குடும்பத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்திய சம்பந்தி… மனோஜை அடித்த முத்து… ‘சிறகடிக்க ஆசை’ ஹைலைட்ஸ்!
சுதா குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே 5 லட்சம் செக்குடன் அண்ணாமலை வீட்டுக்கு வருகிறாள்
முத்து பணம் வேண்டாம் என மறுக்க மனோஜ் இந்த வீட்ல மூத்தவன் நான்தான் என முத்துவிடம் வாக்குவாதம் செய்கிறான்.
பேச்சு முற்ற முத்துவுக்கும், மனோஜுக்கும் கைகலப்பாகிறது.
காட்சி - 1 :செக்குடன் வந்த சுதா, வாயை பிளந்ந விஜயா!
அண்ணாமலை - விஜயாவின் வீட்டுக்கு வந்த ஸ்ருதியின் அம்மா சுதா ‘’மொட்டை மாடியில் ரூம் கட்ட போறதா ஸ்ருதி சொன்னா.. இந்த வீட்டை கட்டும்போது லோனுக்கு என் வீட்டுக்காரர்தானே ஏற்பாடு பண்ணி கொடுத்தாரு… இப்போ சம்பந்திக்கு வேற வேலை இல்ல… வெளியில் கடன் வாங்கி கஷ்டப்படக்கூடாதுனு எங்களால முடிஞ்ச ஒரு சின்ன உதவி… இல்ல இது உதவி கூட இல்லை நம்ம எல்லாரும் ஒரே குடும்பம் தானே’’ என்று சொல்லி 5 லட்ச ரூபாய்க்கு செக் எடுத்துக் கொடுக்க விஜயா வாயை பிளந்து கொண்டு வாங்கப்போக அண்ணாமலை முறைப்பதை பார்த்து ‘’எதுக்கு சம்பந்தி இதெல்லாம்’’ என அப்படியே பேச்சை மாற்றுகிறாள்.
வேட்டு வைத்த முத்து!
முத்து வீட்டுக்கு வந்தவன் ‘’என்ன வீட்டுக்கு விருந்தாளி எல்லாம் வந்திருக்காங்க… கையில என்ன சீட் எல்லாம் வெச்சிட்டு இருக்காங்க’’ என்று கேட்க ‘’ரூம் கட்டுறதுக்காக 5 லட்சம் ரூபாய்க்கு செக்கு கொண்டு வந்திருக்காங்க’’ என்று மனோஜ் சொல்ல ‘’நாம ரூம் கட்ட இவங்க எதுக்கு பணம் கொடுக்கணும்’’ என்று கேட்கிறான் முத்து. ‘’ரவி நீ ஏதாவது உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி பணம் கேட்டியா’’ என்று முத்து கேட்க ‘’நாங்க யாரும் கேட்கல’’ எனச் சொல்கிறான் ரவி.
பிரச்சனையை தொடங்கிய விஜயா!
முத்து சுதாவிடம் ‘’இங்கு யாரும் உங்களோட உதவியை கேட்கல… அப்படி இருக்கும்போது நீங்க எதுக்கு இதை கொண்டு வந்தீங்க?’’ என்று முத்து பேச ஸ்ருதி ‘’என் அம்மா உதவி பண்ணனும்னு நல்ல மனசோட கொண்டு வந்திருக்காங்க… அதை எதுக்கு வேண்டாம்னு சொல்றீங்க’’ என்று கேட்க ‘’உங்க அம்மா கொடுக்கிறதா இருந்தா உனக்கும் ரவிக்கும் தனியா கொடுக்கட்டும். அதை வச்சு நீங்க வீடு வாங்குங்க, வீடு கட்டுங்க என்ன வேணா பண்ணுங்க’’ என்று முத்து சொல்ல விஜயா ‘’அப்போ அவங்கள இந்த வீட்டை விட்டு போக சொல்றியா?’’ என்று பிரச்சினையை தொடங்குகிறாள்.
வார்த்தையை விட்டு வாங்கி கட்டிய மனோஜ்!
