Baakiyalakshmi : ஈஸ்வரியை கைது செய்ய வரும் போலீஸ்... கதி கலங்கி நிற்கும் பாக்கியா!
அப்செட்டில் ராதிகா!
ராதிகா யோசனையில் இருக்க மயூ தனக்கு கணக்கு சொல்லிக் கொடுக்க சொல்ல ராதிகா ''இப்போதைக்கு வேற ஹோம் ஒர்க் பாரு... அம்மா கொஞ்ச நேரத்துல சொல்லித் தரேன்'' என்று சொல்லி கொண்டிருக்க உள்ளே வந்த கமலா ராதிகாவை ''ஒரு நிமிஷம் என் கூடவா'' என்று வெளியே அழைத்துச் செல்கிறாள். ''உன் மாமியார் கும்பகோணம் போய் இருக்காங்கலாம்... வந்ததும் அரெஸ்ட் பண்ணிடுவாங்க... இப்பதான் சந்துரு விஷயத்தை சொன்னான்'' என்று சொல்ல ராதிகா ''எனக்கு என்னமோ இதெல்லாம் பெரிய பிரச்சனையாகுமோனு தோணுது'' என்று பயப்படுகிறாள். அதற்கு பிறகு கமலா ''அந்தம்மா ஜெயிலுக்குப் போனாதான் நீ நிம்மதியா இருக்க முடியும்'' என்று சொல்கிறாள்.
பதற்றத்தில் பாக்கியா குடும்பம்!
மறுபக்கம் பாக்யாவின் குடும்பத்தினர் எல்லோரும் பதற்றத்தில் இருக்க செல்வி அந்த ராதிகாவும் அவங்க அம்மாவும் நல்லாவே இருக்க மாட்டாங்க என்று சாபம் விடுகிறாள். ''எழில் தம்பியும் செழியன் தம்பியும் ஏதாவது சொன்னாங்களா'' என்று கேட்க ''அமிர்தா மெசேஜ் போட்டு இருக்கேன்... இன்னும் அவங்க ரிப்ளை பண்ணல.. லாயர் பார்க்க போயிருக்காங்க... கண்டிப்பா ஏதாவது வழி பண்ணிட்டு தான் வருவாங்க... நாம பயப்படற மாதிரி எதுவும் நடக்காது'' என்று ஆறுதல் சொல்கிறாள்.
அதிர்ச்சி கொடுத்த எழில், செழியன்!
இந்த நேரம் பார்த்து எழில், செழியன் வீட்டுக்கு வர ''என்னாச்சு'' என்று எல்லோரும் கேட்க ''இந்த விஷயத்துல எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்றாங்க, முதல்ல ஸ்டேஷன்ல போய் ஆஜராகச் சொல்றாங்க... அதுக்கப்புறம் எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்னு சொல்லிட்டாங்க'' என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எழில் ''பாட்டியை கூட்டிட்டு போய் விசாரிச்சதும், அவங்க எந்த தப்பும் பண்ணலன்னு தெரிஞ்சதும் நம்ம கூடவே அனுப்பி வெச்சிடுவாங்க'' என்று சொல்கிறான்.
வீட்டுக்கு வந்த ஈஸ்வரி!
ஈஸ்வரி வீட்டுக்கு வந்ததும் எல்லாரும் ''எப்படி இருக்கீங்க'' என்று விசாரிக்க யாரும் பதில் சொல்லாமல் நிற்கின்றனர். எழில் டல்லாக இருப்பதை பார்த்து ''இப்ப கதை சொல்ல முடியலன்னா என்னடா இன்னொரு நாள் சொல்லிக்கலாம்'' என்று ஆறுதல் சொல்கிறாள். மேலும் கும்பகோணத்தில் நடந்த விஷயங்களை சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறாள். பின்னர் கிச்சனுக்கு சென்ற பாக்கியா கண்ணீர் விட்டு அழுகிறாள். செல்வி ''பழனிச்சாமி அண்ணா கிட்ட பேசுனியா'' என்று கேட்க ''அவர்கிட்டயும் பேசினேன்... அவரும் முதல்ல ஆஜராகட்டும் அப்புறம் பார்த்துக்கலாம் சொல்றார்'' என்கிறாள்.
செழியனுக்கு வந்த போன் கால்!
அடுத்ததாக இன்ஸ்பெக்டர் செழியனுக்கு போன் போட்டு ''ஈஸ்வரி வந்துட்டாங்களா'' என்று விசாரிக்க தனியாக வந்த செழியன் ''வந்துட்டாங்க... பாட்டியை நாங்களே ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வரோம்... நீங்க இங்க வந்து கூட்டிட்டு போனா அவங்க ரொம்ப பயந்துடுவாங்க'' என்று சொல்லி அனுமதி கேட்க போலீஸ் ''ஏன் தப்பு பண்ணும்போது இதெல்லாம் தெரியலையா'' என்று அனுமதி கொடுக்க மறுக்கிறார். ''அவங்களை எங்கேயும் அனுப்பிடாதீங்க... நாங்க அங்கே வறோம்'' என்று சொல்லி போனை கட் பண்ணி விடுகின்றனர். இதனால் செழியன், எழில் என இருவரும் பதற்றம் அடைகின்றனர்.
அழுகை சத்தத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் கமலா!
ராதிகாவின் அம்மா கமலா வெளியே வந்து ''என்ன இன்னும் போலீசை காணோம்... வீடு அமைதியா இருக்கு'' என்று பார்த்துவிட்டு உள்ளே சென்று ராதிகாவிடம் ''அந்த அம்மா வந்துட்டாங்க போல... ஆனா இன்னும் எதுவும் சத்தமில்லாம வீடு அமைதியா இருக்கு'' என்று சொல்ல ராதிகா பயப்படுகிறாள். இந்த சமயத்தில் சந்துரு போன் போட்டு ''போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து கிளம்பிட்டாங்க எப்ப வேணாலும் அங்கு வந்து கைது பண்ணிடுவாங்க'' என்று சொல்ல அதைக் கேட்ட கமலா சந்தோஷப்படுகிறாள்.
''வெளியில ஏதோ வண்டி சத்தம் கேக்குது... நான் போய் பார்க்குறேன்'' என்று சொல்லி ராதிகாவையும் கூட்டிக்கொண்டு வெளியே வந்து போலீஸ் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க வாக்கிங் போன கோபி வீட்டுக்கு வருவதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
தாயின் கைதை தடுத்து நிறுத்துவானா கோபி?!