’பாக்கியலட்சுமி’யில் இன்று : பாக்யா - பழனிசாமி திருமணம் செய்வார்களா… ராதிகாவின் கர்ப்பம் என்னாகும்?
பாக்கியா பழனிசாமியிடம் ‘’என் வாழ்க்கையோட பாதி காலையிலிருந்து நைட் வரைக்கும் சமைக்கிறதும், கணக்கே இல்லாம பிளாக் டீ போட்டுக் கொடுக்கிறதும்னு முடிஞ்சு போச்சு. நான் இப்போதான் எனக்கான வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிருக்கேன்.. எனக்கு பிசினஸ்ல நிறைய சாதிக்கணும். என்னை நம்பி என்னுடைய குடும்பம் இருக்கு… என் பசங்க இருக்காங்க வீட்டுக்கு மருமகள்கள் வந்துட்டாங்க… இன்னும் கொஞ்சம் வருஷத்துல இனியாவுக்கும் கல்யாண வயசு வந்துடும்’’ என பேச ஆரம்பிக்கிறாள்.
‘’இந்த நேரத்துல என் வயசுல இருக்கிற ஒருத்தர் கல்யாணம் பத்தி பேசினா அதை நான் ஏத்துக்க முடியுமா? ஏன் சார் என்னால தனியா வாழ முடியாதா?’’ என்று கேள்வி கேட்க பழனிசாமி ‘’ஏன் மேடம்… யாராச்சும் உங்ககிட்ட எதாவது கேட்டாங்களா?’’ என்று கேட்க பாக்யா ‘’இல்ல சார் கேட்டா என்ன செய்றது'’ என்று கேட்கிறாள்.
‘’துணை இல்லாம ஒரு பொண்ணால வாழ முடியாதா? என்னால வாழ முடியுமா முடியாதா’’ என்று அழுத்திக் கேட்க பழனிச்சாமி ‘’முடியும்’’ என்று சொல்கிறான். ‘’அதான் சார் நானும் சொல்றேன்… என்னால வாழ முடியும். எனக்கு முன்னாடி நிறைய சவால்கள் இருக்கு… எனக்கு அந்த சந்தோஷமே போதும் என்னுடைய வாழ்க்கையில புதுசா வேற எதுவும் தேவையில்லை. என் குடும்பம் இருக்காங்க… எனக்கு நல்ல நண்பனா உண்மையான நண்பனா நீங்க இருக்கீங்க… இது போதாதா’’ என்று கேட்கிறாள்.
மேலும் ‘’எப்பவும் எனக்கு நல்ல நண்பனா இருப்பீங்க தானே?’’ என்று கேட்க பழனிசாமி ‘’கண்டிப்பா இருப்பேன்’’ என்று சொல்கிறான். மேலும் அவனுக்குள்ளாக ‘மேடம் அவங்க மனசுல இருந்து பேசுறாங்க… அவங்களுக்கு இப்போதைக்கு நல்ல நண்பனா மட்டும் இருப்போம்’ என முடிவு செய்துகொள்கிறான்.
அடுத்து ராதிகா கோபிக்கு போன் போட்டு ‘’இன்னைக்கு செக்கப் போகணும் நீங்க வருவீங்க தானே’’ என்று கேட்க கோபி ‘’ஆறு மணிக்கு தானே அப்பாயின்மென்ட்… நான் கரெக்டா அஞ்சரை மணிக்கு வீட்ல இருப்பேன்’’ என்று சொல்கிறான். பிறகு ஈஸ்வரி ராதிகாவிடம் ‘’எங்க போற?’’ என்று கேட்க ‘’செக்கப் போறேன்’’ என்று சொல்ல ‘’கோபி வரானா’’ என்று கேட்க ‘’நான் மட்டும் தனியாவா போக முடியும்?’’ என்று ராதிகா திருப்பி கேட்க ‘’அவனுக்கு பிசினஸ் எல்லாம் இருக்குல்ல’’ என்று சொல்கிறார் ஈஸ்வரி.
பிறகு ஈஸ்வரி கிச்சனுக்கு செல்ல கமலா பின்னாடியே சென்று வம்பு இழுக்க ‘’இந்த குழந்தையால கண்டிப்பா கோபிக்கும் ராதிகாவுக்குமே பிரச்சனை வரும்… நான் சொல்றது யாருக்குமே புரியல’’ என்று ஈஸ்வரி சொல்கிறார். ‘’நீ இதை வச்சு ஒரு சண்டை போட நினைச்சா அதுக்கு நான் ரெடியா இல்ல’’ என்று அங்கிருந்து கிளம்புகிறாள் ஈஸ்வரி.
பாக்யா இனியாவிடம் ‘’காலேஜ்ல என்ன நடந்துச்சு’’ என்று கேட்கத்தொடங்க ‘’நீ விமலை எங்கேயாவது மீட் பண்ணியா?’’ என்று கேள்வி கேட்க ‘’உனக்கு யார் சொன்னது?’’ என்று இனியா திருப்பி கேட்க ‘’உங்க அப்பா தான் சொன்னார்’’ என்று சொன்னதும் இனியா ரெஸ்டாரன்ட்டில் நடந்த விஷயத்தையும் பர்த் டே பார்ட்டியில் நடந்த விஷயங்களையும் சொல்கிறாள். பிறகு பாக்கியா ‘’இவ்வளவுதான் நடந்துச்சா? நான் வருத்தப்படுற மாதிரி எதுவும் நடக்கலல’’ என்று கேட்க ‘’நீ கவலைப்படாதம்மா… விமல் எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட், உனக்கு மருமகனா கூட்டிட்டு வர மாட்டேன்’’ என்று சொல்கிறாள்.
அதன் பிறகு ராதிகா ஹாஸ்பிட்டல் கிளம்ப கீழே விழுந்து கிடந்த பூத்தொட்டியின் மீது கால் வைக்க வழுக்கி கீழே விழ ராதிகாவுக்கு வயிற்றில் அடிபடுகிறது. ராதிகா வலியில் துடிக்க ஈஸ்வரி ராதிகா என்னாச்சு என்று பதற கமலா கோபிக்கு போனை போட்டு ராதிகா விழுந்த விஷயத்தை சொல்ல அவன் பதறி அடித்து வீட்டுக்கு ஓடி வருகிறான். பிறகு ராதிகாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கின்றனர். கடவுளே ராதிகாவுக்கு எதுவும் ஆகக்கூடாது அவ வேற வயித்துல புள்ளையோட இருக்கா என்று ஈஸ்வரி பிரார்த்தனை செய்கிறாள்.
பாக்யா - பழனிசாமி சிங்கிள் உமன் உரையாடலில் இருந்து, ராதிகாவின் கர்ப்பம் கலையுமா என்கிற டென்ஷனோடு முடிந்திருக்கிறது இன்றைய எபிசோட்!