உடனே மனோஜ் ‘’வீட்ல இருக்க எங்க எல்லாரையும் வெளியே அனுப்பிட்டு நீயும் உன் பொண்டாட்டியும் மட்டும் இந்த வீட்டை ஆளணும்னு நினைக்கிறியா… ரொம்ப சுயநலவாதிடா நீ.. இந்த வீட்டில அப்பா அம்மாவுக்கு அடுத்ததா பெரியவன் நான்தான். ஆனா எல்லாரும் நீ சொல்றது தான் கேட்கணும்னு நினைக்கிற… நீயே எல்லா முடிவையும் எடுக்குற… நீயும் பொண்டாட்டியும் சேர்ந்து வீட்டை ஆட்டையப் போடப்பார்க்குறீங்களா’’ என்று சொல்ல அண்ணாமலை ‘’அவன் அப்படி எங்கடா சொன்னான் என்று கேட்க’’ ரோகினி அவர் பேசறது எல்லாம் பார்த்தா அப்படித்தான் அங்கிள் தோணுது என்று சொல்ல மனோஜ் திரும்பத் திரும்ப சுயநலவாதி என்று சொல்ல முத்து கோபப்பட்டு யார்றா சுயநலவாதி என்று மனோஜ் கன்னத்தில் கைநீட்டி சரமாரியாக அடிக்கிறான். இதைப் பார்த்து சுதா சந்தோசப்படுகிறாள். ‘’நீ தூக்கிட்டு ஓடுன பணம் மட்டும் இருந்தா அப்பா இப்படி எதுக்கு மத்தவங்களை எதிர்பார்க்கணும்’’ என்று மனோஜை அடிக்கிறான் முத்து.
உடைந்து போன அண்ணாமலை!
பிறகு விஜயா ‘’ஏன்டா இப்படி சம்பந்தி முன்னாடி மானத்தை வாங்குகுற'’ என்று கேட்க அண்ணாமலை ‘’நீங்க ஏன்டா சண்டை போட்டுட்டு இருக்கீங்க’’ என்று கேட்க ‘’அவங்க ஆசையே அதுதான் பா’’ என்று சொல்கிறான் முத்து. பிறகு சுதா ‘’நான் இந்த குடும்பத்துக்காக எது பண்ணனும்னு நினைச்சாலும் அது முத்துக்கு பிடிக்க மாட்டேங்குது.. அது ஏன்னு தெரியல… அவர் எங்களையும் என் பொண்ணையும் இந்த குடும்பத்தில் ஒரு ஆளா நினைக்கல போல’’ என்று சொன்னதும் மீனா ‘’இங்க யாரும் அப்படி பார்க்கல.. ஸ்ருதியை நல்லபடியா தான் வச்சிட்டு இருக்கோம். நான் ஸ்ருதியை என் தங்கச்சியாதான் பார்க்கிறேன்’’ என்று பதிலடி கொடுக்கிறாள்.
அதன் பிறகு சுதா கிளம்பி சென்றதும் அண்ணாமலை ‘’வீட்டுக்கு வந்தவங்க முன்னாடி தயவுசெஞ்சு நீங்க இப்படி அடிச்சுக்காதீங்க… அன்னைக்கி சம்பாதிச்சு இந்த வீட்ட கட்டிட்டேன்… ஆனா இன்னைக்கு சம்பாத்தியம் இல்ல, என் உடம்புல தெம்பும் இல்லை. அதனால ஒரு ரூம் கட்ட முடியல’’ என்று வருத்தப்பட்டு பேசுகிறார்.
ரவி ஸ்ருதி இடையே வாக்குவாதம்!
ரூமில் ரவியிடம் ஸ்ருதி ‘’முத்து ஏன் இப்படி பண்றாரு… என் அம்மா நல்ல மனசோட தானே கொண்டு வந்தாங்க’’ என்று சொல்ல அதற்கு ரவி ‘’முத்து பேசுன விதம்தான் தப்பு… ஆனா, அவன் சொன்ன பாயின்ட் எல்லாமே சரிதான்'’ என்று சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட ரவி ‘’உங்க வீட்டு விஷயத்தை பத்தி நான் எங்க வீட்ல பேசுறனா… அந்த மாதிரி நீ நம்ம வீட்டு விஷயத்தை பத்தி உங்க வீட்ல எது பேசுறதா இருந்தாலும் என்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு பேசு’’ எனச் சொல்கிறான்.
போதையில் புலம்பும் முத்து!
வீட்டைவிட்டு வெளியேபோன முத்து செல்வத்துடன் குடிக்கிறான். ‘’என் அப்பா ஒரு ரூம் கட்ட முடியாம கஷ்டப்படுறாரு… அதை பார்க்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு’’ என்று புலம்புகிறான். பிறகு முத்து போதையில் வீட்டுக்கு வந்து மீனாவிடம் மன்னிப்பு கேட்க ‘’இன்னைக்கு நீங்க குடிச்சிட்டு தான் வருவீங்கன்னு எனக்கு ஏற்கெனவே தெரியும்’’ என்று பேசிக் கொண்டிருக்க அண்ணாமலை முத்து போதையில் வந்திருப்பதை பார்த்து விடுகிறார்.
குடித்துவிட்டு வந்திருக்கும் முத்துவிடம் அண்ணாமலை சொல்லப்போவது என்ன?!