ரூம் பிரச்சனைய முடித்துவைக்கப்போகும் முத்துவின் புது ஐடியா என்ன? ‘சிறகடிக்க ஆசை’ ஹைலைட்ஸ்!
அழுது புலம்பிய முத்து!
போதையில் வீட்டுக்கு வந்த முத்து மீனாவிடம் ‘’நீதான் என்ன சரியா புரிஞ்சு வச்சிருக்க… என் செல்ல மீனு’’ என நெருங்கி வரும் போது தடுமாற அண்ணாமலை ‘’பார்த்துடா’’ என்று சொல்கிறார். அதன்பிறகு முத்து ‘’என்னை மன்னிச்சிடுப்பா… மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு… அதனாலதான் குடிச்சிட்டு வந்தேன்’’ என்று மன்னிப்பு கேட்கிறான். முத்து புலம்பலை கேட்டு மொத்த குடும்பமும் ஒன்றாக கூடி விடுகின்றனர்.
நானாடா வீட்டை ஆள ஆசைப்படுறேன்?
முத்து மனோஜிடம் புலம்பிய படி ‘’நானாடா இந்த வீட்டை ஆள ஆசைப்படுறேன்? என்னை பாத்து எப்படிடா அப்படி சொன்ன? வீட்டை ஆள ஆசைப்படுறவன் தான் மொட்டை மாடியிலயும் நடு ஹாலிலும் படுத்து தூங்குவானாடா? நான் இந்த வீட்ல இருக்கிறது என் அப்பாவுக்காக மட்டும்தான். இது வீடு இல்ல என் அப்பா இருக்கிற கோயில். சாமி இருக்கிற வரைக்கும்தான் அந்த கோயிலுக்கு மரியாதை… அப்புறம் அது வெறும் கட்டடம்தான். என் அப்பா இருக்கிற வரைக்கும் நான் இங்கதான் இருப்பேன். அவர் இல்லன்னா நான் இந்த வீட்டு பக்கம் கூட வரமாட்டேன். அவர் என்னை ரோட்ல போய் படுக்க சொன்னா கூட படுப்பேன்’’ என்று சொல்கிறான்.
மீண்டும் அடிக்க பாய்ந்த முத்து!
‘’படிச்ச முட்டாள்’’ என மனோஜை மீண்டும் அடிக்க பாய்ந்த முத்துவை எல்லோரும் தடுத்து நிறுத்த ரவியை பார்த்து ‘’நீ சொல்லுடா… நானாடா இந்த வீட்டுக்கு ஆசைப்படுறேன்’’ என்று அழுகிறான். ‘’என்னைக் கூட்டிட்டு போய் பாட்டி வீட்டுல விட்டுட்டாங்க. யாருமே இல்லாம தனியா கிடந்த எனக்கு வீடு வாசல் எல்லாம் தேவையில்ல… என் அப்பா ஒருத்தர் போதும்’’ என கலங்குகிறான்
கண்கலங்கிய அண்ணாமலை!
எல்லோரும் கலைந்து போன பிறகு முத்து மீண்டும் மீனாவிடம் சாப்பிடாமல் கண் கலங்கியபடி பேச அண்ணாமலை ‘’முத்து மனசுல எவ்ளோ கஷ்டம் இருந்திருந்தா இப்படி பேசுவான்’’ என்று கண்கலங்க விஜயா ‘’அவனே போதையில புலம்பிக்கிட்டு இருக்கான்… போய் படுத்து தூங்குங்க’’ என்று திட்டுகிறாள்.
பக்தி மயமான முத்து!
மறுநாள் காலையில் சீக்கிரமாக எழுந்த முத்து நெத்தியில் பட்டையை போட்டு பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருக்க மொத்த குடும்பமும் காலையிலேயே ‘’யார் பூஜை பண்ணிக்கிட்டு இருக்கா’’ என்று பார்க்க சாமி பாடலை பாடி முத்து பூஜை செய்கிறான். இதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். பிறகு முத்து ‘’எங்க எல்லாரையும் கஷ்டப்பட்டு ஆளுக்குனப்பா நீ… இந்த ரெண்டு பேர் கேட்டதெல்லாம் படிக்க வச்ச… எல்லாருக்கும் என்ன தேவையோ அதை பார்த்து பார்த்து செஞ்ச… ஆனா இன்னைக்கு நீ நினைச்ச ஒரு ரூம் கட்ட முடியலன்னு நினைச்சி ரொம்ப கஷ்டமா இருக்குப்பா’’ எனப் புலம்புகிறான்.
வீட்டை காலி பண்ணப் போறியா?
‘’இனிமே நீ ரூம் பிரச்சனையை நினைச்சு கவலைப்படாதப்பா’’ என்று முத்து தன் அப்பா அண்ணாமலையிடம் சொல்ல மனோஜ் ‘’ஏன் நீயும் உன் பொண்டாட்டியும் வீட்டை விட்டு வெளியே போக போறீங்களா’’ என்று கேட்கிறான்.
முத்துவின் திட்டம் என்ன என்பது நாளைய எபிசோடில்!