கியலட்சுமி!
பாக்யா போட்டியை வெல்வாளா, மகள் இனியாவை மீட்பாளா?!